Friday, October 3, 2014

சனீஸ்வரர், எந்தெந்த கிரகங்களுடன் சேர்ந்தால் என்னமாதிரி ஏற்ற‍ங்களும் ஏமாற்ற‍ங்களும் நிகழும்!


undefinedசனீஸ்வரர் எந்தெந்த கிரகங்களுடன் சேர்ந்தால் என்ன மாதிரியான மாற்ற‍ங்களும் ஏமாற்ற‍ங்களும் நிகழும் 

1. சனி – சூரியன்:

சனியும் சூரியனும் ஒருவருக்கு ஒருவர் பகைவர்் என்பதால், இந்தச் சேர்க்கை சிலாக்கியம் இல்லை. தந்தைக்கும் பிள்ளைக்குமான
உறவு சுமுகமாக இருப்பதற்கில்லை. சொத்துக்கள் சம்பந்தமாக கோர்ட்டுக்குச் செல்லவும்கூடும். ஒருவிதத்தில் இந்தச் சேர்க்கை யானது பித்ரு தோஷத்தைக் குறிப்பதாகச் சொல்லலாம். சங்கீதத்  திலும் கலைகளிலும் ஆர்வமும், அழகாகப் பேசும் திறனும் இவர்க ளிடம் காணப்படும். அதிக செல்வாக்கும் செல்வமும் பெற்றிருந் தாலும், கலகம் செய்வதிலும், மற்றவர்களை ஏமாற்றுவதிலும் சாம ர்த்தியம் பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு சனிதசை சூரியபுக்தி அல் லது சூரியதசை சனிபுக்தி நடைபெறும் காலங்களில், உரிய பரி காரம் செய்துகொள்வது அவசியம்.  

2. சனி – சந்திரன்:

அழகான தோற்றத்துடன் திடகாத்திரமாகக் காணப்படும் இவர்கள் ஊர் சுற்றுவதில் பிரியம் கொண்டிருப்பார்கள். மந்தமாகக் காணப் படுவார்கள். மாந்த்ரீக விஷயங்களில் ஈடுபாடு உள்ளவர்களாகவும் , அதை வியாபாரரீதியாகப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பவர்களாக வும் இருப்பார்கள். இவர்களுக்குப் பழங்களைச் சாப்பிடுவதில் பிரிய ம் அதிகம் இருக்கும். உடல் நலனைப் பராமரிப்பதில் சிரத்தையுடன் இருப்பார்கள். இவர்களில் ஒருசிலர் இளம் வயதிலேயே தாயை இழ க்கநேரிடலாம். இயல்பிலேயே சாமர்த்தியசாலிகளான இவர்கள் பகைவர்களை சுலபமாக வெல்லக்கூடிய ஆற்றலைப் பெற்றிருப் பார்கள்.

3. சனி – செவ்வாய்:

நீண்ட கைகளைப் பெற்றிருக்கும் இவர்கள் நல்ல கல்வியறிவும், புத்திக்கூர்மையும், திறமையும் ஒருசேரப் பெற்றிருப்பார்கள். எல்லா விதமான சுகசெளகர்யங்களைப் பெற்றிருக்கும் இவர்கள் மற்றவர் களால் பெரிதும் புகழப்படுவார்கள். தன்னால் முடிந்த அளவு மற்ற வர்களுக்கு உபகாரம் செய்வார்கள். அதேநேரம், தவறு செய்பவர்  களைக் கண்டால் தயவுதாட்சண்யம் பார்க்கமாட்டார்கள். கெமிக்க ல், இரும்பு தொடர்பான தொழிலிலோ, வியாபாரத்திலோ ஈடுபட்டுப் பணம் சம்பாதிப்பார்கள். எப்போதும் சிந்தனைவயப்பட்டவர்களாகக் காணப்படுவார்கள்.

4. சனி – புதன்:

லிங்க வடிவ சனீஸ்வரர்
நிறைந்த கல்வியறிவு பெற்றிருக்கும் இவர்கள், சாஸ்திர ஆராய்ச்சி களிலும், வாதப் பிரதிவாதங்களிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். மற்றவர்களைவிடவும் தான் மேலானவன் என்பது போன்ற கர்வமு ம் இவர்களிடம் காணப்படும். ஆசிரியராகவோ மதாசாரியராகவோ புகழ் பெறுவார்கள். அரசாங்கம் தொடர்பான சட்ட நுணுக்கங்களை விரல் நுனியில் வைத்திருப்பார்கள். எந்தத்துறையாக இருந்தாலும், அதில் அதிகாரம் மிக்க பணியில் இருப்பார்கள். நல்ல தேஜஸு டன் காணப்படும் இவர்களுக்குச் சொந்த வீடு, நிலங்கள் போன்றவை அமைவதுடன், மனைவி வழியிலும் சொத்துக்கள் சேரும்.

5. சனி – குரு:

இவர்கள் நிறைந்த கல்வியறிவும் ஞானமும் பெற்றிருந்தாலும், அத னால் இவர்கள் அடையக்கூடிய பலன்கள் மிகக் குறைவாகவே இரு க்கும். தாய்மாமன் வகையில் மிகுந்த ஆதரவு உண்டு. தாயார்வழி மாமாக்களுடைய ஆதரவைப் பெற்றிருப்பர். இந்தச் சேர்க்கையான து புத்திர தோஷத்தையும், புத்திரர்களால் அவப்பெயரையும் ஏற்படு த்தக்கூடும். 30 வயதுக்குப் பிறகு ஜாதகருக்கு எதிர்பாராத பதவி கி டைப்பதுடன், சொத்துச் சேர்க்கையும் உண்டாகும். இவர்களில் பல ரும் பணம் கொடுக்கல் வாங்கலிலும், பணம் புழங்கக்கூடிய இடங் களிலும் வேலை செய்து பணம் சம்பாதிப்பர். பூமி வகையிலும் இவ ர்களுக்கு லாபம் உண்டாகும். 

6. சனி – சுக்ரன்:

செல்வம், செல்வாக்கு, புகழுடன் திகழ்வார்கள். அந்தஸ்தும் அதி காரமும் உள்ள பதவிகளில் இருப்பார்கள். சகோதர சகோதரிகளிட ம் அதிக அன்பும் பாசமும் கொண்டிருக்கும் இவர்களுக்கு, அவர்க ளுடைய ஆதரவும் கிடைக்கும். வைரம், பொன், வஸ்திர ஆபரணங் களுடன் உன்னதமான நிலையில் இருப்பார்கள். பல  ஆட்களை வைத்து வேலை வாங்கும்படியான அதிகார யோகமும் இவர்களு  க்கு உண்டு. சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற கலைக ளில் ஆர்வமும் தேர்ச்சியும் பெற்றுப் புகழுடன் திகழ்வார்கள். சாஸ் திரங்களில் உள்ளவற்றை நம்பிக்கையுடன் பின்பற்றுவார்கள். பக் தியும் தெய்வ நம்பிக்கையும் கொண்டிருக்கும் இவர்கள், எது நடந் தாலும் நன்மைக்கே என்னும் மனப் பக்குவத்தைப் பெற்றிருப்பார் கள்.  

7. சனி – ராகு:

மிகுந்த கல்வியறிவுடன் இருக்கும் இவர்கள் நிலங்கள், வீடு வாசல், மாடு, கன்றுகள், பால்பாக்யம், கீர்த்தி, வண்டி, வாகனங்கள் முதலி யவற்றுடன் பலரும் மதிக்கும்படியாக வாழ்வார்கள். அரசருக்கு நிக ராக பணியாள்கள் சூழ இருப்பார்கள். பெண்களால் சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். இவர்களில் பலர் சட்டம் படித்து, நீதித் துறை யில் உயர்பதவி வகிப்பதுடன், நீதியை மிக நேர்மையுடன் கடைப் பிடிப்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்குச் சகோதர, சகோ தரி வகையில் இடைஞ்சல்கள் ஏற்படக்கூடும்.

8. சனி – கேது:

இந்தச் சேர்க்கையானது நல்ல இடத்தில் அமையப் பெற்றிருந்தால், ஆன்மிகத்தில் நாட்டமும், தெய்வ பக்தியும் கொண்டவர்களாக இரு ப்பார்கள். உடலில் அடர்த்தியான ரோமம் காணப்படும். கோபமும், பிறரை ஏமாற்றும் குணமும் கொண்டிருப்பார்கள். இவர்களில் சில ருக்கு காம உணர்ச்சி சற்று மிகுதியாகக் காணப்படும். பெயருக்கு ஆசைப்பட்டு, தான தர்மங்களைச் செய்வார்கள். மற்றவர்கள் வீட் டில் உணவு உண்பதில் பிரியம் இருக்கும். பித்த சம்பந்தமான நோய் கள் இவர்களுக்கு ஏற்படக்கூடும்.

Wednesday, October 1, 2014

பித்ரு தோஷம் என்றால் என்ன?


நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கி றோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷ ம் பித்ரு தோஷம் எனப்படும்.
அதை ஜாதகத்தில் கண்டறிவது எப்படி?
ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில்சேர்ந்த்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு.
அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திரு வெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடு ம்பத்தில் யாரேனும் விபத்துக் களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்துகொண்டிருந்தா லோ மட்டுமே திலஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை.
அந்த தோஷத்தினால் ஏற்படும் தீய விளை வுகள் என்ன?
இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திரும ணம் நடக்காது. அல்லது மிகவு ம் தாமத மாக நடக்கும். விவாக ரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரி டையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. கலப்புத் திருமணம் நடக்கவும், பெற்றொருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.இந்த தோஷம் உள்ள சில தம்ப திகள் ஒருவருக்கொருவர் உண் மை யானவர்களாக நடந்துகொள்வதி ல்லை.
எத்தகைய பாவங்கள் செய்திருந்தால், இந்த தோஷம் வரும்?
இந்த தோஷம் வருவதற்கான கரணங்கள்: கருச்சிதைவு செய்துகொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும். ஒருவரி ன் இளையதாரத்துப் பிள் ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும். ஆண் வாரிசு இல்லாத சித்தப்பா, பெரி யப்பா, அத்தை , சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றிக யா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும்.
தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம்.
இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ் வளவு அதிர்ஷ்ட்டமான கிரக நிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும் பித்ரு தேவதைகளும் தடைசெய்கிறார்கள் .
பித்ருக்களின்சாபம் கடவுள் நமக்குத்தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியு டையது.
21 தலைமுறைக்கு கயா,காசியில் பித்ரு பூஜை பிண்டதானம் மற்றும் தர்ப்பனம் செய்ய விரும்புவோர் தொடர்புகொல்லவும்.