Sunday, July 29, 2012

நமது ஏக்கங்களைத் தீர்க்கும் பைரவர் வழிபாடுகள்!!!

Posted On July 29,2012,By Muthukumar

நமது ஏக்கங்களைத் தீர்க்கும் பைரவர் வழிபாடுகள்!!!



பைரவ வழிபாடு செய்ய முடிவெடுத்துவிட்டால்,அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும்;மேலும் எந்த நோக்கத்துக்காக வழிபாடு செய்கிறோம் என்பதை எவரிடமும் சொல்லாமலிப்பதும் அவசியம் ஆகும்.சொன்னால் அந்த வழிபாட்டு முறையை தொடர்ந்து செய்ய முடியாமல் போய்விடும்.அந்த அளவுக்கு பொறாமை இன்று தமிழ்நாடெங்கும் பரவியிருக்கிறது.குடும்பத்தோடு அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டால்,100% பலன்கள் விரைவாக கிடைக்கும்.யார் வழிபாடு செய்கிறார்களோ,அவர் மட்டும் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினால் 60% பலன்களே கிடைக்கும்.


நமது குழந்தையின் படிப்பில் மந்தத்தன்மை நீங்கிட: புதன் கிழமை அன்று காலை 6 முதல் 7 மணிக்குள் அல்லது மதியம் 1 முதல் 2 மணிக்குள் அல்லது இரவு 8 முதல் 9 மணிக்குள் நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்துக்கு பின்வரும் பொருட்களோடு செல்ல வேண்டும்;
1.மரிக்கொழுந்து மாலை(வேறு எந்த பூவும் இருக்கக் கூடாது)
2.புனுகு
3.பாசிப்பருப்பு கலந்த சாதம்(வீட்டில் சமைத்திருக்க வேண்டும்)
4.பாசிப்பருப்பு கலந்த பாயாசம்
இவைகளில் பூசாரியிடம் மரிக்கொழுந்து மாலையை பைரவருக்கு அணியச் சொல்லி,கொடுக்க வேண்டும்.நாம் கொண்டு வந்திருக்கும் பாத்திரத்தை பைரவரின் சன்னதியில் வைக்க வேண்டும்.(இவைகளில் பாசிப்பருப்பு சாதமும்,பாசிப்பருப்பு பாயாசமும் தனித்தனி பாத்திரங்களில் இருக்க வேண்டும்)நமது (படிப்பு சுமாராக இருக்கும்) குழந்தையின் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்.பிறகு,அங்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு இந்த சாதத்தையும்,பாயாசத்தையும் பாதி விநியோகிக்க வேண்டும்;மீதியை நமது வீட்டுக்கு எடுத்துச் சென்று,நமது குழந்தைக்குத் தர வேண்டும்.நாமும் சாப்பிடலாம்.


வழக்குகளில் வெற்றி பெற: சனிப்பிரதோஷம் வரும் நாட்களில் பிரதோஷ நேரத்திற்குள் தயிர்ச்சாதம் நமது வீட்டில் தயார் செய்து அருகில் இருக்கும் சிவாலயத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.சனிப்பிரதோஷம் முடிந்ததும் (மாலை 6 மணி முதல் 7 மணிக்குள்) அங்கிருக்கும் காலபைரவருக்கு தயிர்ச்சாதத்தை படைக்க வேண்டும்;பிறகு நம்முடைய பெயருக்கு(யாருக்கு வழக்கு இருக்கிறதோ அவர் பெயருக்கு) அர்ச்சனை செய்ய வேண்டும்.பிறகு அவருடைய சன்னதியில் பைரவர் 108 போற்றியை வடக்கு நோக்கி அமர்ந்து(தரையில் தான்) மனதுக்குள் ஜபிக்க வேண்டும்.பிறகு,அங்கே வந்திருக்கும் பக்தர்களுக்கு தயிர்ச்சாதத்தை விநியோகிக்க வேண்டும்.


கணவன் மனைவி பிரச்னைகள் தீர: புதன் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை காலை 6 முதல் 7 மணிக்குள் அல்லது மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் அல்லது இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும்.இந்த இரண்டு கிழமைகளும் செய்யக் கூடாது.ஏதாவது ஒரு கிழமையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, 8 வாரங்கள் இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும்.
நமது ஊரில் இருக்கும் சிவாலயத்தில் உள்ள காலபைரவருக்கு வில்வமாலை அணிவிக்க வேண்டும்.நமது பெயர் மற்றும் நமது வாழ்க்கைத்துணை(கணவன் எனில் மனைவி, மனைவி எனில் கணவன்)பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்;அர்ச்சனை செய்தபின்னர்,பைரவர் 108 போற்றி அல்லது பைரவர் 1008 போற்றியை அவரது சன்னதியில் அமர்ந்து கொண்டு ஜபிக்க வேண்டும்.(வாய்விட்டுச் சொல்லக்கூடாது)


ஸர்ப்ப தோஷம் விலக: ஒருவருடைய பிறந்த ஜாதகத்தில் லக்னம் அல்லது 2 ஆம் இடத்தில் ராகு  அல்லது கேது நின்றால் அது ஸர்ப்ப தோஷம் ஆகும்.வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் நமது ஊரில் இருக்கும் சிவாலயத்தில் கால பைரவருக்கு பாலபிஷேகம் செய்ய வேண்டும்;புனுகு பூச வேண்டும்;நாகலிங்கப்பூமாலை அவருக்கு சார்த்த வேண்டும்;பால் பாயாசம்,பால் சாதம் இவைகளை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும்.நமது பெயருக்கு(யாருக்கு ஸர்ப்ப தோஷம் இருக்கிறதோ,அவர் பெயருக்கு) அர்ச்சனை செய்ய வேண்டும்;அதன்பிறகு,கால பைரவர் சன்னதியின் முன்பாக அமர்ந்து கொண்டு காலபைரவர் 108 போற்றி அல்லது காலபைரவர் 1008 போற்றி அல்லது காலபைரவர் அஷ்டோத்திரத்தை மனதுக்குள் ஒருமுறை ஜபிக்க வேண்டும்.பிறகு நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இப்படி தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளுக்கு வழிபாடு செய்ய வேண்டும்.
லக்னம் அல்லது இரண்டாமிடத்தில் ராகு அல்லது கேது இருந்து ராகு மஹாதிசை அல்லது கேது மஹாதிசை வந்தால்,அந்த திசை முழுவதும் வாரம் தவறாமல் இந்த வழிபாட்டைச் செய்து வர வேண்டும்.இந்த திசை முழுவதுமே அசைவம்,மது,போதைப்பொருட்களை கைவிட வேண்டும்.அவ்வாறு கைவிட்டு இந்த வழிபாட்டைச் செய்து வந்தால்,ராகு மற்றும் கேதுவால் ஏற்பட இருக்கும் அவமானங்கள் படிப்படியாக விலகிவிடும்.நிம்மதியும்,சிறந்த வாழ்க்கைத்துணையும் அமைந்துவிடும் என்பது அனுபவ உண்மை ஆகும்.


மனதுக்குப்பிடித்த வாழ்க்கைத் துணை அமையவும்; திருமணத்தடை அகலவும்: வெள்ளிக்கிழமை ராகு கால நேரமான காலை 10.30 முதல் 12 மணிக்குள் கால பைரவருக்கு சந்தனக்காப்பு பூச ஏற்பாடு செய்ய வேண்டும்;புனுகு பூசச் செய்து,தாமரை மலரை அணிவிக்க வேண்டும்;அவல் கேசரி,பானகம்,சர்க்கரைப்பொங்கல் இவைகளை படையலாக்க வேண்டும்;படைத்து நமது பெயருக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும்.
மேலும் ஞாயிறு தோறும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில் காலபைரவருக்கு சந்தனக்காப்பு பூச வைத்து,நமது பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளுக்கும்,8 ஞாயிற்றுக்கிழமைகளுக்கும் வழிபாடு செய்து வர எப்பேர்ப்பட்ட திருமணத்தடையாக இருந்தாலும் அது நீங்கிவிடும்.


ஓம்சிவசிவஓம்

பூமிக்கு வந்த பொறுமை!

Posted On July 29,2012,BY Muthukumar
பொறுமைக்கு இலக்கணமானவள் பூமிமாதா. அவள், நமக்கு உணவு, உடைக்கான பயிர்கள், அனுபவிக்கத்தக்க பலவித பொருட்களை தந்திருக்கிறாள். நாம், அவள் மேல், நம் கழிவு களையெல்லாம் கொட்டுகிறோம், பொறுமையே வடிவாய் புன்னகை ததும்பும் முகத்துடன் ஏற்றுக் கொள்கிறாள். இவளே ஆண்டாளாக, ஆடிப்பூரத் தன்று பூமியில் அவதரித்தாள்.
ராமாவதாரத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தால், லட்சுமி தாயார் மட்டும் சீதையாக அவதரித்தாள். கிருஷ்ணாவதாரத்தில் ருக்மிணியாக பிறந்தாள். விஷ்ணுவின் மற்றொரு மனைவியான பூமாதேவி, சத்யபாமாவாக பிறந்தாள். கிருஷ்ணா வதாரத்துடன், விஷ்ணுவின் அவதாரம் நிறை வடைந்தது. அவர், உலகத்துக்கு கீதையைப் போதித்திருந்தார். ஆனால், யாரும் அதைப் பின்பற்றுவதாக தெரியவில்லை. ஒருவேளை, தான் சொன்ன கீதை, மக்களுக்கு புரியவில்லையோ என்ற எண்ணத்தில் இருந்த வேளையில் தான், பூமாதேவி அவரை அணுகினாள்.
"ஐயனே... தாங்கள் ஒரு காலத்தில் வராகவதாரம் எடுத்து, ரண்யாட்சனால் கடத்தப்பட்ட என்னை மீட்டீர். ஆனால், என்னில் வசிக்கும் உயிரினங்கள், உலக ஆசையில் மூழ்கி, செய்யக் கூடாத பாவமெல்லாம் செய்கின்றன. நானும் எவ்வளவோ பொறுத்துத் தான் போகிறேன். இந்த உயிர்களை திருத்தி மீட்பதற்கு, தாங்கள் ஏதாவது செய்யக் கூடாதா?' என்றாள்.
விஷ்ணு, அவளது கோரிக்கையை ஏற்றார். லட்சுமியிடம், "நான் பூலோகத்தில் மீண்டும் அர்ச்சாவதாரமாக (சிலை வடிவம்) அவதரிக்க உள்ளேன். நீயும் என்னுடன் வர வேண்டும்' என்றார்.
லட்சுமி மறுத்து விட்டாள். "ராமாவதாரத்தில் உங்களோடு சீதையாக இருந்த என்னை சந்தேகப் பட்டீர்கள். கிருஷ்ணாவதாரத்தில், அந்த சத்யபாமா வோடும், இதர பெண்களோடும் இருந்து, என் மனதை படாதபாடு படுத்தினீர்கள். எனவே, இனி நான் உங்களோடு பூலோகத்துக்கு வருவதாக இல்லை' என்றாள். பூமாதேவியிடம், "நீயாவது வருகிறாயா?' என்றார் விஷ்ணு.
பொறுமையின் பிறப்பிடமாயிற்றே பூமாதேவி! மேலும், பகவானே தன்னிடம் கேட்கும் போது, அதிலும், தன்னில் வசிக்கும் உயிர்களை ஆசை நோயில் இருந்து மீட்பதற்காக கேட்கும் போது, விடுவாளா என்ன! "தங்களோடு வருகிறேன்' என கிளம்பி விட்டாள்.
"சரி... ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் புண்ணிய தலத்தில், நான் வடபத்ரசாயியாக அருள்செய்து வருகிறேன். அங்கே, என் பக்தரான விஷ்ணுசித்தர் இருக்கிறார். அவரது வளர்ப்பு மகளாக நீ இருந்து வா. சமயம் வரும்போது உன்னைத் திருமணம் செய் வேன்' என்றார்.
பூமாதேவியும், விஷ்ணுசித்தரின் கண்ணில் படும்படியாக, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள துளசி தோட்டத்தில், ஐந்து வயது சிறுமியாய் கிடைத்தாள். அந்த விஷ்ணு சித்தரே, "பெரியாழ்வார்' என போற்றப்படுபவர். குழந்தைக்கு, "கோதை' எனப் பெயரிட்டார்.
பூமியில் பிறந்த எல்லாருக்கும், மனிதர்கள் மீது காதல் வரும். ஆனால், கோதை தெய்வப்பிறவி யல்லவா! ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் உறையும் வடபத்ரசாயியை கிருஷ்ணராகக் கருதி, கணவனாக அடைய ஆசைப்பட்டாள். அதற்காக, கடும் விரதமிருந்தாள். ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்பாடி யாகவும், அங்குள்ள பெண்களை கோபியர்களா கவும், அவர்களில் ஒருவராக தன்னையும் இணைத்துக் கொண்டாள்.
மார்கழி மாதத்தில், தோழியருடன் இணைந்து நோன்பிருந்தாள். தன் தந்தை, அவ்வூர் இறை வனுக்கு அனுப்பும் மாலையை, தன் கழுத்தில் போட்டு அழகு பார்த்து அனுப்பி வைத்தாள். விஷ்ணுசித்தருக்கு இது தெரியவரவே, அவளைக் கண்டித்தார். ஆனால், வடபத்ரசாயியோ, "என் பக்தை கழுத்தில் அணிந்து அனுப்பும் மாலையே தான் வேண்டும்...' என்றார். தன் மகளுக்கு ஏற்பட்ட பெருமையை எண்ணி, ஆனந்தம் கொண்டார் பெரியாழ்வார்.
"எல்லாரையும் பெருமாள் ஆள்கிறார். ஆனால், நீ பெருமாளையே ஆண்டதால், "ஆண்டாள்' என பெயர் பெறுவாய்' என்றார். தன் விரதத்தை முடித்த ஆண்டாள், விஷ்ணுவின் <உத்தரவுப்படி, ஸ்ரீரங்கம் சென்று அவருடன் கலந்தாள்.
ஆண்டாள், பூமிக்கு வந்ததன் நோக்கம், இந்த உலக உயிர்களை, பிறவித்தளையில் இருந்து உய்விக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதனால் தான், அவள் திருப்பாவை பாடினாள். கீதை, படிப்பதற்கு சிரமமானது. அதிலுள்ள கருத்துக்களை உள்ளடக்கி, எளிமையாக திருப்பாவை பாடல்களை வடிவமைத்தாள். இந்தப் பாடல் களை தினம் ஒன்றாகப்பாடு வோர், வாழும் காலத்தில் நிம்மதி யையும், வாழ்வுக் குப் பின் பிறப் பற்ற நிலையையும் அடைவர்.

Saturday, July 28, 2012

பித்ரு தோஷத்தை நீக்கும் விஜயாபதி நவகலசயாகம்


Posted On July 29,2012,By Muthukumar



நம்மில் பலரது வாழ்க்கை மிகவும் சாதாரணமாகவே இருக்கிறது.ஆனால்,ஜோதிடர்கள் பலரிடம் நமது ஜாதகத்தைக் காட்டியிருப்போம்;எல்லோருமே சொல்லி வைத்தாற்போல,உங்களுக்கு அந்த யோகம் இருக்குது;நீங்கள் கோடீஸ்வரன் தான் என்று புகழ்ந்து தள்ளியிருப்பர்.இருப்பினும் நமது கஷ்டங்கள்,சிரமங்கள்,வேதனைகள் நமக்கு மட்டும் தானே தெரியும்?


நம்மில் பலர் யாருக்கும் தீமை செய்யாதவராகவே இருக்கிறோம்.நாம் உண்டு;நமது வேலை உண்டு என்றுதான் இருக்கிறோம்.காதலில் கூட ஒரே ஒருத்திகூட வாழவேண்டும் என்றே ஆசைப்படுகிறோம்.நிம்மதியும்,செல்வ வளமும் நமது லட்சியங்களாக இருப்பினும் ,பல கோயில்களுக்கு செல்வதை வழக்கமாக்கியிருந்தாலும்,பல அன்னதானங்களை செய்திருந்தாலும்,ஏதாவது ஒரு மந்திரத்தை தினமும் ஜபித்துக்கொண்டிருந்தாலும் வாழ்க்கை மிகவும் சாதாரணமாகவே சென்று கொண்டிருக்கிறது.இதற்கான காரணத்தை ஒரு சில திறமையான ஜோதிடர்கள் மட்டுமே கணித்துச் சொல்ல முடியும்.


ஒருவரது பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 3,5,9 ஆம் இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால்,அவருக்கு பித்ரு தோஷம் இருக்கிறது என்றே அர்த்தம்.இராகு என்பது அப்பாவழி முன்னோர்களைப் பற்றியும்,கேது என்பது அம்மாவழி முன்னோர்களையும் விவரிக்கும் கிரகங்கள் ஆகும்.


ஒருவரது பிறந்த ஜாதகத்தில் ராகு ஐந்தாமிடத்தில் இருந்தால்,அவர் தன்னலம் கருதாதவராக இருப்பார்;ஆனால்,இவரது உதவியால் வாழ்க்கையில் முன்னேறியவர்கள் இவரை சிறிது கூட சீண்டமாட்டார்கள்;அதே ஐந்தாமிடத்தில் கேது இருந்தால்,இவர்கள் தனது குடும்பத்தாரினாலேயே புறக்கணிக்கப்படுபவராக இருப்பார்;இவர் ஊருக்கு உபகாரியாக இருப்பார்;வீட்டில் இவருக்கென்று சிறிதும் மரியாதை இராது.நாம் ஏன் எல்லோருக்கும் நல்லது செய்தும் கூட நமக்கு எவரும் நல்லது ஒன்றுகூட செய்வதில்லை என்ற ஏக்கம் எப்போதும் இவர்களை வாட்டும்.


இதுவே லக்னத்துக்கு ஒன்பதாமிடத்தில் ராகு இருந்தால்,இவருக்கு அப்பாவழி முன்னோர்களின் பிள்ளைகள் விரோதிகளாக இருப்பர்;அல்லது அப்பாவழி பூர்வீக சொத்துக்கள் அழிந்து போயிருக்கும்;அல்லது பூர்வீக சொத்து தொடர்பாக வழக்குகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்.எவருக்கும் உரிய பூர்வீக சொத்துக்கள் கிடைக்காது;கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமான சொத்துக்கள் இருந்தாலும் இதே சூழ்நிலைதான்!
லக்னத்துக்கு ஒன்பதாமிடத்தில் கேது இருந்தால்,அந்த ஜாதகருக்கு அம்மா மற்றும் அப்பாவழி முன்னோர்களின் பித்ரு சாபம் இருப்பதாக அர்த்தம்.


சரி! பித்ரு சாபம் அல்லது ப்த்ரு தோஷம் எப்படி உண்டாகிறது?


 ஒவ்வொரு தலைமுறையிலும் தற்கொலை மற்றும் கொலை நடைபெறத்தான் செய்கிறது.இவ்வாறு செயற்கையான முறையில் இறந்தவர்களின் ஆத்மாக்களுக்கு மறுபிறவி இல்லாமல் அலைந்து கொண்டிருக்கும்;அவர்களின் நான்காம் ஐந்தாம் தலைமுறையினரை இது பீடிக்கும்.பாட்டன் காலத்து சொத்தை மட்டுமா நாம் அனுபவிக்கிறோம்? இல்லை பாட்டன் காலத்து பாவங்களையும் சேர்த்துத் தான் அனுபவிக்கிறோம்.சுலபமாக விளக்கம் இதோ:
எனது அப்பாவின் தாத்தாவின் சகோதரி அவரதுபிறந்த ஜாதகப்படி 71 வயது வரை வாழ வேண்டியவர் என்று வைத்துக்கொள்வோம்;அவர் 17 ஆம் வயதில் குடும்ப கவுரவத்துக்காக கொலை செய்யப்பட்டாலோ/ குடும்ப விரோதத்தினால் வேற்று குடும்பத்தாரால் கொல்லப்பட்டாலோ,இறந்த அந்த தாத்தாவின் சகோதரி எங்கு கொல்லப்பட்டாரோ,அந்த இடத்தில் 71 ஆம் வயது வரை ஆவியாக இருப்பார்;முறைப்படி அவரது ஆயுள் முடிந்ததும்,எம லோகத்திற்கு ஓராண்டு வரை பயணிப்பார்;அங்கு அவர் 17 வயது முதல் 71 வயது வரையிலும் எந்த ஒரு நன்மை தீமைகளையும் அனுபவிக்க முடியாமல் இருந்தது கண்டு,அவர் விசாரணைக்கைதியாக ஒதுக்கி வைக்கப்படுவார்;இவ்வாறு இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு பரம்பரையில் ஐந்துபேர்களைத் தாண்டினால்,நான்காம்/ஐந்தாம் தலைமுறையில் இருந்து பித்ருதோஷம் வேலை செய்யும்.


ஒருவரின் ஜாதகத்தில் ராகு ,லக்னத்துக்கு 3,5,9 ஆம் இடங்களில் ஒன்றில் இருந்தால் அப்பாவழி பித்ரு தோஷம் என்றும்,கேது இந்த இடங்களில் இருந்தால் அம்மாவழி பித்ரு தோஷம் என்றும் அறியலாம்.இந்த ஜாதகருக்கு அப்பா வழி பித்ரு தோஷம் இருக்கிறது எனில்,இவரது அப்பாவின் உடன் பிறந்த சகோதரசகோதரிகளின் குழந்தைகளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இதே பித்ரு தோஷம் கண்டிப்பாக இருக்கும் என்பது நிச்சயம்.
இந்த பித்ரு தோஷம் நாம் சேர்க்கும் எந்த ஒரு புண்ணிய காரியத்தையும் நம்மிடம் சேர்க்காமல் தடுக்கும் சக்தி வாய்ந்தது;எனவே, பிதுர் தோஷம் நீக்கிட நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் அருகில் இருக்கும் விஜயாபதி என்னும் கடலோர கிராமத்தில் இருக்கும் ஸ்ரீவிஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவிலில் நவகலசயாகம் செய்ய வேண்டும்.


இந்த நவகலசயாகம் செய்த பின்னர்,100 நாட்களுக்குள் நீண்டகாலப்பிரச்னை தீரும்;இருப்பினும்,இந்த நவகலசயாகம் செய்த பின்னர்,ஓவ்வொரு அமாவாசைக்கும் நமது இருப்பிடத்தில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் 9 பேர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.இவ்வாறு 12 அமாவாசைகளுக்குச் செய்ய வேண்டும்.இதன் மூலமாக  நமது பித்ரு கடன் எனப்படும் பித்ரு தோஷம் நீங்கி,நமது வாழ்க்கை வளம் மிக்கதாக மாறிவிடும் என்பது அனுபவ உண்மை.

t_A

தமிழ்நாட்டில் இருக்கும் சித்தர்பீடங்கள்,சூட்சுமமாக இருந்து நம்மைக் காக்கும் மகான்களின் ஜீவசமாதிகளை வழிபடும் சூட்சும வழிபாட்டு முறை

Posted On July 29,2012,By Muthukumar


சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரையிலும், ஆவி வழிபாடுதான் நமது தமிழ்நாட்டில் இருந்துவந்தது.அக்காலத்தில் இருந்த ஆன்மீக அருளாளர்கள் " கலிகாலத்தில் மனிதர்களின் வாழ்க்கை,சிந்தனை முறை எப்படி இருக்கும்?" என்பதை சிந்தித்தன் விளைவாக ஆவி வழிபாட்டு ஸ்தலங்களான ஜீவசமாதிகள் மற்றும் சித்தர்களின்  ஜீவசமாதிகளை கோவில்களாக மாற்றினார்கள்.எந்த மகான் எந்த கடவுளின் மீது பிரியமாக இருந்தாரோ, அல்லது எந்த கடவுளை வழிபட்டாரோ அந்த தெய்வத்தின் சிலை அவரது ஜீவசமாதியின் மீது அல்லது அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.பெரும்பாலான மகான்களும்,சித்தர்களும் சிவனை வழிபட்டிருக்கின்றனர்.அபூர்வமான சிலர் விநாயகரையும்,முருகக்கடவுளையும்,சக்தியையும்,முனீஸ்வரரையும், கருப்பசாமியையும் வழிபட்டிருக்கின்றனர்.அதனால்,அந்த ஜீவசமாதிகளின் மீது அல்லது அருகில்(ஒரே கோவிலுக்குள்) உரிய தெய்வங்கள் சமைக்கப்பட்டு,கோவில்களாக மாற்றப்பட்டுள்ளன.

உதாரணமாக சித்தர் போகரின் வழிபாடு முருகக்கடவுளின் வழிபாடு ஆகும்.அதனால்,பழனிமலையில் முருகக்கடவுளின் கோவில் உருவானது.நாம் பழனி முருகக்கடவுளை தொடர்ந்து,முருகக்கடவுளின் வழிபாட்டுமுறைகளுக்கு ஏற்றவாறு வழிபட்டால்,போகர் அகமகிழ்ந்து,நமது கோரிக்கைகளை நிறைவேற்றுவார்;பிரச்னைகளைத் தீர்ப்பார்;நோய்களைக் குணப்படுத்துவார்;துன்பங்களை நீக்குவார்;

 ஜீவசமாதிகளை நாம் எப்படி வழிபட வேண்டும்?

முழுக்க முழுக்க ரோஜாப்பூக்களால் கட்டப்பட்ட மாலை,ஒருகிலோவுக்கு குறையாமல் டையமண்டு கல்கண்டு,அரை கிலோவுக்குக் குறையாமல் விதையில்லாத கறுப்பு திராட்சைப்பழங்கள்,கொஞ்சம் விதையில்லாத பேரீட்சைப்பழங்கள் இத்துடன் கொஞ்சம் வெற்றிலையும்,கொட்டைப் பாக்கும்,சந்தனபத்திக் கட்டும்,ஆறு நாட்டு வாழைப்பழங்களும் கொண்டு வந்து பத்தி பொருத்தி,தேங்காய் உடைத்து,கற்பூரம் கொளுத்தி,சிகப்பு ரோஜாக்களால் கட்டப்பட்ட மாலையை ஜீவசமாதியில் உள்ள தெய்வச்சிலைக்கு அணிவிக்க வேண்டும். நெய்தீபம் ஜீவசமாதியின் முன்பு ஏற்ற வேண்டும்.
                    
எந்த எந்த நாட்களில் ஜீவசமாதி வழிபாடு செய்யலாம்?
பகைவரோடு போராடி,போராடி களைத்துபோன நேர்மையாளர்கள், தங்களது நியாயமான பிரச்னைகள் தீர திங்கட்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் இவ்வாறு 8 திங்கட்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்ய வேண்டும்;
குலதெய்வம் தெரியாதவர்கள்,குலதெய்வத்தின் கோபத்துக்கு ஆளானவர்கள்,குலதெய்வ வழிபாட்டை மறந்தவர்கள்,குல தெய்வத்தை அறியாமல் இருந்து ,அதனால் கஷ்டப்படுபவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 7 மணிக்குள் இவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்;இப்படி 8 செவ்வாய்க்கிழமைகளுக்கு தொடர்ந்து ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும்;

வேலைக்குப் போய்க்கொண்டிருப்பவர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய விரும்புவோர்,புதன் கிழமைகளில் மாலை 5 மணிக்கு மேல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவ சமாதி வழிபாடு செய்ய வேண்டும்;இவ்வாறு தொடர்ந்து 8 புதன்கிழமைகளுக்குச் செய்து வர ,நல்ல பொருளாதாரத் தன்னிறைவை அடைய முடியும்.
தனது ஆன்மீக முன்னேற்றத்திற்கு தகுந்த குருவைத் தேடுபவர்கள்,வியாழக்கிழமைகளில் மாலை 5 முதல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும்.இப்படி 8 வியாழக்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்தாலே போதுமானது;
பணரீதியான பிரச்னைகள் இருப்போர்,பண நெருக்கடியில் இருப்பவர்கள் அதிலிருந்து மீள வெள்ளிக்கிழமை மாலை 5 முதல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும்.இப்படி தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்தாலே போதுமானது;

பண நெருக்கடி,தொழில் மந்தநிலை,குடும்பப் பிரச்னைகள் என எல்லாவிதமான பிரச்னைகளும் தீர விரும்புவோர் சனிக்கிழமை மாலை 5 முதல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவசமாதி வழிபாடு செய்துவர வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 8 சனிக்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்துவிட்டாலே போதுமானது.

நீண்டகாலமாக வழக்குடன் போராடிக்கொண்டிருப்பவர்கள்(எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சரி) ஞாயிறு மாலை 5 முதல் 7 மணிக்குள் மேற்கூறியவாறு ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 8 ஞாயிற்றுக்கிழமைகளுக்கு வழிபாடு செய்தால் போதுமானது.

இந்த ஜீவசமாதி வழிபாடு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சரி,அவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்தியாக வேண்டும்;இது ரொம்ப முக்கியம்.முட்டை,முட்டை கலந்த கேக்,புரோட்டா என மறைமுக அசைவ உணவுகளையும் தவிர்த்துவிட்டே இந்த ஜீவ சமாதி வழிபாடு செய்ய வேண்டும்.யார் எந்த ஊரில் இருக்கிறார்களோ,அந்த ஊரில் இருக்கும் ஏதாவது ஒரு ஜீவசமாதியில் இந்த வழிபாடுகளை முடிக்கலாம்;துக்கம்,பிறப்பு முதலியவற்றால் தொடர்ந்து 8 வாரங்கள் செய்ய முடியாவிட்டாலும்,விட்டு விட்டு செய்தாலும் போதுமானது.அதே சமயம் 8 வாரத்துக்கு மேல் இந்த ஜீவ சமாதி வழிபாடுகளை பின்பற்றக் கூடாது.எச்சரிக்கை!!!


ஓம்சிவசிவஓம்

சதுரகிரி:மூலிகைகளின் உறைவிடம்

Posted On July 29,2012,By Muthukumar



சதுரகிரியில் இருக்கும் மூலிகைகளில் சில

கல்தாமரை என்ற மூலிகை சதுரகிரியில் இருக்கிறது.இந்த கல்தாமரையின் கிழங்கு அதன் வேர்களில் இருக்கும்.ஒவ்வொரு கிழங்கும் பூசணிக்காய் அளவுக்குப் பெரியதாக இருக்கும்.இந்த கிழங்கை அந்தக் காலத்தில் சித்தர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இந்தக் கிழங்கின் மேல் நின்று வானத்தைப் பார்த்தால் அதுவும் பகலில் பார்த்தால் நட்சத்திரங்கள், நவக்கிரகங்கள் கண்ணுக்குத் தெரியும்.இந்தக் கிழங்கைப் பயன்படுத்தித்தான் கிரக சஞ்சாரத்தை சித்தர்கள் கண்டறிந்தனர்.

இதுதவிர,மனித உடலை வெட்டினால் அந்த வெட்டுப்பட்ட உறுப்பை ஒட்ட வைக்கும் மூலிகை சதுரகிரியில் இருக்கிறது.நமது நினைவுகளை மறக்கடிக்கும் மூலிகையும் இங்கே இருக்கிறது.

இறவாத நிலையைத் தரும் மூலிகையும் சதுரகிரியில் இருக்கிறது.சதுரகிரியின் மொத்த மலைப்பரப்பைப் பற்றியும் போகர் 7000 என்ற புத்தகத்தில் பாடல்களாக துல்லியமாக விவரித்துள்ளார்.

உதாரணமாக, அத்தி ஊற்றிலிருந்து கூப்பிடுதூரத்தில் பரத்வாஜ மகரிஷியின் ஆசிரமம் இருக்கிறது.சின்னப் பசுக்கடையிலிருந்து அம்பெய்யும் தூரத்தில் சித்தர்களின் குளிக்கும் அருவி இருக்கிறது.இப்படி மொத்த சதுரகிரியையும் பாடல்களாகவே எது எவ்வளவு தூரம் என்பதை வரைபடமாக விவரித்துள்ளார் போகமகரிஷி!!!!

மனக்கண்ணை திறந்து வையுங்கள்!

Posted On July 29,2012,By Muthukumar
பூனை கண்ணை மூடிக் கொண்டால் பூலோகம் இருண்டுவிடுமா என்ன?
இந்தப் பழமொழியை அநேகமாக நீங்கள் எல்லோருமே கேள்விப்பட்டிருப்பீர்கள். பூனை கண்களை மூடிக் கொண்டால் உலகம் இருட்டாகிவிடாது என்பது உண்மைதான். ஆனால் பூனைக்கு எல்லாமே இருட்டாகத்தான் இருக்கும் அல்லவா? யார் என்ன சொன்னாலும் அதுவாகக் கண்ணைத் திறந்து பார்க்கும் வரை உண்மை அதற்குத் தெரியாதல்லவா?
இந்தப் பூனை போன்றதுதான் நம் மனமும். அதில் ஒரு விஷயத்தைப் பதித்துவிட்டால், பிறகு யார் என்ன சொன்னாலும் அது தன்னை மாற்றிக் கொள்வது கடினம். அதனால், ஆழ்மனதில் ஒரு விஷயத்தைப் பதிக்கும்போதே நாம் பலமுறை யோசித்து சரியான கட்டளையை மட்டுமே அதில் பதிப்பது நல்லது.
அரோக்யமாக இருந்த பெண்மணி திடீரென்று உடல்நலம் குன்றிப் போனார் என்று. உறவினர் ஒருவர் அவளிடம் காரணம் கேட்டார்? தன் உடல்நலக் குறைவுக்கு அவள் சொன்ன காரணம் என்ன தெரியுமா?
என் மகள் உடல் நலமில்லாமல் ஊரில் இருந்து வந்திருந்தாள். அவள் கஷ்டப்படும்போது நான் மட்டும் ஆரோக்யமாகவா வலம் வருவது என நினைத்தேன். நானும் கஷ்டப்படுவதுதான் சரி என்று அப்படியே இபுருப்பதாக நினைக்க ஆரம்பித்தேன். இப்போது அவள் குணமடைந்துவிட்டாள். ஆனால் என்னால்தான் அந்த மனநிலையில் இருந்து மாற முடியவில்லை.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். எந்த நோயும் இல்லாத ஒருவர் நோயாளியாகத் தன்னை நினைத்து நினைத்து நிரந்தர நோயாளியாகவே ஆகிவிட்டார் என்றால் ஆழ்மனம் எப்படிப்பட்டது என்று உங்களுக்கே புரியும்.
நீங்கள் ஏதாவது கிராமத்துப் பக்கம் செல்பவராக இருந்தால் அதிகாலை வேளைகளில் ஒரு காட்சியை அங்கே பார்க்கலாம்.
இருள் விலகாத வேளையில், வைக்கோல் அல்லது ஏதாவது விவசாயப் பொருளைச் சுமந்தபடி மாட்டுவண்டி அசைந்தாடிச் சென்று கொண்டிருக்கும். அந்த வண்டியை சற்று நெருங்கிப் பார்த்தீர்கள் என்றால், வண்டியை ஓட்டுபவரின் கை கயிறைப் பிடித்தவாறு இருக்க, அவரோ உறங்கிக் கொண்டு இருப்பார். விடியலுக்கு வெகு நேரம் முன்பாகவே எழுந்துவிட்ட களைப்பு அவருக்கு. ஆனால் வண்டியை இழுக்கும் மாடு, தடம் மாறாமலும், எதிரே வரும் வாகனங்களில் மோதிவிடாமலும் சென்று கொண்டிருக்கும், அது எப்படி? ஓட்டுபவரின் கட்டுப்பாடு இல்லாமல் மாடுகள் வண்டியை இழுத்துச் செல்வது எப்படி?
பலமுறை பழகிவிட்டதால்தான் அல்லவா? உங்கள் மனமும் அப்படித்தான். ஒருமுறை பழகிவிட்டால் அதன்பின்னர் அதனை மாற்றுவது கடினம்.
உடல்நலம் முழுமையான ஆரோக்யத்துடன் இருக்கும் பலர், உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பது போலவும், ஏதோ நோய் வந்திருப்பது போன்றும் நினைத்து இல்லாத நோயை இருப்பதாகக் கருதி தங்கள் ஆரோக்யத்தைத் தாங்களே கெடுத்துக் கொள்வதும் இப்படிப்பட்டதுதான்.
படிப்பது, கேட்பது, பார்ப்பது இப்படிப் பல விஷயங்களை உள்வாங்குகிறது மனம். அதில் எதை அதனுள் பதிப்பது? எதை விலக்குவது? சரியாக வழிகாட்ட வேண்டியவர் நீங்கள்தான்.
உதாரணமாக சர்க்கரை நோயாளிக்கு அடிக்கடி பசிக்கும், தாகமும் எடுக்கும் என்று ஒரு விஷயத்தை நீங்கள் ஏதோ ஒரு புத்தகத்தில் படிக்கிறீர்கள். அல்லது யார் மூலமோ கேள்விப்படுகிறீர்கள்.
அதற்கு ஒரு சில நாட்களுக்குப் பின் ஒருநாள் ஏதோ காரணத்தால் உங்களுக்கு கொஞ்சம் அதிகமாகப் பசிக்கிறது. வெம்மை அதிகமாக இருப்பதால் தாகமும் எடுக்கிறது. ஆனால் உங்கள் மனம் உடனடியாக என்ன நினைக்கும் தெரியுமா?
“ஒருவேளை, நமக்கு சர்க்கரை நோய் வந்திருக்குமோ?’ என்ற எண்ணம்தான் முதலில் வரும். அதன்பிறகு நிஜமாகவே அடிக்கடி பசிப்பதாகவும் இன்னும் என்னவெல்லாம் அறிகுறிகள் உண்டோ அவையெல்லாம் தெரிவதாகவும் தோன்றும்.
ஒருசில நாட்கள் அதே பதட்டத்துடன் இருப்பீர்கள். மருத்துவரிடம் போனால், ஆமாம் என்று சொல்லிவிடுவாரோ என்று போவதையே தவிர்ப்பீர்கள்.
மெதுவாக அந்த நினைவே உங்கள் உடலில் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தும். மற்றவர்கள் வற்புறுத்தலால் டாக்டரிடம் செல்வீர்கள். எல்லா டெஸ்டுகளையும் செய்துவிட்டு அவர் சொல்வார், உங்களுக்கு எந்த நோயும் இல்லை. அடிக்கடி டென்ஷன் ஆவீர்கள் போலிருக்கிறது. அதனால் கொஞ்சம் அல்சர் வர ஆரம்பிக்கிறது அவ்வளவுதான்!
இப்போது சொல்லுங்கள், இல்லாத நோயை இருப்பதாக நீங்கள் நினைத்ததற்குக் காரணம் எது? உங்கள் மனம் தானே...!
இங்கே ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள். உங்கள் ஆழ்மனதை நேர்மறை எண்ணங்களை மட்டுமே பதித்துக் கொள்ளுமாறு பழக்கியிருந்தால், உங்களுக்கு இந்த சங்கடம் வந்திருக்காது அல்லவா?

பிரதோஷ மகிமை

Posted On July 29,2012,By Muthukumar
பிரதோஷம் அன்று நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்றைய தினம் நந்திகேஸ்வரரின் இரு கொம்புகளுக்கு இடையில் சிவபெருமான் திருநடனம் புரிவதாக ஐதீகம்.
ஒவ்வொரு நாளும் மாலை நான்கரை மணி முதல் ஆறு மணி வரை உள்ள காலம் பிரதோஷ நேரமாகும். இது `தினப் பிரதோஷம்' எனப்படும்.
சிவனை வழிபட ஏற்ற காலம் சாயரட்சை. அதிலும் சிறந்தது சோமவாரம். அதனினும் சிறந்தது மாத சிவாரத்திரி. அதனினும் சிறந்தது பிரதோஷம். பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுவதால் அதற்கு அவ்வளவு மகிமை உண்டு.
பிரதோஷ நேரத்தில் நாம் எந்த அபிஷேகப் பொருளைக்கொண்டு நந்திகேஸ்வரருக்கு அபிஷேகம் செய்கிறோமோ அதற்கு ஏற்ற பலன்கள் உண்டு. அவை...
பால் - நோய் தீரும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.
தயிர் - பல வளமும் உண்டாகும்
தேன் - இனிய சரீரம் கிட்டும்
பழங்கள் - விளைச்சல் பெருகும்
பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்
நெய் - முக்தி பேறு கிட்டும்
இளநீர் - நல்ல மக்கட்பேறு கிட்டும்
சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்
எண்ணெய் - சுகவாழ்வு கிட்டும்
சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்
மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்
நீங்களும் மேற்கண்ட பலன்களை பெற வேண்டும் என்றால், அந்த பொருட்களை பிரதோஷ பூஜைக்காக இயன்ற அளவு வாங்கிக்கொடுப்பது நல்லது.

Friday, July 27, 2012

குண்டலினி சக்தி என்பது . . . .

ஜெகத்தின் மூலதார சக்தியை குண்டலி னி சக்தி எனக் குறிப்பிடுகின்றார்கள். இந் த மூலதார குண்டலினி சக்தி ஒவ்வொரு மனிதனிடமும் மறைவான நிலையில் அமைந்திருக்கிறது. இந்த குண்டலினி சக் தி உடலில் பொருத்தியிருக்கும் இடத்தை முயற்சியின் அடிப்படையில் கண்டு பிடித் து இயக்கம் பெறச்செய்யும்போது மனிதன்  அசாதாரண சாதனைகளைச் செய்ய முடியும் என்பர்.
குண்டலினி சக்தி மனித உடலில் குடிகொண்டிருக்கும் இடம் முதுகெ லும்பின் முனையாகும். மூலா தாரம் என்று இதற்குப் பெயர். இந்த சக்தி சாதாரணமாக உறக்க நிலை யில் இருக்கும். ஒரு யோகி பிரா ணாயாமம் போன்ற யோக முயற்சி களின் மூலம் இந்த சக்தியை எழுப் புவார். இந்தச் சமயத்தில் ஒருமை ப்பட்ட மனக்கண்களின் மூலம் தான் வழிபடக்கூடிய தெய்வத்தின் திரு உருவத்தை மிகவும் தெளிவாக தரி சிக்க இயலும். இவ்வாறு எழுப்பப்பட்ட குண்டலினி சக்தி இறுதியில் அனல் கொழுந்து வடிவம் பெறும்.

மனிதனின் சூட்சும தன்மை - மனிதன் சூட்சும பொறிகளை உடையவன்

Posted On July 27,2012,By Muthukumar
உலகில் உள்ள நமது பௌதீக உணர்வுகளால் அறியக்கூடிய எல்லாவற்றிற்கும் அடிப்படையாக சூட்சுமம் செயற்படுகிறது என்பது பற்றிசென்ற பதிவில் பார்த்தோம். இன்று மனிதனில் இந்த சூட்சுமத்தினை உணரக்கூடிய தன்மை உண்டா? என்பது பற்றிப் பார்ப்போம். 

சென்ற பதிவின் அடிப்படையில் மனிதனின் எந்தவொரு ஸ்தூல உணர்விற்கும் நிகரான சூட்சும உணர்வு இருத்தல் வேண்டும் என்பதனை அனுமானித்திருப்பீர்கள். 

மனிதன் உணர்வு எதன் மூலம் செயல் கொள்ளுகிறது, அதாவது கண் மூலம் பார்க்கிறோம் என்றால் கண் ஒளியினை ஏற்று மூளையில் செலுத்த மூளை அதனை படமாக்க அதனை உணர்வது மனம். மனதிற்கு உணர்வினை தருவது எது? ஆன்மா. 

மனமும் ஆன்மாவும் எமது பௌதீக கருவிகளால் உணரமுடியாதவை, அவை எப்படி தோற்றம் பெற்றது என்பது பற்றி எமது முன்னோர்கள் கூறுகிறார்கள். 

"மனித உடல் மூலப்பிரகிருதியால் ஆனது போல மனித மனமும் பிரபஞ்ச மனமாகிய மூலத்திலிருந்தே தோற்றம் பெற்றது, அதுபோல் ஆன்மா பரமான்மா எனப்படும் இறைவனில் இருந்து தோற்றம் பெற்றிருக்க வேண்டும். அதாவது சுருக்கமாக சொன்னால் எமது பௌதீக, சூட்சும கரணங்களுக்கு சரியான பிரபஞ்ச கரணங்கள் எம்மைச் சூழ, எம்மில் கலந்து உள்ளது என்று உணர்ந்திருந்தனர். இதையே "அண்டத்திலுள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு" என்று சித்தர்கள் கூறிவைத்தார்கள். இந்த சூஷ்ம நிலையினை உணர்ந்த முன்னோர்கள் இது ஏழு படிமுறைகளில் செயல் கொள்வதாக அறிந்துள்ளனர். இவற்றையே ஏழு உலகங்கள் என வர்ணித்து வைத்தார்கள், அவற்றின் தொடர்பினை ஏற்படுத்தும் மையங்கலே உடலில் உள்ள மூலாதாரம் முதல் சகஸ்ராரம் வரையிலான ஏழு ஆதாரங்களாகும். 

சாதாரணமாக மனிதனிற்கு பௌதீக உலகத்துடன் தொடர்பு கொள்ள கூடிய புலன்கள் மட்டுமே வளர்ச்சியடைந்திருக்கும். குண்டலினி யோக மொழியில் சொல்வதானால் மூலாதார சக்கரம் மட்டுமே விழிப்படைந்திருக்கும். ஆனால் இன்றைய நிலையில் பலர் தமது மூலாதாரசக்கரத்தினை பாழ்படுத்திய நிலையிலேயே வாழ்ந்து வருகிறார்கள். இது பற்றி தனிக்கட்டுரைத் தொடரில் ஆராய்வோம். இங்கு கூறவருவது மனிதனில் சூட்சுமப் பொறிகள் உண்டு என்பதே!

சுருக்கமாக கூறுவதானால் 
  • மனிதனது பௌதீக உடலையும் தாண்டி மனிதனுக்கு சூட்சும உலகுடன் தொடர்பு கொள்ளும் ஆற்றல் உள்ளது.
  • அந்த ஆற்றல் மனதாலும், ஆன்மாவாலும் கட்டுப்படுத்தப்படுகிறது.
  • இந்த சூட்சும உலகு ஏழு படி நிலையில் உள்ளது, இதனையே ஏழு உலகங்கள் எனக் குறிப்பிடுகிறார்கள். இந்த ஏழு உலகங்களே காயத்ரி மந்திரத்தின் வ்யாக்ருதிகள் எனப்படும் பூர், புவஹ, ஸ்வஹ, மஹ, ஜன, தப, ஸத்யம் எனப்படுவன. சாதாரண காயத்ரியில் முதல் மூன்று வ்யாக்ருதிகளே உச்சரிக்கப்படும், காயத்ரி மந்திரத்தின் உண்மையான பயன்பாடே மனித பரிணாமத்தினை ஒவ்வொரு உலகமாக உயர்த்தி ஸத்யமாகிய பரமான்வுடன் ஒன்றுவதுதான் அல்லது சூட்சும உலகுடன் தொடர்புகொள்ளும் முறையினைக் கூறுவது.  சாதாரண நிலையில் பூர்- பூமி, புவஹ - பிராண உலகம், ஸ்வஹ - மானச உலகம் இவற்றை தொடர்பு கொள்ளும் சக்தியினைத்தரும், ஏனெனில் இவை மூன்றுமே மனித வாழ்வில் உடனடி தொடர்பில் உள்ளவை, இதற்கு மேலுள்ள உலகங்கள் ஆன்ம சக்தி வலுப்பெற்றவர்கள் மாத்திரமே தொடர்பு கொள்ளக்கூடியவை. காயத்ரி மந்திர சாதனை மூலம் சூஷ்ம உலகுடன் தொடர்புகொள்ளும் முறை பற்றியும் வேறொரு பதிவில் பார்ப்போம்.
  • ஆகவே மற்றைய உலகுடன் தொடர்பு தொடர்பு கொள்ள எமது சூஷ்ம உடலில் உள்ள மேற்கூறிய ஏழு நிலைகளை செயல் படுத்தினால் அந்தந்த நிலைக்கு ஏற்ற சூட்சும பார்வை, புலனுணர்வுகள் ஏற்படும். 
  • பௌதீக பார்வையினை பெற கண்களும் மூளையும் நரம்பும் உள்ளது போல், சூஷ்ம பார்வையினை பெற மனம், புத்தி, சித்தம், அஹங்க்காரம் என்ற அந்தக்கரணங்கள் உள்ளன. 
  • உதாரணமாக கனவு நிலையில் எமது கண்கள் செயற்படுவதில்லை, ஆனால் காட்சிகளை காண்கிறோம், எப்படி? சித்தமாகிய ஆழ்மனதில் பதிந்த எண்ணப்பதிவுகள் உறக்க நிலையில் மனதில் செயற்பட்டு காட்சிகளாகின்றது, அதனை புத்தியும் அஹங்காரமும் ரசிக்கின்றன. இதுபோல் குறித்த சூட்சும உலகில் ஒருவிடயத்தினைப் பற்றி மனதினை இருத்தி ஆன்மசக்தியினை செலுத்தினால் அந்த உலகத்திற்கான காட்சியினை காணலாம்.
  • எப்படியெனில் ஒருவருடைய கர்மா என்ன என அறிய முதலில் எமது பிராண, மன உடலில் கவனத்தினை செலுத்தி பின்னர் அதன் மூலம் ஒருவரை தொடர்பு கொள்ள அவரது கர்மா பற்றிய சம்பவங்கள் மனதில் திரைப்படம் போன்று ஓடத்தொடங்கும். 
  • இந்த அடிப்படையிலேயே சூட்சுமப் பார்வை செயற்படுகிறது. இதனையே சூஷ்ம திருஷ்டி எனக் கூறுவர்.

வரலட்சுமி விரதம்

Posted On July 27,2012,By Muthukumar
கயிலாயத்தில் ஒருமுறை சிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடும் போது உமாதேவி தான் வெற்றி பெற்றதாகக் கூற சிவன் மறுத்தார்.
இருவருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது.
இறுதியில் கணதேவனான சித்திரநேமியை அழைத்துப் பார்க்கச் சொல்ல, அவனோ சிவனே வெற்றி பெற்றார் என்று சொல்லிவிட்டான்.
கோபம் கொண்ட பார்வதி, “நீ பொய் கூறியதால், பெருவியாதியுடன் பூலோகத்தில் வாழ்வாயாக’ என சித்திரநேமியை சபித்தாள்.
அதிர்ந்த சிவபெருமான் தன்னால்தானே சித்திரநேமிக்கு இந்த நிலை ஏற்பட்டதை உணர்ந்து, அதற்குரிய சாப விமோசனத்தை பார்வதியே கூறவேண்டும் என்று பணித்தார்.
பார்வதியும், “பூலோகத்தில் புண்ணிய நதிக்கரையில் தேவலோகத்து கன்னிப் பெண்கள் புண்ணியமான ஒரு விரதத்தை அனுஷ்டிப்பார்கள். அந்த விரதத்தின்போது நடத்தப்படும் ஹோமத்தின் புகை உன்மீது பட்டால், உன் நோய் நீங்கும்’ என்றாள் சித்திரநேமியிடம்.
சாபத்தின்படி சித்திரநேமி நோயால் பீடிக்கப்பட்டு பூலோகம் வந்து புண்ணிய நதிக்கரையில் வாழ்ந்து வந்தான்.
ஒருநாள் தேவமங்கையர்கள் நதிக்கரைக்கு வந்து பூஜை செய்வதைப் பார்த்து அவர்களிடம் விரதம் பற்றி விளக்கம் கேட்டார்.
சிரவண மாதத்தில் சுக்லபட்ச வெள்ளிக்கிழமையில் அனுஷ்டிக்கப்பட வேண்டிய அந்த விரதத்தைப் பற்றி கூறினர். மகாலட்சுமிக்குரிய அந்த விரதத்தை அனுஷ்டிப்பதால் கிட்டும் நன்மைகளையும் சொல்லினர்.
அனைத்தையும் கேட்ட சித்திரநேமி அவர்களோடு சேர்ந்து தானும் விரதம் இருந்தான். அப்போது நடத்தப்பட்டஹோமத்தின் புகை பட்டதில், சித்திரநேமியின் நோய் அகன்றது. தொடர்ந்து அதே பூஜை செய்து ஐந்து வித தர்மங்களைச் செய்த சித்திரநேமி, எல்லா சௌபாக்யங்களுடனும் கயிலாயம் சென்றான்.
வரலட்சுமி விரத நியதிகள்...
ஆடி அல்லது ஆவணி மாதம் பௌர்ணமிக்கு முன் வரக்கூடிய வெள்ளிக்கிழமையன்று சுமங்கலிகள் இந்த விரதத்தைக் கடைப் பிடிப்பார்கள்.
அன்றைய தினம் பசுஞ்சாணத்தால் வீடு மெழுகி கோலமிட்டு வீட்டிலுள்ள அனைவரும் குளித்து சுத்தமாக இருக்க வேண்டும். விரதமிருக்கும் பெண்கள் கண்டிப்பாக உபவாசம் இருக்க வேண்டும்.
பூஜையறையில் மண்டபம் போல் மேடை அமைத்து, அம்மண்டபத்தில் தரையில் நெல்லைப் பரப்பி அதன் மீது தாம்பாளத்தினை வைத்து அதில் அரிசியைப் பரப்பி, அதன் மேல் வெள்ளி அல்லது செம்பால் செய்யப்பட்ட கலசத்தில் காதோலை, கருகமணி, வளையல் உள்ளிட்ட பொருட்களை இட வேண்டும். பின் அநத செம்பின் வாயில் மாவிலைகளைச் செருகி, கலசத்தின் மேல் தேங்காய் வைத்து செம்பிற்கும் தேங்காய்க்கும் மஞ்சள் பூசி சந்தனப்பொட்டு வைத்து குங்குமம் இட்டு பூச்சூடி அலங்கரித்து வைக்க வேண்டும்.
அந்தக் கலசத்தின் முன் வெள்ளியால் செய்த வரலட்சுமி முகத்தை செருகி வைத்து பூஜையைத் தொடங்கி விரதத்துக்கு வேண்டிய நோன்புக் கயிறை கலசத்தின் மீது சாத்த வேண்டும்.
பிறகு மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து கற்பூரம் ஏற்றி பிள்ளையாருக்கு தூப தீபம் காட்டி வழிபட்ட பின் வரலட்சுமி பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
தீபங்கள் எரிய, ஊதுபத்திகள் மணம் பரப்ப, சுமங்கலிப் பெண்கள் தோத்திரப் பாடல்களைப் பாடியோ மந்திரங்கள் கூறியோ குங்குமத்தாலோ புஷ்பத்தாலோ அர்ச்சனை செய்யலாம். வேதம் அறிந்தவர்களை வைத்தும் பூஜை நடத்தலாம். “வரலட்சுமி வருவாயம்மா’ என்ற பாட்டைப்பாடி தேவியை உங்கள் இல்லாம் தேடி வரும்படி வேண்டுவது சிறப்பு.
நிவேதனப் பொருள்கள், சர்க்கரைப்பொங்கல், கொழுக்கட்டை பலகாரங்கள், சுண்டல் செய்து பழங்கள் வைத்துப் படைக்கலாம். பஞ்சபாத்திரத்தில்நீரில் துளசி போட்டு தீர்த்தமாக அனைவரும் பருகி நோன்புக் கயிறை கையில் கட்டிக் கொள்ள வேண்டும். சுமங்கலிப் பெண்களை வரவேற்று மங்களப் பொருட்களுடன் குங்குமம் வழங்கி ஆசிர்வாதம் பெற வேண்டும்.
இந்த வரலட்சுமி விரதத்தை முறையாகக் கடைப்பிடித்தால் கணவனுக்கு ஆயுள் பலமும் பெண்களுக்கு மாங்கல்ய பலமும் அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும். இதோடு சுமங்கலி பூஜையும் செய்யலாம்.
ஒன்பது சுமங்கலிப் பெண்களை வரிசையாக நிறுத்தி, அவர்கள் பாதங்களின் கீழ் தாம்பாளத் தட்டு வைத்து நீரிட்டு அவர்களின் பாதங்களைக் கழுவி மஞ்சள், சந்தனம் பூசி, பொட்டிட்டு, மலர் தூவி வணங்கி அவர்களை அமர்த்தி இலைபோட்டு வடை பாயசத்தோடு உணவு படைத்து வழியனுப்ப வேண்டும்.
இவ்விரதம் இருப்பதால் பெண்களுக்கு சுமங்கலி பாக்கியம் உள்ளிட்ட மேலான நற்பலன்களும், ஆண்களுக்கு அனைத்துவித நன்மைகளும் கிட்டும்.

குரு-சிஷ்ய பாவம்

Posted On July 27,2012,By Muthukumar
பண்டைய குருகுல முறைகள் இப்போது மறைந்து விட்டன.
குரு - சிஷ்ய பாவம் மறைந்து விட்டது.
ஆங்கிலக் கல்வியின் பெயரால் கல்லூரிகள் வெறும் பட்டதாரிகளையோ, காலிக் கும்பல்களையோ உற்பத்தி செய்கின்றன.
வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்கத்தை இன்றையக் கல்வி போதிக்கவில்லை.
ஐந்து வருஷம் பட்டப் படிப்புப் படித்தாலும் பயனில்லாத ஒரு கல்வியையே நாம் கட்டிக்கொண்டு மாரடிக்கிறோம்.
ஒழுங்கீனமே கல்லூரியின் பிரதான அம்சமாகக் காட்சியளிக்கிறது.
சில கல்லூரிகளுக்குள் எல்.எஸ்.டி. மாத்திரைகளும், விஸ்கி பாட்டில்களும், கஞ்சாவும் தாராளமாக நடமாடுகின்றன.
அண்மையில் சென்னையில் மிகப் பிரபலமான டாக்டர் ஒருவரிடம் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் வந்தார். தொடையில் ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைமையில் அவர் இருந்தார்.
அந்த டாக்டர் மருத்துவக் கல்லூரியோடு தொடர்புள்ளவர். அவருக்கு அந்தப் பெண்ணைப் பற்றித் தெரியும்.
`என்னம்மா, ஆபரேஷன் செய்யலாமா? இல்லை, ஒரு பெதடின் போட்டுக் கொள்கிறாயா?' என்று கேட்டார்.
`பெதடினே போடுங்கள், போதும்!' என்று கெஞ்சினார் அந்த இள நங்கை.
டாக்டர் ஆபரேஷனும் செய்யவில்லை; பெதடினும் போடவில்லை; அவரைத் திருப்பி அனுப்பிவிட்டார்.
இன்று கல்வியின் தரமும் கெட்டு, மாணவர்களின் ஒழுக்கமும் பாழ்பட்டு விட்டது.
ஆனால், அந்நாளில் இந்துக்கள் ஒரு வகையான குருகுலப் பயிற்சியை வைத்திருந்தார்கள்.
ராம கதையில் வரும் ராமனும், இலக்குவனும் குரு குலத்தில் பயின்றவர்கள்.
மகாபாரதத்தில் வரும் பீமனும், அர்ஜூனனும் குருகுலவாசிகள்.
இந்துப் புராணப் பாத்திரங்கள் அனைத்துமே குருகுலப் பயிற்சியில் வளர்ந்தவையே.
அதிருஷ்டவசமாக நானும் நான்கு ஆண்டுகள் குருகுல வாசம் செய்தவன்.
`குரு வாழ்க, குருவே துணை' என்ற சுலோகத்தைச் சொன்னவன்.
நான் பயின்ற அமராவதி புதூர் குருகுலத்தில், அதிகாலை ஐந்து மணிக்கு மாணவர்களை எழுப்பி விடுவார்கள்.
வகுப்பு வாரியாக மாணவர்கள் வரிசையில் அணிவகுத்து, வகுப்பு மானிட்டரின் தலைமையில் பின் பக்கத்துக் காட்டுக்குச் செல்வோம். அங்கே கலைந்து சென்று காலைக் கடன்களை முடிப்போம்.
பிறகு மீண்டும் வரிசையாக நின்று தியான மண்டபத்துக்குத் திரும்புவோம். அங்கே நான்தான் `பிரேயர்' பாட்டுப் பாடுவேன். மற்றும் சில மாணவர்கள் இரண்டொரு பாடல்கள் பாடுவார்கள்.
பிறகு கலைந்து சென்று எல்லோரும் கிணறுகளில் தண்ணீர் சேந்திக் குளிப்போம்.
சாப்பாட்டு விடுதியில் வரிசையாக அமர்ந்ததும், காலைப் பலகாரம் பரிமாறப்படும், அங்கேயும் சில கோஷங்கள் உண்டு.
அவற்றிலே கடைசி இரண்டு கோஷம், `காந்தியடிகள் வாழ்க! குருகுலம் நீடூழி வாழ்க!' என முடியும்.
அந்தக் கோஷம் முடிந்த பிறகுதான் எல்லோரும் சாப்பிடத் துவங்குவோம்.
சாப்பிட்டு முடிந்ததும் வகுப்புத் துவக்கத்துக்கான மணியோசை கேட்கும்.
வகுப்புகளுக்குள் நுழைவோம்.
பள்ளிப் பாடங்களுக்கிடையிலேயே தேச பக்தியையும், தெய்வ பக்தியையும், புகட்டுவார்கள். அன்றாடச் செய்திகளையும் சொல்வார்கள்.
மாலையில் விளையாட்டு; இரவிலே மீண்டும் தியானம்; படுக்கை.
காம்பவுண்டுச் சுவரைத் தாண்டி யாரும் வெளியே போக முடியாது.
எல்லோருக்கும் வரிசை நம்பர் உண்டு. நம்பரைச் சொல்லித்தான் கூப்பிடுவார்கள்.
என்னுடைய நம்பர் 498, `முத்து' என்பது என் பெயர்.
பாரதியின் கிளிப்பாட்டுகளை நான் அதிகம் பாடுவேன். அதனால் எனக்குக் `கிளிமுத்து' என்று பட்டம்.
உடம்பு இளைத்திருந்தால், `மீன் எண்ணெய்' கொடுப்பார்கள்.
ஓர் அழகான நூல் நிலையம் உண்டு.
சிறிய இரசாயனக் கூடம் உண்டு.
நான் பெரும்பாலும் நூல் நிலையத்தில் தான் காணப்படுவேன்.
இசை வகுப்புத் தொடங்கினார்கள்; அதில் நானும் சேர்ந்தேன்.
காலை நான்கு மணிக்கே எழுந்து பாடல் கற்றுக் கொள்ள வேண்டும்.
`சிதம்பர நாதா திருவருள் தாதா' என்பதே நான் கற்றுக் கொண்ட முதற் பாட்டு.
வித்வான் படிப்பு ஆரம்பித்தார்கள்; அதிலும் நான் ஒரு மாணவன்.
பத்துக்குப் பத்துச் சதுர அடியுள்ள நிலத்தை ஒவ்வொரு மாணவனுக்கும் கொடுப்பார்கள். அதில் அவனுடைய விவசாயத் திறமையைப் பார்ப்பார்கள்.
ஆளுக்கு ஒரு கன்றுக்குட்டி கொடுப்பார்கள். அதில் மாணவனுடைய கால்நடைப் பராமரிப்புத் திறமையைப் பார்ப்பார்கள்.
உள்ளேயே ஏராளமான கைத்தறிகள் உண்டு. மாணவன் அங்கே போய்த் தறி நெய்யக் கற்றுக் கொள்ளலாம்.
நான் அடிக்கடி அதில் தான் கவனம் செலுத்துவேன்.
ஒருநாள் ஒரு முழு வேட்டியையே நெய்து விட்டேன்.
நாங்கள் நெசவு செய்த வேட்டியைத்தான் நாங்கள் கட்டிக் கொள்வோம்.
சில தொழில் நெசவாளர்களும் அமர்த்தப்பட்டிருந்தார்கள். அதனால் வெளியில் துணி வாங்குவதே இல்லை.
வெளியிலே சுதந்திரப் போராட்டம் நடந்தது. உள்ளுக்குள்ளே அந்தக் கனலைக் குருகுலம் மூட்டிற்று.
1939 இல் இந்தி படிக்கும் பிரச்சினை எழுந்தது. குருகுலத்தில் இந்தி வகுப்பு ஆரம்பமாயிற்று. அன்றைக்கு நிர்வாகியாக இருந்த சுப்பிரமணிய நைனார் தான் இன்றும் இருக்கிறார்.
இந்தக் குருகுலம் போட்ட அடிப்படையில் தான் இன்றும் நான் உலாவிக் கொண்டிருக்கிறேன்.
அந்தக் குரு-சிஷ்ய பாவம், நாட்பட மறைந்து கொண்டே வருகிறது.
வாலாஜாபாத் இந்துமதப் பாடசாலையும், அமராவதி புதூர் சுப்பிரமணியம் செட்டியார் குருகுலமும் போன்ற சில மட்டுமே இன்னும் அதைக் கட்டிக் காத்துக் கொண்டு வருகின்றன.
வியாசர், வசிஷ்டர், விசுவாமித்திரர், துரோணர் போன்ற மகாத்மாக்கள் உற்பத்தி செய்த சீடர்களால் தான் இந்து மதம் செழித்துத் தழைத்தோங்கியது.
அந்தத் தத்துவ ஞான பீடத்தை கான்வென்ட் படிப்பு நிறுவ முடியாது.
பி.ஏ. படிப்பும், பி.எஸ்.சி. படிப்பும் மனிதனுடைய தார்மிக ஒழுக்கத்துக்குச் சம்பந்தமே இல்லாதவை.
குரு-சிஷ்ய பாவத்துக்குத் திரும்பினாலொழிய சராசரி வாழ்க்கையில் இனி நிம்மதி இருக்காது.
ஆசிரியரைக் கல்லால் அடிப்பது, அவதூறு பொழிந்து நோட்டீஸ் போடுவது, கல்லூரி மாணவியைக் கடற் கரையில் சந்திப்பது இவையெல்லாம் நாகரிகம் விளைவித்த கேடுகள்.
குரு-சிஷ்ய பாவத்தில் உடம்பும் உள்ளமும் பேணிக்காக்கப்பட்டன.
தேச பக்தியும், தெய்வ பக்தியும் சேர்ந்து ஊட்டப்பட்டன.
ஐந்து வயதில் இருந்தே தர்மம் தொடங்கியது.
அதனால் தான் மனிதனின் இல்லறம் கூட நல்லறமாக அமைந்தது.
வள்ளுவனுக்கு வாசுகியும், ராமனுக்குச் சீதையும், கோவலனுக்குக் கண்ணகியும் கிடைத்தார்கள்.
இன்றையப் போலி நாகரிகம் கணவன் மனைவியைக் கோர்ட்டிலே கொண்டு வந்து நிறுத்துகிறது.
சினிமா நடிகை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதும், முதற் கணவனுக்கு நஷ்ட ஈடு கொடுத்ததும், குழந்தைக்கு ஜீவனாம்சம் கொடுத்ததும் செய்திகளாகின்றன.
சந்திர மண்டலமல்ல; சூரிய மண்டலத்திற்கே மனிதன் போகட்டும். பழங்காலங்களில் இந்துக்கள் வகுத்த அடிப்படைத் தர்மங்களைக் கடைப் பிடித்தால் தான், அவன் நிம்மதியாக வாழ முடியும்.
அவற்றில் ஒன்றுதான் குரு-சிஷ்ய பாவம்.
இன்று எந்த மாணவன் ஆசிரியரின் காலைத் தொட்டு வணங்குகிறான்? தன் கால் செருப்பையல்லவா அவர் மீது வீசுகிறான்!
இவன் படித்தால் என்ன, படிக்காவிட்டால் என்ன? நவாபுகள் படையெடுப்பினாலும், ஆங்கிலப் படிப்பினாலும் நமது பாரம்பரிய தர்மம் நசிந்து விட்டது.
அதைக் காப்பாற்றுவதற்குப் பணம் படைத்தோர் செய்ய வேண்டிய முதற்காரியம், பழைய பாணியில் குரு குலங்களை ஆரம்பிப்பதே.

Thursday, July 26, 2012

எந்தெந்த மனங்களில் தைரியம் குடிகொண்டிருக்கும்?

அண்மையில் காஞ்சிபுரம் சென்றபோது திருவெஃகா என்ற கோயிலு க்குப் போனேன். இங்கு பெரு மாளின் பெயரே ரொம்ப வித்தி யாசமானது. ‘சொன்ன வண் ணம் செய்த பெருமாள்’ என்று பெயர், இங்கே துயில் கொண்டி ருக்கும் ரங்கநாதருக்கு. திரும ழிசை ஆழ்வார், இந்தக் கோயி லில் இருந்தபோது, தனக்குப் பணிவிடைகள் செய்த ஒரு கிழவியைச் சட்டென்று இளம் பெண் ஆக்கி விட்டாராம். இத னைக் கேள்விப்பட்ட அந்த நகரத்து அரசன் தன் கிழத்தனத்தையும் போக்குமாறு இவரது சீடன் கனிகண்ணன் மூலம் சொல்லி அனுப்பி னான். ஆழ்வார் மறுத்து விட்டார். அரசன் கோபம் கொண்டு சீடன் கனிகண்ணனையும் ஆழ்வாரையும் நகரத்தை விட்டு வெளியேற உத்தரவு போட்டான். திருமழிசை ஆழ் வார் கோயிலில் சயனக்கோல த்தில் இரு ந்த பெருமாளையும் ‘எழுந்திரு போகலா ம்’ என்று சொல் ல, அதன்படியே அவரும் தன் பாம்பணைப் படுக்கையைச் சுருட்டிக் கொண்டு உடன் சென்று விட்டாராம். இதைப் பார்த்து மற்ற தேவதை களும் உடன் சென்றுவிட, கோயில்கள் காலியா கிவிட்டன. அரசன் தன் தவற்றை உணர்ந் து ஆழ்வாரை அணுகி மன்னிப்புக் கேட்க , ஆழ்வார் திருமாலிடம் ‘சரி வாரும்; திரு ம்பச் செல்லலாம்’ என்று சொல்ல, அவ ரும் திரும்ப வந்து படுத்துக் கொண்டாரா ம்! இந்தக் கதையின் ஆதாரம், திரு மழிசை ஆழ்வார் பாடியதாகச் சொல் லப்படும் இரு தனிப்பாடல்கள்:
கனிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – துணிவுடைய
செந்நாப் புலவனும் செல்கின்றேன் நீயும் உன்றன்
பைந்நாகப் பாய் சுருட்டிக்கொள்.
-என்று முதல் பாடல் எழுதி, சமாதானம் ஆன பின் இரண்டாம் பாடல் எழுதினார்:
கனிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் – துணிவுடைய
செந்நாப் புலவனும் செலவொழிந்தான் நீயுழன்றன்
பைந்நாகப் பாய் படுத்துக்கொள்.
என்ன அழகான வெண்பா! இரு வெண்பாக்களிலும் உள்ள ‘துணிவு டைய செந்நாப் புலவன்’ என்ற சொற்றொடரில் என்ன ஒரு கம்பீரம்! சமண மதத்தில் மருள் நீக்கியாராக இருந்தவர் திருநாவுக்கரசராக மாறி சை வத்தில் சேர்ந்து விட்டார் என்று கேள்வி ப்பட்டதும் மன்னன் மகேந்திர பல்லவன் கோபப்பட்டான். அவரை விசாரணைக்கு அழைத்துவர ஆள் அனுப்பினான். கட் டளையைக் கொண்டு போன ராஜ தூதர் கள் அந்த மகா புருஷரைக் கொஞ்சம் அச்சுறுத்தினார்கள். ‘எனக்குத் தலைவன் சிவபெருமான்தான்; உங்களுடைய அரச ன் கட்டளையை நான் மதிக்க மாட்டேன்!’ என்று திருநாவுக்கரசர் கூறித் தூதர்க ளை திடுக்கிடச் செய்தார். ‘உம் மைச் சுண்ணாம்புச் காளவாயில் போடுவோம் ; யானையின் காலால் மிதிக்கச் செய்வோம், கழுத்திலே கல்லைக் கட்டிக் கடலில் போடுவோம்’ என்றெல்லாம் தூதர்கள் பயமுறுத்திய போது திருநாவுக்கரசர் ஒரு பாடலைப் பாடினார்.
‘நாமார்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளுந் துன்பமில்லை’
அரச கட்டளை வரும்போது ‘பணிவோமல்லோம்’ என்று கூறும் நெஞ்சத்தில் எத்தனை துணிவு! ‘ஒரு லோக்கல் கவுன்சிலரை எதிர் த்தால் வீட்டுக்கு ஆட்டோ வருமோ’ என்று பயப்படும் தலைமுறையி ல் வாழும் நமக்கு, எல்லாவற்றையும் துறந்த ஞானிகளின் தைரிய மும் வீரமும் ஆச்சரியமாகத் தான் தெரிகின்றன. சீக்கியர்களி ன் ஒன்பதாவது குரு, தேஜ் பஹ தூர். அவுரங்கசீப் டெல்லியை ஆட்சி செய்த காலம் அது. காஷ் மீரில் வசித்த இந்துக்க ளை கசையால் அடித்து மத மாற்றம் செய்து வந்தது அவுரங் கசீப்பின் அரசாங்கம். அந்த இந்துக்கள் தேஜ் பகதூரின் உதவியை நாடி னார்கள். ‘குருவை மதமாற்றம் செய்தால் எல்லா இந்துக்களும் மாறுகிறோம்’ என்று அரசரிடம் போய் சொல்லச்சொன்னார், குருதேஜ் பஹதூர் சிங். இத்தனைக்கும் அவர் இந்து அல்ல! ஆனால் அவரவர் மத நம்பிக்கைகள் அவரவர் களுக்கு இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இந்துக் கள் அரசரிடம் போய்ச் சொல்ல ஆணவம் பிடித்த சீக்கிய குருவை சங்கிலியில் பிணைத்து இரும்புப் பெட்டியில் பூட்டி எடுத்து வரச்சொ ல்லி உத்தரவு வந்தது. அப்படியே எடுத்து வரப்பட்ட சீக்கிய குரு சொல்ல முடியாத சித்திரவதைகளுக்கு ஆட்படுத்தப்பட்டார். இறுதி வரை எல்லா சித்திரவதைகளையும் இன்முகத்துடன் ஏற்று மதம் மாற மறுத்தார். டெல்லியின் நடுத்தெருவில் அவர் தலை வெட்டி எறியப்பட்டது. தோல்வி என்ன வோ மன்னன் அவுரங்க சீப்பிற் குத்தான்.
‘துறவிக்கு வேந்தன் துரும்பு’ என்ற நம் பழைய பொன்மொழி விலை மதிப்பற்றது. நம் எளிய சராசரி வாழ்வில் அச்சமே நமது ஆசாரமானது. அலுவலக த்தில் மேலதிகாரியிடம் பயம்; வீட்டில் வேலைக்காரர்களிடம் பயம்; அநீதியைக் கண்ணால் பார்த்தால் பயம்; பற்றியது விலகு மோ என்று பயம்; விலகியது பற்றுமோ என்று பயம்; கேட்டது கிடைத் தால் நிலைக்குமோ என்ற பயம் – என்று கிட்டத்தட்ட தெனாலி ஸ்டைலில் வாழும் நமக்கு, அரசன் ஒரு ஆணையிட்டபோதும் அதை மறுதலித்த மனத்தின் சிந்தனைப் பின்னல்கள் புரியவே புரியாது. இறைவனுக்கு தன்னை முழு வதுமே ஒப்புக்கொடுத்துவிட் ட மனதில்தான் இத் தைரியம் வரும்.
நவகாளியில் இந்து, முஸ்லிம் கள் கடும் போராட்டம். காந்தி உண் ணாவிரதம் இருக்கிறார். ராணுவத்திற்கும் அடங்காத கலவரம், ஒரு மெலிந்த கிழ வரின் உண்ணாவிரதத்தின் முன் ஒடுங்கியது. ஒரு இஸ்லாமியர் ஒரு ரொட்டியுடன் வந்தார். காந்தியின் மேல் அதைத் தூக்கி எறிந்தார். ‘ஏன் உண்ணாவிரதம் இருந்து எங்களை கொடு மைப் படுத்துகிறாய்?’ என்று கர்ஜித்தார். ‘என் குடும்பத்தையே ஒரு ஹிந்து கொன்றுவிட்டான். நான் கத்தியை எடுத்துப் போனேன். நாலு ஹிந்து குழந்தையைக் கொன்றேன். இன்னும் என் வெறி அடங்கவில்லை. இது அடங்காது. நீ உண்ணா விரதம் இருந்தால், என் கோபம் சரியாகுமா?’ என்று அலறினான். உண்ணாவிரதப் பந்த லில் மயான அமைதி நிலவியது. காந்தி மெலிந்த குரலில் பதில் சொன் னார். ‘அடங்கும். உன் கோபம் தணியு ம்.’ ‘எப்படி?’ என்றார், அந்த மனிதர். ‘கலவரத்தில் அநாதையான ஒரு ஹிந்துக் குழந்தையை எடுத்து வளர்த்து வா. உன் கோபம் அடங் கும்’ என்றார் காந்தி. உண்ணாவிரதத்தால் உடல் தளர் ந்து போன ஒரு கிழவரின் குரலில் என்ன கம்பீரம், என்ன சக்தி! வந்தவர் கொஞ்ச நேரம் சிலைபோல இருந்தார். விசும்பி விசும்பி அழுதார். ‘பாபு, நீங்கள் சொன்ன தையே நான் செய்வேன்’ என்று சொல்லி ச் சென்றார். ஆன்மிகத்தில் தோய்ந்து பதப்பட்ட மனமே அச்சங்களற்றது. ‘நா ளைப் பொழுதை நடத்த இறைவன் உண் டு’ என்ற நம்பிக்கை நிறைந்த சுகம் மனி தர்களைப் பார்த்து அஞ்சுவது இல்லை. பெரியோரை வியத்தலும் சிறியோரை இகழ்தலும் இல்லாத சமநிலை அந்த அகத்துக்கு மட்டுமே இயல்பு. எது சத்தியமோ அதை எந்தச் சூழ்நிலைக்கும் அஞ்சாது இனிய சொற் களால் கம்பீரமாகச் சொல்ல யாரால் முடிகிறதோ அவர்களே இந்தத் தேசத்தின் ஆன்மிகப் பேராற்றலை யுகயுகாந்திரங்களாகக் காத்து வருகின்றனர்.

ஆலயங்களில் கூடாதவை

Posted On July 27 ,2012,By Muthukumar

1. ஒரு பிரதட்சணம், ஒரு நமஸ்காரம்.
2. உடம்பைப் போர்த்திக்கொண்டு பிரதட்சணம், சமஸ்காரம் செய்தல். (பெண்கள் இதற்கு விதிவிலக்கு)
3. தனித்தனியாக ஒவ்வொரு தெய்வத்தையும் நமஸ்கரித்தல்.
4. பிரசாதத்தைத் தவிர வேறு உணவு வகைகளை கோவிலுக்குள் சாப்பிடக்கூடாது.
5. வீட்டு விலக்கு, சாவுத்தீட்டு போன்ற அசுத்த நிலையில் செல்லக்கூடாது.
6. கண்டகண்ட இடத்தில் கற்பூரம் ஏற்றக் கூடாது. விக்கிரங்களைத் தொட்டு வணங்கவே கூடாது.
7. கர்ப்ப கிரகத்தினுள் நமஸ்காரம் செய்யக்கூடாது.
8. கொடி மரம், நந்தி, பலி பீடம் இவைகளுக்கு குறுக்காகச் சென்று பிரதட்சணம் செய்யக்கூடாது.
9. தெற்கு முகமாக நமஸ்காரம் செய்யக்கூடாது.
10. தலைக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டோ, ஈரஆடையுடன் கூடவோ தெய்வ வழிபாடு செய்யக்கூடாது.
11. ஆலயத்தினுள், படுத்து உறங்குதல், அரட்டை அடித்தல், உரக்க சிரித்தல், அழுதல், தாம்பூலம் தரித்தல் போன்ற காரியங்களைச் செய்யக்கூடாது.
12. பொய் பேசுதல், மற்றவர்களை நிந்தித்தல், பெண்களிடம் தகாத முறையில் நடத்தல் போன்றவை கூடாது.
13. ஆலயத்தினுள் மனிதர்கள் யாருக்குமே நமஸ்காரம் செய்யக் கூடாது. ஆலயம், இறைவனுடைய இல்லம். இங்கு செய்யப்படும் மரியாதைகள் அனைத்தும் அவனுக்கு மட்டுமே உரியன.
14. ஆலயத்தின் உள்ளும், புறமும், மல ஜலம் மற்றும் சிறுநீர் கழிப்பது மகா பாவம்.
15. காலணிகள், தோல் பை மற்றும் மிருகத் தோலாலான எந்த பொருளுடனும் ஆலயத்தினுள் நுழையக் கூடாது.
16. கோவில் மூடிய நிலையில் இருக்கும் போதும் சுவாமி வீதியில் உலா வரும் போதும் கோவிலினுள் சென்று தரிசனம் செய்ய முயற்சிக்கக்கூடாது

Wednesday, July 25, 2012

உண்ணாவிரதம்

Posted On July 25,2012,By Muthukumar
உலகத்தில் அதிகம் சாப்பிட்டுச் செத்தவர்கள் உண்டே தவிர, குறைத்துச் சாப்பிட்டு மாண்டவர்கள் குறைவு.
ஒரு மகாராஜா சாப்பாட்டில் ஆழாக்கு நெய் ஊற்றிக் கொள்வார். ஆட்டுத் தலை தான் அதிகம் சாப்பிடுவார். கொழுப்புச் சத்துக்களை மிக அதிமாகச் சேர்த்துக் கொள்வார். ஆனால், வருஷத்தில் ஒரு மாதம் லங்கணம்!
உடம்பில் உள்ள கொழுப்பை இறக்குவதற்கு, அந்த ஒரு மாதத்தைப் பயன்படுத்திக் கொள்வார்.
இரண்டு பேர் தினமும் ஒருவகை எண்ணெய் போட்டு உடம்பைத் தேய்ப்பார்கள். இரண்டு வேளை உணவு. இரண்டு வேளையும் அரைக்கிலோ வெங்காயம் சாப்பிடுவார்கள்.
வெங்காயத்திற்கு இரண்டு குணங்கள் உண்டு: கொழுப்பைக் கரைக்கும். காம இச்சையைத் தூண்டும்.
அதனால் தான் நெய்யும், சர்க்கரையும் அதிகம் சாப்பிடுகிற பிராமணர், வெங்காயச் சாம்பார் சேர்த்துக் கொள்கிறார்கள்.
விதவைகள் வெங்காயம் சேர்ப்பதில்லை.
காஞ்சிப் பெரியவர்கள் ஒரு பிடி அவலிலும், பாலிலுமே காலம் கடத்துகிறார்.
வாரியார் சுவாமிகளும் அப்படியே.
மலையில் வாழ்ந்த சித்தர்கள், சமையல் செய்தா சாப்பிட்டார்கள்? காய், கனி, கிழங்கு கந்த மூலங்களோடு சரி.
இந்துக்கள் வாரத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
நான் சொன்ன மகாராஜாவைப் போல முஸ்லிம்கள் வருஷத்தில் ஒரு மாதம் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
இந்துக்களில் சிலர் திங்கட்கிழமை `சோமவார' விரதம்; சிலர் செவ்வாய் விரதம்; சிலர் சனிக் கிழமை விரதம்; அது போல மாதங்களும் உண்டு. அது ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.
சிலர் ஆடி மாதம் முழுக்க மாமிசம் சாப்பிட மாட்டார்கள். சிலர் புரட்டாசி.
என்னுடைய சுவீகாரத் தாயார், கார்த்திகை விரதி.
உணவு செரிமானத்தை ஒழுங்கு படுத்துவதே உண்ணா விரதத்தின் நோக்கம்.
இது இறைவன் பெயரால் வழங்கப்படும் தேக ஆரோக்கியம்.
தெய்வ பக்தியோடு இந்துக்கள் ஆரோக்கியத்தைக் கலந்தார்கள்; காந்தியடிகள் தேச பக்தியும் கலந்தார்.
உண்ணாவிரதத்தை ஒரு ஆயுதமாக்கி, தேச பக்திக்கு அதைப் பயன்படுத்தினார்.
தன்னை வருத்திக் கொள்ளும் அந்த முறையின் மூலம் அந்நிய அதிகார வர்க்கத்தை அவர் நடுங்க வைத்தார்.
அவரது தேக ஆரோக்கியத்திற்கும் கூட, அவர் மேற்கொண்ட உண்ணா விரதங்கள் பயன்பட்டன.
மகாகவி பாரதியார் சொல்வது போல் நிறையச் சாப்பிடக் கூடாது என்பதும் தவறு; நிறையச் சாப்பிட வேண்டும் என்பதும் தவறு. அளவறிந்து சாப்பிட வேண்டும்.
இப்போதெல்லாம் டாக்டர்கள் வாயுத் தொல்லை உள்ளவர்களுக்கு ஒரு யோசனை சொல்கிறார்கள். அதாவது `இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தரம் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டும்' என்று. `வயிறு காலியாகக் கிடப்பதால் தான் வாயு உற்பத்தியாகிறது' என்கிறார்கள்!
அது ஓரளவுதான் உண்மை.
வாயுவில் மூன்று வகை உண்டு.
ஒன்று காலியான வயிற்றில் உண்டாவது. மற்றொன்று உஷ்ண வாயு. இன்னொன்று பதார்த்த வாயு.
உஷ்ணமில்லாத உடம்பில், உண்ணா விரதத்தினால் வாயு உண்டாவதில்லை.
எப்போதுமே உண்ணாவிரதம் உடம்பை உற்சாகமாக வைத்திருக்கும்.
அது வரம்பு மீறிப் பசி பட்டினி என்று போகும் போது தான் களைப்புத் தோன்றும்.
இப்படி நான் சொல்வது, உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்களுக்கு மட்டுமே.
நல்ல உழைப்பாளிகள் சாதத்தை மலையாகக் குவித்து அதிலே ஒரு குளம் வெட்டிச் சாம்பார் ஊற்றி நீச்சலடிக்கிறார்கள். அவர்களுக்கும் தொந்தி விழுகிறது. ஆனால் அந்தத் தொந்தி ஒரு பெரிய யானையையே தாங்கும்.
நாம் எங்கே உழைக்கிறோம்...?
நான் கூடச் சாப்பாடு குறைகிறதே என்று வருத்தப்படுவது உண்டு. இப்போது முப்பது பவுண்டு இளைத்துவிட்டேன். உடம்பு இளைக்கிறதே தவிர, களைக்கவில்லை.
நடமாடும் சக்தி பலவீனப்படாமல் இருக்கும் அளவுக்கே உணவு.
ஆசையிலும், பசியிலும் சில நாட்கள் அதிகம் சாப்பிட்டு விட்டால், அதைச் சமன் செய்யவே உண்ணாவிரதம்.
தெய்வ பக்தியுள்ள எந்த இந்துவுக்கும் இந்த விரதம் உண்டு.
இந்துக்களில் அதிகமான பேர் கைக்கொள்வது முருகனுக்கு உகந்த சஷ்டி விரதம்.
இது மாதத்தில் இரண்டு நாள் வரும்.
எனது உயிருக்கு உயிரான புரவலர் திரு.சின்னப்பா தேவர், இந்த சஷ்டி விரதத்தை நாற்பது வருஷங்களாகக் கடைப்பிடித்தார்.
அதே சஷ்டியில், வைசாகத்தில், வெள்ளிக்கிழமையில் அவர் மரணம் அடைந்தார்.
வெள்ளிக்கிழமை விரதம், சஷ்டியைவிடப் பிரதானமானது.
பக்தியுள்ள இந்துக்கள் ஒரு மாதத்தில் நான்கு வெள்ளி, இரண்டு சஷ்டி- ஆக ஆறு நாட்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இது மாதத்தில் ஐந்தில் ஒரு பங்கு.
உடம்பு பலவீனம் அடையாமலும், அதே நேரத்தில் உடம்பு ஏறாமலும் இது காப்பாற்றுகிறது.
இன்னும் சில அதிசய இந்துக்கள் உண்டு. அவர்கள் ஒரு மாதம் முழுக்க உப்புச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
சிலர் நெய் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
உடம்பில் உப்போ, கொழுப்போ சேராமல் காப்பாற்ற எவ்வளவு அற்புதமான வழி!
இந்துமதம் ஆரோக்கியத்தையும், பக்தியையும் ஒன்றாக இணைத்தது.
`உடம்பு கெட்டுப் போனால் ஞானம் கை கூடாது' என்று அது கருதிற்று.
அதனால் தான் மருந்து மாத்திரைகள் இல்லாத காலத்திலேயே, நமது யோகிகளின் உடம்பு புடம் போட்டு எடுக்கப்பட்டது போலிருந்தது.
அவர்கள் படிக்கட்டில் ஏறினால் மூச்சு வாங்காது.
தண்ணீரில் நடந்து ஜலஸ்தம்பம் செய்வார்கள்.
காற்றைப்போல் துறுதுறுவென்று அலைந்தார்கள்.
`உண்ணா நோன்பு' என்பது ஒரு தவம்.
சிறு வயதில் இருந்தே அதை ஒரு பயிற்சியாகக் கொள்ள வேண்டும்.
முப்பது வயதுவரை கண்டதைத் தின்று விட்டால் வாய்வுத் தொல்லை வரும்.
அதன் பிறகு உண்ணாவிரதம் இருந்தால் வாய்வு அதிகமாகும்.
இளம் பருவத்தில் இருந்தே இந்தப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
நான் படித்த குருகுலத்தில் உண்ணாவிரதம் இல்லையே தவிர, உணவு முறையில் ஒழுங்கிருந்தது.
புதன் கிழமையும், சனிக்கிழமையும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, மாதம் ஒரு முறை பேதிக்குச் சாப்பிடுவது. அன்று காலைப் பலகாரம் கிடையாது; அங்கே எண்ணெய்ப் பலகாரங்கள் போட மாட்டார்கள்.
காலைப் பலகாரத்தையும், இரவுச் சாப்பாட்டையும் அளந்து தான் கொடுப்பார்கள்.
பசி உயிர் போனாலும் அந்த விரதத்தில் ஒரு ஆரோக்கியம் இருந்தது.
வாரத்தில் ஒருநாள் உண்ணாவிரதப் பயிற்சி, ஞானம் பெறுவதற்கான வழிகளில் ஒன்று.