Wednesday, December 28, 2011

ஆசைப் பட்டதை அடைவது எப்படி? - ஒரு அற்புத , ஆன்மீக வழிகாட்டுதல் மந்திரங்கள்

Posted On Dec 29,2011,By Muthukumar
திடீரென்று , ஒரு மலையாள பத்திரிகை கொடுத்து படிக்க சொன்னால் , உங்களால் படிக்க முடியுமா? முடியாது இல்லையா... ஏன்? மலையாளம் படிக்கலை , அதனாலே நமக்கு புரியலை. அந்த மாதிரி இறைவன் ஒருவர் இருக்கிறதை நாம உணர்றதுக்கு நமக்கு உதவுவது தான் , கோவில்கள் , மந்திரங்கள், தியானம் இப்படிப் பல விஷயங்கள். 

நீங்க ட்ரெயின்லே போய்க்கிட்டு இருக்கிறீங்க . உங்களுக்கு ஹிந்தி தெரியும்னு வைச்சுப்போம்.. பக்கத்திலே ரெண்டு பேர் ஹிந்தி பேசுறாங்க.. 
என்னதான் நீங்க ஒரு புத்தகத்தை படிச்சுக்கிட்டு இருந்தாலும், உங்க காது , மனசு அவங்க பேசுறதை கவனிக்க ஆரம்பிக்கும்.. இல்லையா?  நீங்க எதோ ஒரு வேலையா இருக்கிறீங்க ... அப்போ , உங்க பேர் சொல்லி , யாரோ ஒருவர் கூப்பிட்டதும், திரும்பி பார்க்கிறீங்க இல்லையா? 

அதே மாதிரி - இறைவனை , அவனது கோவிலில் சென்று , நீங்கள் இந்த மந்திரங்கள் சொல்லி அழைக்கும்போது - அவனும் உங்களுக்கு செவி சாய்ப்பான்.. ராகு கால வேளையில் - லலிதா சஸ்ரநாமமோ, அல்லது சிவ ஆலயங்களில் ஸ்ரீ ருத்ரமோ, சமகமோ சொல்லும்போது - நீங்கள் அந்த பரம்பொருளால் நேரடியாக கவனிக்கப்படுவீர்கள்..... இது போதாதா ?
https://www.himalayanacademy.com/taka/past/2008/April/April_08_2008/innersearch_080130-Tiruchendur-KK_661_IMG_9782.jpg
கடவுளை எப்படி வேண்டுவது? 

உங்கள் தீராத பிரச்னைகளை , தீர்க்க சொல்லி - மனதில் மன்றாடுங்கள். உங்கள் குழந்தை ஒரு சில விஷயங்களில் அடம் பிடிக்குமே. சமயத்தில் , அந்த குழந்தை கேட்காமலே வாங்கி கொடுப்பீர்கள். சமயத்தில் , அது அழுது , முரண்டு பிடித்தாலும் - உங்களுக்கு அதை நிறைவேற்ற சக்தி இருந்தால் வாங்கி தருவீர்கள். இல்லையெனில் , உங்கள் இயலாமை , அந்த குழந்தைக்கு முதுகில் ஒரு அடியாக வெளிப்படும். அடித்த பிறகு , உங்களுக்கும் மனசு வலிக்குமே... !

இதில் ஒன்றை கவனியுங்கள். வேண்டும் ஒரு விஷயம் , கிடைக்க வேண்டும் என்பதற்காக - குழந்தை உங்கள் கவனத்தை திருப்புகிறது. அதற்குத் தெரியும், நீங்கள் மனது வைத்தால்... அந்த ஆசையை நிறைவேற்ற முடியும். அந்த கோரிக்கை , நியாயமானது எனில், நீங்கள் உடனே இல்லையெனினும், விரைவில் அந்த ஆசையை பூர்த்தி செய்ய முயலுவீர்கள்.. பிற்காலத்தில், ஒரு சில கெடுதல் ஏற்படும் விஷயங்கள்  , என்று இருந்தால் - எப்பாடு பட்டாவது , அதை தடுக்க முயல்வீர்கள்.. இல்லையா? 

அதே தான் சார்.. உங்கள் கோரிக்கை என்னவென்று மனதுக்குள் வேண்டுங்கள்.. கச்சா முச்சான்னு இருக்க வேண்டாம்.. ஒரே விஷயம்.. நியாயமான கோரிக்கையா இருக்கட்டும்.. ! 
உங்கள் ஆசையை நிறைவேற்ற யார் இருக்கிறா ? உங்கள் இஷ்ட தெய்வம்.. 

எப்படி , அந்த தெய்வத்தோட கவனத்தை உங்க மேல திருப்பப் போறீங்க? 
அடிக்கடி அந்த தெய்வத்தோட சன்னதிலே போய் நில்லுங்க.. பதிகம் பாடுங்க, ஸ்லோகம் சொல்லுங்க..  விரதம் இருங்க... ! மந்திரங்கள் எனக்கு புரியலையே என்று நீங்கள் வருத்தப்படாதீர்கள்.. I need something to eat ... என்று நீங்கள் புரியாமல் சொன்னால் கூட ,  ஆங்கிலம் தெரிந்த உங்கள் நண்பர் , உங்களுக்கு சாப்பிட ஏற்பாடு செய்வார்.. இந்த மந்திரங்கள் அனைத்தும், அவன் அருளால் , அவன் பக்தர்களுக்கு - சில நற்காரிய , காரணங்களுக்காக உருவானவையே.. ! அவனுக்கு இதன் அர்த்தம் நன்றாகவே புரியும் !

ஒரு ஆபீஸ்ல ப்ரோமோசன் வாங்குறதுக்கு நீங்க என்ன பாடு எல்லாம் படுறீங்க..? எவ்வளவு வித்தை எல்லாம் செய்யுறீங்க.. அதுக்கு அப்புறம்  நீங்க தகுதி வாய்ந்தவர்ங்கிறதை அவங்க உணர்ந்துட்டா , உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்குது இல்லையா?  அதே மாதிரி அத்தனை வித்தையையும், கடவுள் கிட்டேயும் நீங்க காட்டனும். 

கண்டிப்பாக திறமை மதிக்கப்படுவது போலே , உங்களுக்கும் இறைவன் முழு கருணை அளிப்பான்...  சற்று தாமதம் ஆகலாம் .. ஆனால் , வெகுமதி நிச்சயம்.. நீங்கள் அவன் குழந்தை.. உங்களை ஏங்க வைத்து , அவன் சந்தோசம் அடையப்போவது இல்லை.. 

உங்கள் பெற்ற தாயிடம் வேண்டுவது போல , உரிமையுடன் - அந்த உலக மாதாவிடம் கேளுங்கள்.. ! தாய்க்கு கருணை ரொம்ப அதிகம்.. ! ஒரு எறும்பு , குருவி மேல் கூட பாசம் வைக்கும் அன்னை , உங்கள் மேல் இன்னும் பாசமுடன் இருப்பாள். 

தந்தை , உங்கள் திறமைக்கு ஏற்ப கொடுப்பவர். அதனால் , உங்கள் திறமையையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.. நீங்கள் எந்த துறையில் இருந்தாலும், அந்த துறையில் வல்லவராக முயற்சி செய்யுங்கள்..  குழந்தை திறமை சாலி எனில், முதல் ஆளாக ஊக்குவிப்பது தந்தை தான்.. !

என்ன தான் உமை அன்பைப் பொழிந்தாலும், ஈசன் உங்கள் திறமை வளர்க்க சந்தர்ப்பம் கொடுத்து , அதன் பின் உங்கள் ஆசை நிறைவேற செய்வான். !

அதனால் , அந்த பரம்பொருளின் கவனத்தை திருப்புங்கள். உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்.. !

ஆசை பட்டது , கிடைக்கும்போது - மனம் அடையும் ஆனந்தத்திற்கு அளவு இல்லை.. !!

 சர்ப்ப தோஷம் - திருமண தடை நீங்க  சரபேசர் வழிபாடு பற்றி சில நாட்களுக்கு முன் எழுதி இருந்தேன்.. அந்த கோவில் பற்றி , நிறைய வாசகர்கள் மேலும் தகவல்கள் கேட்டு இருந்தனர். 

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்  கிழமை ராகு கால நேரத்தில் - மாலை 4 .30 முதல் , அபிசேக , ஆராதனை நடக்கிறது.. கூட்டம் அதிகம் இருப்பது இல்லை. உங்களுக்கு நான்கு அடி தூரத்தில் , சர்வ வல்லமை பொருந்திய சரபேசரை  , நீங்கள் சலிக்க தரிசனம் செய்யலாம். வழிபாடு முடிந்து செல்ல இரவு எட்டு மணி ஆகிவிடும். 

கோவில் இருக்கும் இடம் : வன்னிவேடு.. வாலாஜா பஸ் நிலையத்தில் இருந்து ஒரு பத்து நிமிட நடந்து செல்லும் தூரத்தில் இருக்கிறது. வாலாஜா - ராணிப்பேட்டை, ஆற்காடு அருகில் உள்ள ஒரு நகரம். சென்னையிலிருந்து வேலூர் செல்லும் எல்லா பேருந்துகளும், வாலாஜா நின்று செல்லும்.. வேலூர் டு வாலாஜா - 25 km. சென்னை டு வாலாஜா - 100 km (approx .)


உங்களுக்கு அதிக பயன் தரும் சில முக்கியமான பாராயண மந்திரங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். நமது இணைய தளத்தில் ஏற்கனவே  ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய தங்க ஆனந்த களிப்பு & வேற்குழவி வேட்கை பதிகங்களை பாடி , கோடிகளில் செல்வம் குவித்த தென்காசி நண்பரை பற்றி ஏற்கனவே பார்த்து இருந்தோம்..  

இந்த பதிவை  படித்த பிறகு, நமது வாசகர் ஒருவர் - பாம்பன் சுவாமிகள் பற்றி தனியே இயங்கும் வலைப்பூ பற்றி குறிப்பிட்டு இருந்தார். நமது வாசகர்கள்   அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் , உங்களிடம் அதைப் பகிர்ந்து கொள்கிறேன்.. அதில் உள்ள ஒரு பதிவு நம் வாசகர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்து உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்...

வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் மறைய, பணம் , பொருள், ஆபரணம் சேர்க்க , குடும்பம் - மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ , மரண  பயம் நீங்க, துக்க செலவுகள் குறைய, துர் செய்திகள் வராமல் இருக்க , திருமணம் கை கூட , பிரிந்தவர் மீண்டும் ஒன்று சேர என்று -
இவை ஒவ்வொன்றும் , அற்புதமான பலன்கள் தரும் மந்திரங்கள்.

மந்திரங்களை படிக்க  இங்கே க்ளிக் செய்யுங்கள் 


நம்பிக்கையுடன் பாராயணம் செய்யுங்கள் !

1 comment:

  1. sorry picture not available , in this mantra part , do favor plz re upload

    ReplyDelete