Friday, November 14, 2014

அருணகிரி நாதரை ஆட்கொண்ட‌ ஞானமலை ஞானபண்டிதன்!

Posted on  by Muthukumar


வேலூர் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் அருகில், கோவிந்த ச்சேரி கிராமத்தில் உள்ள ஒரு மலையின்மேல் கல்வெட்டு ஒன்று காணப்பட்டதாக நாளேடுகளில் ஒரு செய்தி வெளியானது. ‘காளி ங்கராயன் என்பவன் இந்த ஞானமலைக்குப் படிகளை அமைத்தான்’ என்பதுதான் அந்தச் செய்தி. செய்தி வெளியான
ஆண்டு 1998. மண் கொண்ட சம்புவரா யர், முதலாம் ராஜ நாராயணன், இரண்டாம் ராஜ நாராயணன் ஆகிய அரசர்கள் காலத்தில் தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதிக்கு அதிகாரியாக இருந்தவன் இந் தக் காளிங்கராயன் (1322-1340).
 
1977ம் ஆண்டு தொடங்கி, இடைவிடா து நான்கு ஆண்டுகள் திருப் புகழ்த்தலங்களைப் பற்றித் தீவிரமாக ஆய்வு செய்தபோது, ‘ஞான மலை’யின் இருப்பிடம் மட்டும் தெரிய வரவில்லை. 
 
‘முத்தைத்தரு பத்தித்திரு நகை அத்திக்கிறை சத்திச் சரவண…’ என்று முதலடி எடுத்துக் கொடுத்து  அருணகிரி நாதரை ஆட் கொண்டான் கருணை முருக ன். அங்கிருந்து புறப்பட்டு பல மலைகளையும், பல தலங்க ளையும் தரிசித்துவிட்டு, அருள் பெறும் நிலையில் ஞான மலைக்கு வருகிறார் அருண கிரியார். திருவண்ணாமலைக் காட்சிகள் அவரது நினைவுக்கு வரு கின்றன. அங்கே உலகை வெறுத்து உயிரை விடத் தீர்மானித்த போது, முருகப்பெருமான் திருவடி தரிசனம்தந்து ஆட்கொண்டா ன் அல்லவா? அந்தத் திருவடிக் காட்சிப் பேரருளை மீண்டும் ஞான மலையில் வேண்ட, அவ்வண்ணமே அவருக்கு யோகாநுபூதி அளித்து, பாத தரிசனம் அளிக்கிறான் ஞான பண்டி தன்.
‘எமைமனம் உருக்கி யோக அநுபூதி அளித்த பாத
உமைபாலா எழுதரிய பச்சைமேனி
இமையவர் துதிப்ப ஞானமலையுறை குறத்தி பாக
இலகிய சசிப்பெண் மேவு பெருமாளே’
என்று அந்த அருள் அனுபவத்தை ஞானமலைத் திருப்புகழில் பதிவு செய்கிறார் அருணகிரியார். ஞானமலை ஞானபண்டிதனை வழிபட்டு அவனது பாத தரிசன அனுபவத்தை நாமும் பெற வேண் டும் அல்லவா?
 
ஞானமலை அடிவாரத்தில் தென்திசை நோக்கி அருள்பாலிக்கும் ஞானசக்தி கண பதியை தரிசனம் செய்துகொண்டு, 150 படிகள் ஏறினால், அருணகிரிநாதர் யோகாநுபூதி மண்டபத்தில், கல்லால மரத்தடியில் காட்சியளிக்கும் ஞானதட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். அங்கிருந்து கோயிலை அடைந்து, கொடிமரம் அருகில் வீழ்ந்து வணங்கி மகா மண்டபத்துக்குள் செல்லலாம். கருவறையில் ஞான குஞ்சரி, ஞானவல்லி சமேத ஞானபண்டித சுவாமி அருட்காட்சி வழங்குகிறார். ஒருமுகம், நான்கு கரங்களுடன் பின் இருகரங்களில் கமண்டலம் ஜபமாலை ஏந்தியும், முன் வலக்கரம் அபய முத்திரையிலும், முன் இடக்கரம் இடுப்பிலும் கொண்டு நின்ற கோலத் தில் மிக அற்புதக் காட்சி! சிற்ப ஆகம நூல்கள் குறிப்பிடும் ‘பிரம்ம சாஸ்தா’ வடிவம். பிரணவத்துக்குப் பொருள் தெரியாத பிரமனைக் குட்டி,
சிறையிட்டு, சிருஷ்டித்தொழிலைத்தாமே மேற்கொண்ட (பிரமசாத்தன்  பிரமனைத் தண்டித்தவன் என்று பொருள்) அருட்கோலம்.
 
பல்லவர்காலம் மற்றும் முற்காலச்சோழர்கள் காலத்தில் தொண் டை மண்டலத்தில் அமைந்த பெரும் பா லான திருக்கோயில்களில் பிரம்ம சாஸ்தா
வடிவமே காணப்படுவது குறிப்பிடத்த க்கது. சிற்ப அமைப்பைக்கொண்டு ஞானமலைஞானபண்டிதன் திருக் கோ லம் 1300 ஆண்டு களுக்கு முற்ப ட்டது என்று தெரிய வருகிறது.
 
தெற்குச் சுற்றில் அருணகிரிநாதருக்குக் காட்சியளித்த ‘குறமகள்தழுவிய குமரன்’ வடிவம், வேறு எங்கும் காண இயலாத அற்புத வடிவம்.
நீல மயிலில் அமர்ந்த கோலக்குமரன், இடதுபுறம் மடிமீது வள்ளியை அணைத்தவாறு இருக்கும் இன்ப வடிவம். அருகில், அருணகிரி யார் கூப்பிய கரங்களுடன் இக்காட்சியைக் கண்டு இன்புறுவார். தெற்குச்சுவரில் ஞானமலைக்குரிய இரண் டுதிருப்புகழ்ப்பாடல்கள் மற்றும் பதிகம், வரலாறு முதலான கல்வெட்டுகள்முருகன் புகழைப் பாடுகின்றன. வடக்குச் சுற்றில் சண்முககவசம், குமாரஸ்தவம் மற்றும் படித்திருப்பணி நன்கொடையாளர்கள் பெயர் விவரங்கள் கல் வெட்டில் உள்ளன. மலையின் மேற்புறம் ஏறிச் செல்லும் வழியில் முருகன் உண்டாக்கிய ‘வேற் சுனை’ உள்ளது.
 
சில படிகள் ஏறி மலையின் மேற்புறம் சென்றால், அங்குள்ள மண்ட பத்தில்ஞானப்பூங்கோதை சமேத ஞானகிரீஸ்வரர் அருள்காட்சி வழங்குவார். அருணகிரிநாதரைபரமகுருவாகக் கொண்டு  இந்த ஞானமலையில் பல்லாண்டுகள் தவமியற்றியவர் ஞானவெளிச் சித்தர் என்னும் பாலசித்தர் ஆவார். முருகன் திருவடிகள் பதிந்த இவ்விடத்தில் தவமியற்றி, மக்களுக்கு கூன், குருடு, செவிடு, பேடு போன்ற குறைகளை நீக்கி, பல நோய்களுக்கு மருந்தளித்து, ஞானத்தை போதித்தவர்.
கார்த்திகை மாதம் மூலநட்சத்திர நாளன்று, இவர் ஞானமலை முருகன் திருவடிகளில் கலந்தார். இந்த அற்புதச்செய்தியை 2010 ம் ஆண்டு அக்டோபர் நாலாம் நாள் நள்ளிரவில் உணர்த்தியதோடு, முருகன் கோயில் முன்புறம் உள் ள மண்டபத்தூணில் ஞானவெ ளிச் சித்தரின் உருவத்தைக் காட்டி அருள்பாலித்தான் முருகன். அவர் சமாதி கொண்ட இடத்தில்தான் ஞானகிரீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
 
இம்மலையில் இரண்டு குகைகள் உள்ளன. பாலசித்தருக்குப் பிறகுமற்றொரு சித்தர் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தவமியற்றியுள்ளார். மலையின் அடி வாரத்தில் அவருக் கான சமாதி உள்ளது. 
 
ஞானகிரீஸ்வரர் திருக்கோயிலின் பின்புறம், ஞானபண்டித சுவாமி திருவடி பதிந்துள்ள மகா புனிதமான இடத் தைத் தரிசிக்கும்போது, நமக்கு அரு ணகிரிநாதர் வரலாறு நினைவுக்கு வர, பரவசம் அடைகிறோம். அவருக் குத் திருவடிகாட்சியளித்து, யோகாநு பூதி அளித்த தற்கான சான்று இங்கே பதிந்துள்ள முருகனின் பாதச்சுவடுகளே! வள்ளியை மணந்துகொண்டு இங்கு வந்தபோது, இம்மலையில் முருகன் உலவியதாக மக்கள் நம்பு கிறார்கள். ‘ஞானம்’ என்பதற்கு திருவடி என்றும் பொருள். எனவே, ஞானமலை என்பதை திரு வடி மலை என்றும் கூறலாம்.
‘ஞானமலை முருகன் திருவடிப் பூங்கோயில்’ இங்கே அருமையா கக்காட்சியளிக்கிறது. வேதங்க ளும் காணாத வேலனின் திருப் பாதங்கள் பதிந்த பரமபவித்திரமான இந்தப் புண்ணியபூமியில் நாம் உடலால் வலம்வர (அங்கப்பிரத ட்சணம்செய்ய) இம்மண்டபம் உருவாகியுள்ளது. இங்கே அமர்ந் து ஜபம், தியானம்செய்யும் போது அற்புதமான ஒலி அதிர்வுகளை பலரும் உணர்ந்து அனுபவித்துள் ளனர்.
இங்கு அங்கப் பிரதட்சணம் செய்தால் நோய்கள் நீங்கும்; மகிழ்ச்சி யான இல்லறவாழ்வு அமையும் என்பதை அனுபவத்தால் மட்டுமே உணர முடியும்.
 
ஞானமலையில்  மிகுதியாகக்காணப்படுவது, வெப்பாலை என்னும்அரிய வகை மூலிகைமரம். இதற்குமலை மல்லிகை, குடசப்பாலை என்றும் பெயர். தோல் சம்பந்தமான நோய் (சொரியாசிஸ்) வெண் குஷ்டம், மூட்டுவலி முதலான உபாதைகளுக்கு இம்மரத்தின்இலை அரிய மூலி கையாகும். இதன் மிகச் சிறிய விதை, பாதாம் பருப்பின் சுவையுடையது. இம்மரத்தின் காற்று, தம்பதியருக்கு இல்லற இன்பத்தையும், குடும்ப ஒற்றுமையையும் அளிக்கிறது என்பது சித்த மருத்துவம் கூறும் உண்மை. மேலும், இங்குள்ள எலுமிச்சை மணம் கம ழும் புல் மூலம் முகத்துக்கு வசீகரம் அளிக் கும் தைலம் தயாரிக் கலாம்.
 
வள்ளிமலையில் வள்ளியை மணந்து, தணிகைமலை செல்லும் வழியில் முருகன் முதலில் வள்ளியுடன் பொழுதுபோக்கிய பெருமையுடையது ஞான மலை.
எனவே, இம்மலைக்கு வந்து தரிசிப்பவர்களுக்கு ஆனந்தமானவாழ்வையும், மனஅமைதியையும் அளித்து மகிழ்விக் கிறான் அந்த வள்ளி மணா ளன். இம்மலைக்கு வடமேற் கில் வள்ளிமலையும் வட கிழக்கில் தணிகை மலையு ம் சமஅளவு (35 கி.மீ) தூரத் தில் அமைந்துள்ளது. மூன் றும் ஒரு முக்கோண வடிவி ல் அமைந்திருப்பதும், இவற்றை முறையே காலை, பகல், மாலை என ஒரே நாளில் மூன்று வேளைகளில் தரிசிப்பதும் மிகவும் விசேஷம்!
 
மலைஏறிச்செல்வதற்கு வசதியாகப்படிகள் அமைத்துள்ளது ஞானாச்ரமம் அறக்கட்டளை அமைப்பு. நித்ய பூஜை ஏற்பாடு, மலையில் குடிநீர் வசதி முதலானவையும்  செய்யப் பட்டுள்ளன. ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரம், தைப்பூசம் முதலான விசே ஷ நாட்களில் காவடி, பால்குடம் எடு த்துபல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து வழிபடுகிறார்கள். கோயிலின் தென்புறம் வேல்பூஜை, லட்சார்ச்ச னை, திருவிளக்கு பூஜை மற்றும் பொதுமக்கள் வசதிக்காக அன்ன தானம், திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தவும், தற்போது மிக பிரமாண்டமான ‘ஞானவேல் மண்டபம்’ (2112 சதுர அடி அளவில்) உருவாகி வருகிறது.இம்மண்டபத் திருப்பணிக்கும், மேற்கொண்டு இக்கோயிலின் பல்வேறு வளர்ச்சிகளுக்கும் பொதுமக்களின் நன்கொடை பெரிதும் தேவைப்படுகிறது.
 
மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ‘ ஞானாச்ரமம் திருமாளிகை’, ‘செந்தி லடிமை’ டாக்டர் எஸ்.சுந்தரம் அவர் களின் அரியமுயற்சியால் உருவாகியுள்ளது. இம்மாளிகையில் ‘குற மகள் தழுவியகுமரன்’ அற்புதமான பஞ்சலோக வடிவம் தரிசித்து இ ன்புறத்தக்கது. ஆண்டுதோறும் அருணாகிரியாருக்கு காட்சிவிழாவு ம், திருப்புகழ் திருப்படி விழா, லட்சார்ச்சனை போன்ற வைபவங்கள்ஞானாச்ரம அறக்கட்ட ளை மூலம் சிறப்பாக நடை பெற்று வருகின் றன. கோயிலில் பூஜைசெய்து வரும் குமரேச ன் குடும்பத்தார் ஞானா ச்ரமம் திரு மாளிகையி ல் வசித்து வருவதால், தரிசனத்துக்கு வரும் அன்பர்களு க்குத் தே வையான உதவிகளைச் செய்து தருகிறார். மலைமேல், தமிழ்நாடு வனத்துறை உதவியுடன் மரக்கன்றுகள்  நடப்பட்டுப் பசு மையுடன் காட்சியளிக்கிறது. ஞானமலையின் ஒரு புறம் ஏரியும்,மறுபுறம் வயல்களும் பச்சைப்பசேல் என்று அழகாகக் காட்சி யளிக்கின்றன. இக் கிராமத்தில் கல்வி, மருத்துவம் போன்ற சமுதாயப் பணிகளிலும் ஞானாச்ரமம் அறக் கட்டளை ஆர்வ முடன் பங்கு கொண்டு செயலாற்றி வருகிறது.
 
திருப்புகழைப்பாடிப் பரப்பிய வள்ளிமலை ஸ்ரீசச்சி தா னந்தசுவாமிகள் போன்ற அருளாளர்கள் பலர் வழி பட்டு அருள்பெற்ற ஞானமலை முருகனைநாமும் சென்று வழிபடுவோம். உடலும் உள்ளமும் இன்புற்று மகிழ, ஞானபண்டிதசுவாமியின் திருவருளை வேண்டுவோம்!

Tuesday, November 11, 2014

சனி, சனீஸ்வரன் ஆன வரலாறு?


 சிலிர்க்க‍வைக்கும் ஆன்மீகத் தகவல்
நவக்கிரங்களில் ஒன்றான சனி பகவானை சனீஸ்வரன் என்று சிவனின் நாமத்தையும்
சேர்த்து வழிபடுகிறோம். ஏன் அப்படி வழிபடும் பழக்கம் ஏற்பட்டது? எப்படி சனி , சனீஸ்வரன் ஆனார்?
சூரியனுக்கு உஷாதேவி (சுவர்க்கலா தேவி) சாயாதேவி என்று இரண்டு மனைவிகள். சாயாதேவிக்கு பிறந்த கிருதவர்மா என்ற மகன்தான் பின்னா ளில் சனீஸ்வரபகவானாக மாறினார். கருமை நிறம் கொண்ட சனீஸ்வரனுக்கும் ஒளியாக  மின்னும் சூரியனுக்கும் பகை உணர்வு ஏற்பட்டது.
சனிபகவானுக்கு சிவன் மீதுதான் பக்தி அதிகமா க இருந்தது. சிவனுக்கு நிகரான நிலையை அ டையவேண்டும் என்றுவிரும்பிய சனிபகவான் காசிக்குசென்று லிங்கம் ஒன்றை நிறுவி கடும் தவம் செய்தார். அவரது பக்தியை கண்டு மனம் இரங்கிய சிவபெருமான்” உனக்கு என்ன வரம் வேண்டும்” என்று கேட்டார்.
தற்கு சனி, “எனக்கு என் தந்தை சூரியனை விட அதிக பலமும் பார்வையும் வேண்டும். என் பார்வையில் இருந்து யாரும் தப்பக்கூடாது. என் பார்வைபட்டால் மற்றவர்கள் தங்கள் பலத்தை இழந்து விட வேண்டும். நவக்கிரகங்களில் எனக்கு மட்டுமே அதிக பலம் வேண்டும்.
சுருக்கமாக சொல்லவேண்டுமானால்  தங்களுக்கு அடுத்த இடத்தை எனக்கு தர வேண்டும்” என்றார். அவரது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் உனக்கும் ஈஸ்வரன் என்ற பட்டம் தருகிறேன். இன்றுமுதல் நீ சனீஸ்வரன் என்று அழைக்கப்படுவாய் என்றார். இப்படித்தான் சனிக்கு ஈஸ்வர அந்தஸ்து கிடைத்தது.