கணபதி என்ற சொல்லுக்கு அர்த்தம் . .
Posted on September 10, 2011 by muthukumar
ஈசன்:
கணேச சஹஸ்ர நாமமும், முத்கல புராணமும் அந்தப் பரம் பொருளான ஈசனைப்
படைத்தவனே கணபதி என்று சொல் லுகின்றன. கணேசனே, ஈசனே கணபதி என்னும் பொருள்பட
சம்பு என்று கணபதி குறிப்பிடப்படுகின்றார். ஈசனின் வாக் அம்சமான மந்திர ரூபமே கணபதி என்றும் கூறுவர்.
மூலாதாரம்: நம் உடலில் உள்ள சக்கரங்களுக்குள் மூலா
தாரச்
சக்கரத்தின் அதிபதி பிள் ளையார் தான். மூலாதாரம் பூமி வடிவு. மண்
தத்துவம். பிள்ளையா ரையும் நாம் களிமண்ணால்தா னே பிடித்து வைக்கின்றோம். ஆக
வே பூமியைக் குறிக்கும் மூலா தாரச் சக்கரத்தின் அதிபதியும் பிள் ளையாரே
ஆவார். இந்தப் பிள்ளை யாரின் பீஜ மந்திரத்தை உச்சரித்து
மூலாதாரத்திலிருந்து சக்தியை எழுப்பி மெல்ல மெல்ல மேலே வருவதற்குப்
பிள்ளையார் உதவு கின்றார்.
வேதங்களுக்கெல்லாம் முதல்வ ன் விநாயகனே. நான்கு வேதங்களும் புகழும் கடவுள் விநாய கனே. வேழமுகனே வேதம் என்றும், கணபதி எனவும்,
விக்னராஜன்
எனவும் அழைக்கப் படுகின்றா ன். ப்ரும்மண ஸ்பதி எனவும் சொல்லப்படுகி ன்றது.
உபநிஷத்துக்க ளில் கணபதி உபாசனா முறை இருக்கி ன்றது என்று ஆன்றோர்
சொல்லுகின்றனர்.
மோதகம்:
வசிஷ்டரின் மனைவியான அருந்ததி தன் கற் பின் வலிமையால் விநா யகர் தங்கள்
ஆசிரமத்துக்கு வரப் போவதை அறிந்து கொள் கின்றாள். விநாயகருக்குத் தருவத
ற்காக அவள் மோதகம்
செய்து
தன் கணவரிடம் அளி த்து விநாயகருக்கு அதை அளிக்கச் செய்கின்றாள். அவள்
மறைமுகமாய் உண ர்த்தியது, பிரும்மம் அண்டம் முழுதும் நிறை ந்துள்ளது என
உணர்த்த வெள்ளை மா வை அண்ட மாகவும், உள் ளே நிறைந்துள்ள பூரணத் தை
பரப்பிரும் மமாகவும் உருவகப் படுத்தினாள். அத னாலேயே இன்றளவும் விநா யகர்
வழிபாட்டில் மோதகம் முக்கிய இடம் பெறு கின்றது.
தந்தம்: விநாயகரின் தந்தம் ஒன்று உடைஞ்சிருப்பதைப் பார்
த்திருப்பீங்களே?
வேறே ஒண்ணும் இல்லை. வியாசர் மஹா பாரதம் எழுதும்போது விநாயகரின் உதவி யைக்
கோரினார். விநாயகரை வந் து எழுதித் தரச் சொன்னார். விநா யகரும் சம்மதித்து
எழுதிக் கொ டுத்தார். அப்போது ஏது பேனா, பென்சில், கணினி எல்லாம். எதை
வச்சுப் பிள்ளையார் எழுதுவார்? யானை ஆச்சே? அதிலும் ஆண் ஆ னை, தந்தம்
இருக்குமே. இரண்டு தந்தங்களில் ஒன்றை உடைச்சது அந்த ஆனைமுகன். உடைச்ச தந்
தத்தாலேயே எழுத ஆரம்பிச்சார். இதே தந்தத்தாலேயே ஒரு சமயம் அசுரன்
ஒருவனையும் ஒழித்தார். ஆக பாரதம் எழுதியதின் மூலம் ஆக்கலும், அசு ரரை
ஒழித்ததின் மூலம் அழித்தலும்,
தேவரைக் காத்ததின் மூலம் கா த்தலும் ஆகிய முத்தொழிலை யும் தந்தத்தின் உதவி கொண்டே செய்தார் விநாயகர்.
ஆனந்த புவனம்:
கைலையின் ஒரு பகுதியின் ஆனந்த புவ னம் கருப்பஞ்சாற்றின் கடலாக உள்ள தாம்.
கணேசனின் உறைவிட மான இது, சிந்தாமணி த்வீபம் எனவும் அழைக்கப் படுகின்றது.
எட்டு
விதமான அவதாரங்களை ப் பிள்ளையார் எடுத்திருக்கின் றார் என முத்கல
புராணத்தில் ஆங்கிரஸ முனிவர் சொல் லுகின்றார். அவையாவன: வக்ர துண்டர்,
ஏகதந்தர் = தேக பிரும்மம், மகோதரர் = ஞான பிரும்மம், கஜானனர் = சாங்கிய
பிரும்மம், லம்போதரர் = சக்தி பிரும்மம், விகடர் = ஆதி சக்தி, விக்னராஜர் =
விஷ்ணு சக்தி, தூம்ரவர்ணர் = சிவ சக்தி ஆக எட்டு அவதாரங்கள் எனச்
சொல்லப்படுகின் றது.
No comments:
Post a Comment