Saturday, November 23, 2013

மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே?

பகவானை ஆராதிப்பதை, ஒரு கடமையாக, சாஸ்திரங்கள் சொல்கின்றன. இறைவனை வழிபடாத நாளெல்லாம் வீணான நாள் என்பர். அதனால், காலையிலோ மாலையிலோ இதற்கென்று, சிறிது நேரம் ஒதுக்கி, இறைவனை வழிபட்டால், சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும். ஆனால், பூஜை செய்வதற்கென்று, சில விதிமுறைகள் உண்டு. 
பூஜையின் போது சந்தனம், குங்குமம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம் மற்றும் வெற்றிலை பாக்கும் வைக்க வேண்டும். கடைசியில், கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். இதில், உங்களுக்கு சவுகரிய குறை ஏற்பட்டு, சிலவற்றை பூஜையில் வைக்க முடியா விட்டால், ‘அட்சதாம் சமர்ப்பயாமி’ என்று சொல்லி விட்டால் போதும். ஒருவர், அப்படி பூஜை செய்த போது, இல்லாத பொருளுக்கெல்லாம், அதன் பெயரைச் சொல்லி, ‘அட்சதாம் சமர்ப்பயாமி’ என்று சொல்லிக் கொண்டே பூஜையை முடித்து விட்டார். பூஜை செய்பவர், சாஸ்திரிகளுக்கு தட்சணை கொடுக்க வேண்டும். 
இவர்தான் எல்லாவற்றுக்கும் பதிலாக, ‘அட்சதை போதும்’ என்று சொல்லி இருக்கிறாரே… பூஜை முடிந்ததும், ‘தட்சினார்த்தம் அட்சதாம் சமர்ப்பயாமி’ என்று சொல்லி, தட்சணைக்கு பதிலாக, அட்சதையை நீட்டினாராம், பூஜை செய்தவர். 
‘என்ன இது? தட்சணை எங்கே…’ என்றார் சாஸ்திரிகள். ‘அதுதான் எல்லாவற்றுக்கும் பதிலாக, அட்சதையே போதும் என்றீர்களே… பிடியுங்கள் அட்சதையை…’ என்றார். 
பூஜையின் போது, தூபம், தீபம், விபூதி, கண்ணாடி, குடை, சாமரம், விசிறி இவைகளை சமர்ப்பணம் செய்வது வழக்கம். தூபத்தில் அக்னி தேவன், தீபத்தில் சிவன், விபூதியில் மகேஸ்வரன், கண்ணாடியில் சூரியன், குடையில் சந்திரன், சாமரத்தில் மகாலட்சுமி, விசிறியில் வாயுதேவன் உள்ளனர். அதனால், இந்த உபசாரங்களோடு பூஜை செய்ய வேண்டும்.
நைவேத்யத்தின் போது முத்திரை காட்டுவது, துர்தேவதைகளை விரட்டி விடும். எல்லாருமே, மகாலட்சுமி நம் வீட்டுக்கு வர வேண்டும், என்று தான் விரும்புவர். சிலர், மகாலட்சுமி படம் பேட்ட காலண்டரை வாங்கி வந்து, பூஜை அறை அல்லது ஹாலில் மாட்டி திருப்திப்படுவர். விடியற்காலையில் எழுந்ததும் மகாலட்சுமியை தரிசனம் செய்தால் நல்லது என்பதற்காக, சிலர், படுக்கை அறையிலும் மாட்டி வைப்பர். 
இல்லத்தரசியானவள், காலையில் எழுந்து பல் விளக்கி, குளித்து, நெற்றிக்கிட்டு, தலையை கோதி, வாசல் பெருக்கி, கோலமிட்டு, வீட்டுக்குள் வந்து சுவாமி படத்துக்கு முன் விளக்கேற்றி, நமஸ்காரம் செய்து, முடிந்தால் இரண்டு பூவை போட்டு, அதற்கு பின் தான், காபி விஷயத்தை கவனிக்க வேண்டும். 
அத்துடன், வீட்டில், வேத கோஷம், துதிப் பாடல்கள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். வீட்டில் மூலைக்கு மூலை குப்பையை சேர்த்து வைக்கக் கூடாது. அரிசி, பருப்பு போன்ற தானியங்கள் சிதறக் கூடாது. காலையில், முடிந்தால், பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுப்பது புண்ணியம். வெள்ளிக்கிழமைகளில் பசுவுக்கும், கன்றுக்கும் மஞ்சள் பூசி, குங்குமமிட்டு வலம் வருவது பெரிய புண்ணியம். வீட்டில் ஆச்சார அனுஷ்டானங்கள் இருந்தாலே, மகாலட்சுமி வாசம் செய்வாள். மனசு வைத்தால், இதையெல்லாம் செய்யலாம்.

தியானம் செய்யும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டியவைகள்


தியானத்தின் பொழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது நம்உடலைக் கட்டுப்படுத்தி ஒரே இடத்தில் அமரச் செய்வது.
எந்த முறையிலும் அமர்ந்துகொள்ளலாம்.
நமக்கு சௌகரியமான முறையில். அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ந்து கொள்வது முக்கியம்.
தரையில் அமர்ந்து கொண்டோ அல்லது நாற்காலியில்
அமர்ந்து கொண்டோ தியானம் மேற் கொள்ளலாம். நமக்கு எந்த இடத் தில் அமர்ந்து கொண்டு தியானம்செய்ய வசதியா உள்ளதோ அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்யலா ம்.
வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.
கால்களை சம்மணமிட்டுக்கொள்ளுங்கள்.
இரண்டு கைகளின் விரல்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
கண்களை மெதுவாக மூடுங்கள்.
அமைதியாக சகஜ நிலைக்கு வாரு ங்கள்.
உங்கள்க முழு உடலையும் இலக்கா க்கி கொள்ளுங்கள்.
மனதையும் இலக்காக்கி கொள்ளுங்கள்.
கால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது.
கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தல் அவசியம்.
மந்திரங்களை ஒதும்பொழுதோ அல்ல து முணுமுணுக்கும் பொழுதோ நம் மனம் ஒரு வேலையில் ஈடுபடுகிறது.
ஆதலால், மந்திரங்கள் ஓதுவதை நிறுத்திக்கோள்ள வேண்டு ம்.
நம்முடைய உடல் முறறி லும் சகஜநிலையில் இரு க்கும் பொழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் செய்யும்.
மனம் மற்றும் அறிவு நிலைக்கு…
மனம் என்பது பல எண்ணங்களின் கலவை.
மனத் தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்த வண்ண மே உள்ளன.
நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற் றவாறு, எண்ணற்ற கேள்விகள் தேரிந்தோ, தேரியாமலோ நமது மனத்திற்குள் எழுந்தபடியே இருக்கும்.
மனதை அறிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் சேல்ல வேண் டுமென்றால் நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்கத் தூவங்க வேண்டும்.
கவனித்தால் என்பது நமக்கு இருக்கும் இயற்கையான குணம் .
இதனால், நாம் நம் மூச்சுக் காற் றை கவனிக்கத் துவங்கவேண்டும்.
மூச்சு விடுவது ஒரு செயலாக எண்ணிச் செய்யக்கூடாது.
காற்றை உள்ளே இழுப்பதும், வெ ளியே விடுவதும் நமக்குத் தெரிந் து நடந்திடக்கூடாது.
மூச்சுக்காற்றை சுவாசிப்பதும், வெளியனுப்புவதும் தண்னிச்சை யாக நடைபெற வேண்டும்.
நம்முடைய இயற்கையான சுவாசத்தைக்கவனித்தல் மட்டு மே போதுமானது.
இதுதான் முக்கியம்.
இதுதான நம் எண்ணங்கள் சிதறா மல் இருக்கச் சிறங்த வழி.
எண்ணங்களுக்குப்பின்ஓடாதீர்க ள் .
கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக் கும் இடம் கொடுக்காதீர்கள்.
எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள்.
இயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கொள்ளுங் கள்.
சுவாசத்துடன் மட்டுமே இருங்கள்.
ப்பொழுது, நமது எண்ண அலை களின், அளவுகளின் குறையும். மெதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும்.
இறுதியில் சுவாசத்தின் அளவு மிக வும் குறைந்து நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளிகீற்றைப்போல் திடப்படுத்திக்கொள்ளும்.
இந்நிலையில் . . .
ஒருவருக்கு சுவாசமும் இருக்கா து, எண்ணங்களும் இருக்காது.
எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார்.
இந்த நிலையைத்தான் முழுமை யான முக்தி நிலை என்றோ அல்லது “எண்ணங்கள் அற்ற நிலை” என்றோ கூறுகிறோம்.
இதுதான் தியான நிலை.
இந்த நிலையில் தான் பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முள்பாயும்.
தியானம் அதிகமாகச் செய்வதன்மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப் பெறும்.
பிரபஞ்ச சக்தி உடல் முழவதும் சக்தி வடிவ த்தின் மூலமாகப் பாயத் துவங்கும்.
இதைத் தெய்வீக வடிவம் என்றும் கூறலாம்

இறைவனை அடைய உதவும் ஐந்து மார்க்கங்கள்!!!


Posted At November 23,2013,By MuthuKumar

இந்து தர்மத்தில் இறைவனை அடைய ஐந்து மார்க்கங்கள் உண்டு;மற்ற மதங்களில் ஒரே ஒரு மார்க்கம் மட்டுமே உண்டு;ஐம்பூதங்கள் எனப்படும் நிலம்,நீர்,காற்று,நெருப்பு,ஆகாயம் ஆகும்.மனிதர்களின் பிறவி சுபாவங்கள் இந்த ஐந்தில் எதாவது ஒன்று இருக்கும்;சிலர் நிலம் போல ஆழ்ந்த பொறுமையோடு செயல்படுவர்;சிலர் நீர் போல ஓடிக்கொண்டே இருப்பர்;சிலர் நெருப்பு மாதிரி ஒவ்வொரு செயலிலும் செயல்படுவர்;சிலர் ஆகாயம் போல பரந்த மனப்பான்மையோடு இருப்பர்;இதில் பலர் ஏதாவது இரண்டு நிலைகள் உள்ள சுபாவத்துடன் பிறப்பதும் உண்டு.
ஐம்பூதங்களில் ஏதாவது ஒரு சுபாவத்துடன் பிறப்பவர்களுக்கு இறைவனை அடைய ஒருவழிமுறை போதாது;எனவேதான் நமது முன்னோர்கள் ஐந்து மார்க்கங்களாக சரியை,கிரியை,யோகம்,ஞானம்,பக்தி என்று வகுத்துள்ளனர்.


சரியை என்றால் தினமும் பின்பற்ற வேண்டிய அனுஷ்டானங்கள்;தினமும் இருமுறை குளிப்பது;ஜீவகாருண்யம் எனப்படும் அசைவம் சாப்பிடாமல் வாழ்ந்து வருவதும்;மிருகங்களை பிறர் வதைக்காமல் தடுப்பதும்;தினமும் காக்கைக்குச் சாதம் வைத்தல்;அரிசி மாவினால் கோலம் போட்டு அதன்மூலமாக எறும்பிற்கு உணவிடுதல்;புரட்டாசி மாதம் முதல் பங்குனி மாதம் வரையிலான கால கட்டத்தில் மலையும் காடும் சார்ந்த ஆலயங்களுக்குச் செல்லும்போது ஐந்துகிலோ நவதானியங்களையும்,ஒரு கிலோ டயமண்டு கல்கண்டையும் மனித காலடி படாத இடத்தில் தூவுதல்;செய்யும் தொழிலில் நேர்மையுடன் செயல்படுதல்;இல்லறத்தில் அதிதிகளை உபசரித்தல்;தினமும் தூங்கும் முன்பும்,தூங்கி எழுந்த உடனேயும் வலது கையை உற்று நோக்கி ஏதாவது ஒரு மந்திரம் ஜபித்தல்(ஓம் அருணாச்சலாய நமஹ,ஓம் அண்ணாமலையே போற்றி,ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ,ஓம்-குலதெய்வம்-நமஹ)இப்படி தினமும் செய்தாலே இறைவனின் திருவடிகளை அடைய முடியும்.
இத்துடன் தினமும் ஏதாவது ஒரு துறவி/யாசகருக்கு அன்னதானம் செய்து வரலாம்;வாரம் ஒரு வில்வமரம்/ருத்ராட்சமரம் வளர்ப்பது மகத்தான புண்ணிய செயல் ஆகும்;வாரம் ஒரு வில்வமரம் அல்லது ருத்ராட்ச மரம் வீதம் நம் வாழ்நாள் முழுவதும் வில்வமரக்கன்றுகளை/ருத்ராட்ச மரக்கன்றுகளை நடுவதும்,அவைகளை பராமரிப்பதுமே உலகின் மிக உயர்ந்த அதே சமயம் எளிமையான புண்ணியச் செயல் ஆகும்.தினமும் பசுவுக்கு அகத்திக்கீரை அல்லது மஞ்சள் நிற வாழைப்பழங்கள் கொடுத்து வரலாம்;

கிரியை என்பது மந்திர- எந்திர- தந்திர முறைப்படி விக்கிரகங்களை வணங்கிவருவது;யாகங்கள்-யக்ஞ்சங்கள் செய்வது;கோவில்களில் திருவிழாக்கள் கொண்டாடுவது(அல்லது கொண்டாட பணம் செலவழிப்பது அல்லது கொண்டாட ஒருங்கிணைப்புப்பணியில் ஈடுபடுவது)
யோகம் என்பது ஆசனங்கள்,சின் முத்திரைப்பயிற்சி மற்றும் மூச்சுப்பயிற்சி மூலமாக பரமாத்மாவுடன் ஒன்றிணைதல்;மனவளக்கலை போன்ற தியான பயிற்சிகளில் தினமும் ஈடுபட்டு இல்லறத்தானாக இருந்தவாறே ஆன்மீகமுன்னேற்றத்தில் ஈடுபடுதல்;


ஞானம் என்பது நான் யார்? நான் எதற்காகப் பிறந்தேன்? என்னால் இந்த உலகிற்கு என்ன பயன்? என்று தன்னைத் தானே மன விசாரணை மூலம் தன்னை அறிந்து கொள்ள முயலுதல்;அதற்குரிய ஆன்மீக நூல்களைத் தேடி தேடி வாசித்தல்;வாசித்து தகுந்த ஆன்மீக குருவைக் கண்டறிதல்;பிறகு அந்த ஆன்மீககுருவின் வழிகாட்டுதலின் படி நமது ஞான நிலையை உயர்த்த முயற்சி செய்தல்;


இவைகள் அனைத்தையும் விடவும் மிகவும் எளிமையானது பக்தி மார்க்கம் ஆகும்;மேலே கூறப்பட்டிருக்கும் சரியை-கிரியை- யோகம்-ஞானம் என்பவைகளுக்கு சில விதிமுறைகள் உண்டு;ஆனால்,பக்திக்கு இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவும் கிடையாது;அவரவர் மனதுக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படி உணர்ச்சி பூர்வமாக செய்வது தான் பக்தி.
பக்திக்குரிய சில அடையாளங்களைப் பார்ப்போம்:வீட்டிலேயே தினசரி ஏதாவது ஒரு இறைவழிபாட்டுப் பாடலைப் பாடுதல்;தினமும் கோவிலுக்குச் செல்லுதல்;முளைப்பாரி எடுத்தல்,அலகு குத்துதல், பூக்குழி என்ற அக்னிகுண்டம் இறங்குதல், பலி கொடுத்தல்,மொட்டை அடிப்பதும் காது குத்துவதும்,காவடி எடுத்தல், வேஷம் போட்டுக் கொண்டு ஆடுதல்,பாத யாத்திரை செல்வது, விரதம் வாரம் தோறும் அல்லது மாதம் தோறும் அல்லது வருடம் தோறும் இருந்து வருவது;

ஒரு குழு அமைத்து மாதம் ஒரு சிவாலயத்தைச் சுத்தப்படுத்துதல்(உழவாரப் பணி); அல்லது ஒரு குழு அமைத்து பாழடைந்த சிவாலயத்தை தேடிக் கண்டுபிடித்து அதை புனர்நிர்மாணம் செய்து அதை நிர்வாகிக்க நிரந்தரமான ஒரு பொறுப்பான பக்தர்கள் அமைப்பை உருவாக்குதல்;சிவ மந்திரங்களை புத்தகமாகவோ துண்டறிக்கையாகவோ அச்சடித்து கோவில் விழாக்களில் விநியோகித்தல்;மாதம் தோறும் வரும் அமாவாசை அல்லது பவுர்ணமி நாட்களில் உள்ளூரில் இருக்கும் சிவாலயம் அல்லது சிவசமாதியில் அன்னதானம் செய்தல்; அண்ணாமலைக்குச் சென்று (அல்லது சதுரகிரிக்குச் சென்று)கிரிவலப்பாதையில் வரும் பக்தர்களுக்கு ருத்ராட்ச தானம் செய்தல்,சாதுக்களுக்கு காவி வேட்டி துண்டு தானம் செய்தல்,கிரிவலத்தின் பெருமைகளை துண்டறிக்கையாக அச்சடித்து விநியோகித்தல், இளைஞர் சங்கங்கள்- ஆன்மீக அமைப்புகளுக்குச் சென்று பைரவரின் பெருமைகளை ஆன்மீக சொற்பொழிவு மூலமாக பரப்புதல்,இணையத்தின் மூலமாக(முகநூல்,வலைப்பூ,மின் அஞ்சல் குழுக்கள்) ஆன்மீக வழிபாட்டுமுறைகளைப்பரப்புதல்;


என்ன கஷ்டம் வந்தாலும்,என்ன பெருமை வந்தாலும் என்னால் தான் வந்தது என்றோ அல்லது உடன் இருப்பவர்களால் வந்தது என்றோ கருதாமல் எல்லாம் நாம் வழிபடும் குலதெய்வமே காரணம் என்றோ அல்லது பைரவரே கதி என்றோ சரணாகதிப்படி நினைத்துக் கொள்வது; மதம் மாறிச் செல்பவர்களை பக்தியின் பெருமைகளைச் சொல்லி மதம் மாறாமல் தடுப்பது; இந்து தர்மத்துக்கு எதிரான நாத்திகர்களிடம் பேசிப்பழகி அவர்களை ஆத்திகர்களாக(பக்தியுள்ளவர்களாக) மாற்றுவது; இந்து தர்மத்துக்கு எதிரானவர்களின் அரசியல் நடிப்பை பற்றி நமது நட்பு வட்டத்தில் விளக்கிப் புரியவைப்பது; அட்டவீரட்டானங்களின் பெருமைகளை சிறு புத்தகமாக அச்சடித்து தேய்பிறை அஷ்டமி நாட்களில் உள்ளூர் சிவாலயத்தில் நடைபெறும் பைரவ அபிஷேக நேரத்தில் இலவசமாக வெளியிடுவது;பதிகங்களை சிறு புத்தகமாக அச்சடித்து சனிப்பிரதோஷ நாட்களில் வெளியிடுவது;

ஆன்மீக வெளியீடுகள்,ஆன்மீக மாத இதழ்கள்,பக்தி வெளியீடுகள்,தினசரி பத்திரிகைகளில் வெளிவரும் ஆன்மீக இணைப்பு புத்தகங்களில் ஒரே ஒரு பக்கத்தை ஸ்கேன் செய்து போட்டோ அப்லோடிங் வெப்சைட்டில் அப்லோடு செய்வது;தினமும் ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை 108 முறை எழுதுவது;இதை நமது நட்பு வட்டத்தில் தினமும் எழுத வைப்பது(இதை ஜோதிடர்களால் மட்டுமே செய்ய முடியும்);108 திருவாதிரை நட்சத்திர நாட்களுக்கு அண்ணாமலை கிரிவலம் செல்வது; 108 தேய்பிறை அஷ்டமிகளுக்கு ஸ்ரீகாலபைரவப் பெருமானை அவர் சன்னதியில் சென்று வழிபடுவது;108 தேய்பிறை அஷ்டமிகளுக்கு அந்த நாட்களில் வரும் ராகு காலத்தில் பைரவ சஷ்டிக்கவசம் பாடுவது; நாமே ராகத்துடன் ஸ்ரீகாலபைரவர் 108 போற்றியை நமது செல்போன் மூலமாக பதிவு செய்து நமது வீட்டில் தினமும் அதிகாலையில் ஒலிபரப்பு செய்வது; நாமே தகுந்த பாடகர்/பாடகி மூலமாக ஸ்ரீகாலபைரவர் 1008 போற்றியை தகுந்த வாத்தியங்களுடன் பாட வைத்து அதை இணையத்தில் பரப்புவது;நாமே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 108 போற்றியைப் பாடி நமது வீட்டில் தினமும் ஒலிபரப்புவது;யூட்யூப் மூலமாக சில வீடியோ பின்னணியுடன் ஒளிபரப்புவது;

சரியை-கிரியை-யோகம்-ஞானம் இவைகள் ஆன்மீகத்தில் ஓரளவு முன்னேறியவர்களுக்கு சரிப்பட்டுவரும்;நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு பக்தி மார்க்கமே போதுமானது;நாம் இவைகளில் ஏதாவது ஒன்றைச் செய்யத் துவங்கும்போது எல்லோரும் வந்து பாராட்டுவார்கள் என்று நினைத்துவிடக்  கூடாது;கிண்டலும் கேலியும் தான் முதலில் வரும்;பிறகு நம்மை இதைச் செய்ய விடாமல் தடுக்கவே பலர் இருப்பார்கள்;ஒருவேளை பாராட்டினால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது;மனித மனம் பாராட்டுக்கு ஏங்கும்;அதுவும் கூட நம்மை பக்தி மார்க்கத்தில் முன்னேற விடாமல் தடுக்கும் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்;

பலர் ‘நான் இந்த சித்தரை சந்தித்தேன்;’ ‘அந்த சித்தரிடம் அடிக்கடி பேசுவேன்’ என்று சொல்வதைக் கேட்டுவருவீர்கள்;நிஜத்தில் அப்படி யாராவது ஒருவர் ஒரு சித்தரிடம் அடிக்கடி பேசுபவராக இருந்தால் அவர் எவரிடமும் தன்னைப் பற்றி இப்படி தம்பட்டம் அடிக்கவே மாட்டார்;பரம ரகசியமாக வைத்துக் கொள்வார்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

Tuesday, October 29, 2013

திருப்பைஞ்ஞீலி.

Posted At 29 Oct 2013,By Muthukumar

திருச்சி மண்ணச்ச நல்லூருக்கு மேற்கில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருபைஞ்ஞீலி திருத்தலம். (திருப்பஞ்சீலி என்பது தற்போதைய வழக்கு.) பேருந்து வசதிகள் சிறப்பாக இருக்கின்றன. ஆலயத்தின் வாசலிலேயே இறங்கலாம். 

இறைவன் - மாற்றறி வரதர், நீலகண்டர், ஞீலிவனநாதர், ஞீலிவனேஸ்வரர். 

இறைவி - விசாலாட்சியம்மை, நீணெடுங்கண்ணி.

பொய்கை - விசாலாட்சிப் பொய்கை.

தலமரம் - வாழை.

பாடியவர்கள் - திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்.

வரலாறு!  தென்கரையிலுள்ள திருச்சிராப்பள்ளி மலைக்கோயில், திருவானைக்கோயில், திருவெறும்பூர், திருக்கற்குடி (உய்யக்கொண்டான் மலை.) மற்றும் திருப்பராய்த்துறை ஆகிய தலங்களைத் தரிசித்துக் கொண்டு அப்பர் பாதயாத்திரையாக திருபைஞ்ஞீலிக்கு வந்து கொண்டிருந்தார். கடும் வெய்யிலில் பருக்கைக் கற்கள் நிறைந்த பாதையில் பசியும், தாகமும் மேலிடத் தொடர்கிறார் பயணத்தை.

அடியாரின் துயர்களையும் ஈசன் அப்பருக்கு உதவாமல் இருப்பானா? கட்டமுது, பொதிசோற்றுடன் நிழல்தரும் சோலை, நீர்நிலையை உண்டாக்கி அந்தணர் வடிவில் அப்பரை எதிர்கொள்கிறார் சிவன். எங்கு செல்கிறீர்கள் என்று வினவுகிறார் அந்தணர். திருபைஞ்ஞீலி சிவபெருமானைத் தரிசிக்க என்கிறார் அப்பர். உணவருந்தித் தாகம்தணிந்து சற்று இளைப்பாறிச் செல்லலாம் என்கிறார் அந்தணர். அங்ங்கனமே வழிநடை வருத்தம் தணிந்ததும் அந்தணர் அப்பரை ஆலயத்துக்கு அழைத்து வருகிறார். ஆலயத்தின் வாசலில் அந்தணர் மறைந்து சிவபெருமான் பார்வதியுடன் அப்பருக்கு ரிஷப வாகனக் காட்சியளிக்கிறார். இறைவனின் பெருங்கருணையை நினைந்து வியந்து மகிழ்ந்து பாடிப் போற்றுகிறார் அப்பர். பசியாற்றியதால் ஈசனுக்கு சோறுடை ஈஸ்வரர் என்ற திருப்பெயர் உண்டு.

தலத்தின் சிறப்புகள்! 

காவிரியின் வடகரையில் விளங்கும் தேவாரப் பாடல்பெற்ற திருத்தலங்கள் அறுபத்து மூன்று. இத்திருத்தலம் 62 ஆவது.

கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட தொன்மையான தலம்.

சிவம் பெருக்கும் சித்திரை என்று சிறப்பித்துச் சொல்வார்கள். சித்திரை அவிட்டம் அப்பர் பெருமானின் திருநட்சத்திரத்தில் ஆண்டுதோறும் கட்டமுது விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

மார்க்கண்டேயனுக்காகத் திருக்கடையூரில் எமனை அழித்தார் சிவன். திருப்பைஞ்ஞீலித் தலத்தைத் தவிர மற்ற இடங்களில் பல்வேறு பாதிப்புகள். இங்குள்ள ஈசனிடம் அனைவரும் மன்றாட, எமனை உயிர்ப்பித்து மீண்டும் அழிக்கும் அதிகாரத்தை வழங்கியதால் ஈசனுக்கு அதிகார வல்லவர் என்ற பெயர் வந்தது. 

மந்த மாமலர் சூடிய மைந்தனார்
சித்தராய்த் திரிவார் வினை தீர்ப்பரால்
பக்தர் தாம் தொழுதேத்தும் பைஞ்ஞீலிஎம்
அத்தனைத் தொழ வல்லவர் நல்லவரே!

காணவேண்டிய திருத்தலங்களில் ஒன்று திருப்பைஞ்ஞீலி! 



































Thursday, August 8, 2013

ஸ்ரீ பதஞ்சலி முனிவர்


இவர் “பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றிவரும், சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாக பிரகாசிப்பவருமான அத்திரி மகரிஷிக்கும், மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கிய அனுசுயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஆதிசேடனின் அவதாரமாகத் தோன்றியவர். ஆதலினால் பதஞ்சலி முனிவரின் கடும் விஷமூச்சிக்காற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும். எனவே இவர் தம் சீடர்களுக்கு அசரீரியாகவே உபதேசம் செய்வார்.

தில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய “வியாகரண சூத்திரம்” என்னும் நூலை தம்முடைய சீடர்களுக்கு தாமே நேருக்கு நேராய் உபதேசிக்க வேண்டும் என்ற ஆவல் திடீரென்று உண்டாயிற்று. கௌட பாதர் என்னும் சீடர் மட்டும் பதஞ்சலி ஏவிய பணிநிமித்தமாக் வெளியே சென்றிருந்தார்.

இத்தனை காலமாக அரூவமாக உபதேசித்துவந்த பதஞ்சலி நேருக்கு நேராக உபதேசிக்க உபதேசித்து ஒரு முடிவுக்கு வந்தார். தமக்கும் தம் சீடர்களுக்கும் இடையே ஒரு கனமான திரையை போட்டுக்கொண்டார். திரையின் பின் அமர்ந்து ஆதிசேட உருவில் கடும் விஷகாற்று கிளம்ப பதஞ்சலி முனிவர் “வியாகரண சூத்திரத்தை” உபதேசித்தார். சீடர்களுக்கு பரமானந்தம். இத்தனை நாள் அசரீரியாய் கேட்ட குருவின் குரலை மிக அருகில் கேட்டு மகிழ்ந்தனர். உவகை பொங்க பலரும் தங்களுக்கு உண்டான சந்தேகங்களைக் கேட்டனர்.

வெண்கல மணியோசை போல முனிவரின் குரல் பதிலாக வந்தது.

“குருநாதரே தவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்” என்றார் ஒரு சீடர்.

“உடல் ஐம்புலன்கள் மூலம் வெளியில் பாய்வதைக் கட்டுப்படுத்துவதே தவம். மேலும் சுகம், துக்கம் இரண்டையும் கடக்கவும் வசப்படுத்துவும் செய்யப்படும் சடங்கே தவம்” என்றார்.

“குருதேவரே இந்த உலகில் பரகாயப் பிரவேசம் சாத்தியமா?” என்று கேட்டார் இன்னொரு சீடர்.

“பஞ்ச பூத ஜெயத்தால், அணிமா, மஹிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, வசித்துவம், பிரகாமியம், ஈசத்துவம் ஆகிய அஷ்டமா சித்திகளை அடையலாம். சித்தர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்” என்றார் பதஞ்சலி.

பதஞ்சலி முனிவரிடமிருந்து தடையின்றி வந்த கருத்து மழையில் திக்குமுக்காடிய சீடர்களுக்கு இந்த கம்பீரக் குரலுக்குரிய குருநாதரின் திருமுகத்தினை ஒரு கணம் திரை நீக்கிப் பார்த்துவிட வேண்டுமென்று ஆவலால் திரையைப் பிடித்து இழுக்க, திரை விலகியது. அடுத்த கணம் ஆதிசேடனின் ஆயிரம் முகங்களிலிருந்து வெளிப்பட்ட கடும் விஷ மூச்சுக்காற்று தீண்டி அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து சாம்பலாயினர்.

முனிவர் எதை நினைத்து இத்தனை நாளும் பயந்தாரோ அது நடந்து விட்டது. அது சமயம் வெளியில் சென்றிருந்த கௌடபாதர் வருவதைக் கண்ட முனிவர் அவர்மீது மூச்சுக் காற்று படாமல் இருக்க உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நடந்ததை யூகித்த கௌடபாதர் “என் நண்பர்கள் அனைவரும் இப்படி சாம்பலாகிவிட்டனரே” என்று கண்ணீர் வடித்தார்.

“குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம் இது. இத்தனைநாள் பொறுமை காத்தவர்கள் இன்று அவசரப்பட்டு விட்டார்கள். கௌடபாதரே நீர் மட்டும்தான் எனக்கு சீடனாக மிஞ்ச வேண்டும் என்பது விதி எனவே மனதைத் தேற்றிக்கொள். உனக்கு நான் சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன். உன்னுடைய இப்போதைய நிலைக்கு தேவை தியானம். தியானம் கைகூடியதும் சமாதிநிலை உண்டாகும்” என்றார் பதஞ்சலி.

படிப்படியாக கௌடபாதருக்கு வித்தகளணைத்தும் கற்றுக்கொடுத்தார். பதஞ்சலி முனிவர் யோகத்தில் ஆழ்ந்து மூலாதாரத்தின் கனலை எழுப்பி யோக சாதனை புரிந்த போது, குருநாதரின் ஆதிசேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கண்டு மெய்சிலிர்த்தார் கௌடபாதர்.
பதஞ்சலி முனிவர் சிதம்பரத்தில் சித்தியடைந்ததாகக் கூறப்படுகிறது.
பதஞ்சலி முனிவரின் தியானச் செய்யுள்:
ஆயசித்தி அனைத்தும் பெற்ற சத்திய சித்தரே
சப்தரிஷி மண்டலத்தில் பிரகாசிப்பவரே
பக்தியுடன் வணங்கும் எமக்கு
நல்லாசி தர வேண்டும் பதஞ்சலியாரே!
ஸ்ரீ பதஞ்சலி சித்தரின் பூசை முறைகள்:
தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின்மேல் பதஞ்சலி சித்தரின் படத்தினை வைத்து மஞ்சள் குங்குமமிட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கினை நல்லெண்ணை ஊற்றி பஞ்சு திரி இட்டு இரண்டுமுக தீபமெற்றி வைக்க வேண்டும். முதலில் இந்த சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருக கூறி பின்வரும் 16 போற்றிகளை கூறி பொன்னிற வஸ்திரம் அணிவித்து பொன்னிற மலர்களையும், பிச்சிப்பூ, முல்லைப்பூ போன்ற பூக்களைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.
பதினாறு போற்றிகள்:
1. ஒரு நிலைப்பட்ட மனதை உடையவரே போற்றி!
2. ஆதிசேஷனின் அவதாரமே போற்றி!
3. ஒளிமயமானவரே போற்றி!
4. மந்திரத்தின் உருவமானவரே போற்றி!
5. கருணாமூர்த்தியே போற்றி!
6. கடும் விசக்காற்று மூச்சுடையவரே போற்றி!
7. பூலோகச் சூரியனே போற்றி!
8. ஞான வழிகாட்டுபவரே போற்றி!
9. பேரும் புகழும் உடையவரே போற்றி!
10. இன்மொழி பேசுபவரே போற்றி!
11. இகபர சுகம் தருபவரே போற்றி!
12. மகாவிஷ்ணு பிரியரே போற்றி!
13. அஷ்டமா சித்திகளையுடையவரே போற்றி!
14. அங்ஞானம் அகற்றுபவரே போற்றி!
15. யோக சூத்திரம் அருளிய யோகியே போற்றி!
16. யோகங்கள் அனைத்தையும் அளிக்கும் பதஞ்சலி சித்த சுவாமியே போற்றி! போற்றி!

இவ்வாறு 16 போற்றிகளைக் கூறி அர்ச்சித்த பின்பு மூலமந்திரமான “ஓம் க்லம் பதஞ்சலி சித்தரே போற்றி!” என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். நிவேதனமாக இளநீர், கடுக்காய், தண்ணீருடன், தேன் கலந்த தீர்த்தம், பசும்பால், பழம் போன்றவற்றை வைக்க வேண்டும். பின் உங்கள் பிரார்த்தனனயை மனமுருக கூறி வேண்டவும். நிறைவாக தீபாராதனை செய்யவும்.

ஸ்ரீ பதஞ்சலி முனிவரின் பூஜா பலன்கள்:
1. ஜாதகத்தில் உள்ள வியாழ கிரக தோஷ நிவர்த்தி உண்டாகும்.
2. குடும்ப ஒற்றுமை உண்டாகும்.
3. செல்வம் பெருகும், மகிழ்ச்சியுண்டாகும்.
4. நன்மக்கட் பேறு உண்டாகும்.
5. எலும்பு சம்பந்தமான வியாதிகள் குணமடையும்.
6. கல்விக் கலைகளில் சிறந்து விளங்கலாம்.
7. எல்லாவற்றிலும் தடைகள் நீங்கி வெற்றி உண்டாகும்.
8. விஷம், உஷ்ணம் சம்பந்தமான வியாதிகள் குணமாகும்.

இவரை வழிபட வியாழக்கிழமை உகந்த நாள்.
பதஞ்சலி முனி வரலாறு முற்றிற்று.

குதம்பைச் சித்தர்


     குதம்பை என்பது பெண்களின் காதிலே அணியும் தொங்கட்டான் நகை. இவர் பாடல்களில் குதம்பை அணிந்த பெண்ணை குதம்பாய் என்று அழைக்கிறார். இதனால் இவரை குதம்பைச் சித்தர் என்றே அனைவரும் அழைத்தார்கள். இவர் 32 பாடல்களைப் பாடியுள்ளார்.

யாதவ குலத்தில் கோபாலர் தம்பதிகளுக்கு ஆடிமாத விசாக நட்சத்திரத்தன்ற்ய் மிக அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அது ஆண் குழந்தையாக இருந்தாலும் அதன் அழகு பெண் குழந்தையைப் போலிருக்கவே அக்குழந்தையின் காதில் அசைந்தாடும் குதம்பை என்னும் நகையை அணிவித்தாள் குழந்தையின் தாய். குதம்பையின் தினசரி நிகழ்ச்சி காலையும், மாலையும் கோவிலுக்கு சென்று இறைவனை வணங்குவது தான்.

குதம்பைச் சித்தருக்கு பதினாறு வயதாகும் போது அவருக்கு ஞான உபதேசம் செய்வதற்காக மாதவர் ஒருவர் வந்தார். வந்தவரை வணங்கி நின்றார் குதம்பை. மாதவர் குதம்பைக்கு அருளுபதேசம் செய்தார். “மாதவ குருவே உபதேசம் செய்த உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்!” என்றார் குதம்பை மாதவரோ குதம்பையை மெல்ல தடவிக்கொடுத்து “குதம்பை நீ போன பிறவியில் உய்வடையும் பொடுட்டு கடுந்தவம் செய்தாய். ஆனால் தவம் முழுமை அடையும் முன்பே உன் காலம் முடிந்து நீ இறந்து போனாய். அந்தத் தவத்தின் பயனால் தான் நீ என்னிடம் உபதேசம் பெற்றாய். நான் உபதேசித்ததை அனுபவத்தில் கொண்டு வெற்றி பெறுவாய்” என்றார்.

ஒரு நாள் இரவு குதம்பைச் சித்தர் யாருக்கும் தெரியாமல் எழுந்து ஒரு காட்டிற்குள் புகுந்தார். அங்கிருந்த ஒரு மரப்பொந்தில் நுழைந்து தவ நிலையில் ஆழ்ந்தார். தம் அனுபவங்களைப் பாடல்களாக எழுதினார். அந்தப் பாடல்கள் தான் குதம்பைச் சித்தர் பாடல்களாக உள்ளன.

குதம்பைச் சித்தர் மயிலாடுதுறையில் சித்தி பெற்றதாக சித்தர் நூல்கள் கூறுகின்றன.

ஸ்ரீ குதம்பைச் சித்தரின் பூசை முறைகள்:

தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின்மேல் குதம்பைச் சித்தரின் படத்தினை வைத்து மஞ்சள் குங்குமமிட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கினை ஏற்றி வைக்க வேண்டும். முதலில் இந்த சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருக கூறி பின்வரும் 16 போற்றிகளை கூறி பூக்கள் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

பதினாறு போற்றிகள்:

1. சிவனை பூசிப்பவரே போற்றி!
2. ஹடயோகப் பிரியரே போற்றி!
3. சூலாயுதம் உடையவரே போற்றி!
4. மோட்ச ஞானம் அளிப்பவரே போற்றி!
5. ஞானவரம் கொடுப்பவரே போற்றி!
6. ஜோதி சொரூபரே போற்றி!
7. சிவ ஒளியாய் திகழ்பவரே போற்றி!
8. விபூதி அலங்காரப்பிரியரே போற்றி!
9. நாட்டியப்பிரியரே போற்றி!
10. இதய சுத்தம் உள்ளவரே போற்றி!
11. வாக் பந்தனம் செய்பவரே போற்றி!
12. அபயம் அளிக்கும் தேவரே போற்றி!
13. இந்திரன் முதலான தேவர்களை பூசிப்பவரே போற்றி!
14. ஊனமுற்றவரைக் காப்பாற்றுபவரே போற்றி!
15. ஓம் என்ற பீஜாட்சரமாய் வாழ்பவரே போற்றி!
16. எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் குதம்பை சித்த சுவாமியே போற்றி! போற்றி!

இவ்வாறு 16 போற்றிகளைக் கூறி அர்ச்சித்த பின்பு மூலமந்திரமான “ஓம் குதம்பைச் சித்தரே போற்றி!” என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். நிவேதனமாக பால், பழம், தண்ணீர் வைக்க வேண்டும். பின் உங்கள் பிரார்த்தனனயை மனமுருக கூறி வேண்டவும். நிறைவாக தீபாராதனை செய்யவும்.
 
தியானச் செய்யுள்:
சூலம் ஏந்திய சுந்தர மூர்த்தியே
அத்திமரம் அமர்ந்து
ஆயசித்தி அனைத்தும் பெற்ற சத்திய சித்தரே
கும்பிட்ட எமக்கு நம்பிக்கையுடன்
நல்லாசி தருவாய் குதம்பை சித்த பெருமானே!

குதம்பை சித்தர் பூஜா பலன்கள்:
இவர் நவக்கிரகங்களில் கேதுபகவானை பிரதிபலிப்பவர். இவரை வழிபட்டால்..
1. சித்த பிரமை கோளாறு, மனோவியாதி, பைத்தியம் பிடித்தது போல் உள்ள நிலை மாறும்.
2. மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு அபிவிருத்தி ஏற்படும்.
3. சரியாகப் படித்தாலும் பரீட்சை எழுதும் நேரத்தில் மறந்துபோடும் நிலை மாறும்.
4. மூளையில் இரத்தம் உறைதல், மனப்பிராந்தி, வீண் பிரமை, தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல், இவையெல்லாம் அகன்று தெளிவு ஏற்படும்.
5. கேது பகவானால் ஜாதகத்தில் ஏற்படக்கூடிய தோசங்கள் விலகும்.
6. போதை பொருட்களுக்கு அடிமைஆகுதல், புகைபிடித்தல், குடிப்பழக்கம் அகலும்.
7. ஆன்மீகப் பாதையில் உள்ள முன்னேற்றத் தடை அகலும்.

இவருக்கு பல வர்ண வஸ்திரம் அணிவிக்கலாம். இவரை பூஜிக்க உகந்த நாள் வெள்ளிக்கிழமை.
குதம்பைச் சித்தர் வரலாறு முற்றிற்று.