Sunday, July 22, 2012

Sri Agasthiya Nama jebam - மகா குரு அகஸ்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)


Posted On July 22,2012,By Muthukumar
நமது கஷ்டங்களுக்குத் தீர்வு கிடைக்காதா என்று ஏங்குபவர்களுக்கு, மிகப் பெரும் அருமருந்தாக இருப்பது இறைவனின் நாம ஜெபம். இதே மாதிரி லிகித ஜெபம் என்று ஒன்றும் இருக்கிறது. பேப்பரில், பழைய டைரியில் , நோட்டுப் புத்தகங்களில் இறை நாமத்தை எழுதுவார்களே அதைத் தான் லிகித ஜெபம் என்று கூறுகிறார்கள். எனக்குத் தெரிந்த சில பிராமண குடும்பங்களில் வயதான அனைவரும், ஒரு நாளின் குறிப்பிட்ட நேரத்தை இதற்கெனவே ஒதுக்கி இடைவிடாமல் எழுதுகிறார்கள். இதனால் கிடைக்கும் சக்தி அபரிமிதமானது. அப்படி எழுதும் குடும்பங்கள் அனைத்திலும், பரிபூரண குடும்ப அமைதி நிலவுகிறது. அந்த குடும்ப வாரிசுகள் அனைவரும், இன்று நல்ல வேலையில், மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். காலம் கெட்டுக் கிடக்கும் சூழலில், ஒரு மனிதன் தவறான பாதைக்கு செல்ல நிமிஷ நேரம் போதும். அவ்வாறு செல்ல விடாமல் , இறையருள் தடுத்தாட்கொள்ள - இந்த லிகித ஜெபம் நிச்சயம் உதவும். 

மேலும், மனம் ஒன்றி எழுத எழுத - இறை சிந்தனை மேலோங்கும். நம்மை அறியாமலே , நாம் அந்த இறைவனின் நேரடிப் பார்வைக்கு உட்படுகிறோம்.
என்னுடைய சின்ன வயதில், என்னுடைய தகுதிக்கு கிடைக்கவேண்டிய சில அரிய வாய்ப்புக்களை ஸ்ரீ ராம ஜெயம் எழுதி சாதித்தேன். நடக்க வாய்ப்பே இல்லை என்று நினைத்த விஷயங்கள் கூட, ஒரு அதிசயம் போல நடந்த சம்பவங்களும் உண்டு. அப்படி மகத்தான வல்லமை இந்த லிகித ஜெபத்திற்கு உண்டு.
அந்த காலத்தில் ஆலயங்களுக்கு மூலவரை ஸ்தாபிக்கும்போது, எந்திரத் தகடுகளில் சில மந்திரங்களை எழுதி, அந்த மூலவருக்கு உரிய மூல மந்திரங்களை எழுதி ஸ்தாபனம் செய்வார்கள். விண்ணில் நிறைந்து இருக்கும் சக்தியை கும்பம் மூலம் ஆகர்ஷித்து , அதை உள் வாங்கி, தீப வழிபாட்டின்போது அதை வழிபடுபவர்களுக்கு கிடைக்க செய்வதில், இந்த மந்திரங்களுக்கு பெரும் பங்கு உண்டு.
இதைப் போன்ற மிக அரிதான வாய்ப்பு, ஒன்று நம்மைத் தேடி வந்து இருக்கிறது. விரைவில் ஸ்தாபனம் செய்யப்பட விருக்கும், மகான் ஒருவரின் சித்த ஜீவ சமாதிக்கு - சித்தர்களின் தலையாய சித்தரான , ஸ்ரீ மஹா குரு அகஸ்தியரின் லிகித நாம ஜெபம் தேவைப் படுகிறது.
நீங்கள் எழுத வேண்டிய மந்திரம் " ஸ்ரீ அகஸ்தியாய நம"
அகஸ்தியரின் அருளைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. நாம் யார், நமது முந்தைய பிறவிகளின் பாவ புண்ணியங்கள் , நாம் இந்த பிறவியில் எந்த நிலையில் இருக்கிறோம் , என்ன செய்ய விருக்கிறோம், அடுத்த பிறவியில் நம் நிலை என்ன என்பதை , முற்றும் அறிந்த மகா ஞானி அகஸ்தியப் பெருமான். அகஸ்திய தரிசனம் ஒன்று போதும். ஒரு கணப் பொழுதில் நம் கர்மங்கள் அனைத்தும் தொலைந்து போகும். நம் வாழ்வில் சிகரம் தொடும் அளவுக்கு சாதனைகள் செய்ய இயலும். நம்பி இந்த காரியத்தில் ஈடுபடுங்கள்.
நோட்டுப் புத்தகத்தில், அல்லது வெள்ளைப் பேப்பர்களில், " ஸ்ரீ அகஸ்தியாய நம"  என்று நீலம் அல்லது பச்சை மையினால் , தங்களால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு எழுதி - கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் அக்டோபர் முதல் வாரத்திற்குள் வந்தடையுமாறு, எழுதி அனுப்புங்கள். ஒவ்வொரு முறை எழுதத் தொடங்கும்போதும், உங்கள் குல தெய்வத்தை ஒரு முறை வேண்டிக்கொண்டு , பின்பு மனதிற்குள் உங்கள் நிறைவேற வேண்டிய கோரிக்கை (களை) மனதிற்குள் சங்கல்பம் செய்து கொண்டு, உலக ஷேமத்திற்காகவும் வேண்டி  எழுதுங்கள்.
குளித்து முடித்து, சுத்தமான உடை அணிந்து, வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி - குல தெய்வத்தை ஒருமுறை மனதில் வேண்டி - ஓம் ------------------ போற்றி! என்று வேண்டிக்கொண்டு - அர்ச்சனைக்கு சொல்வோமே அப்படி, குலம் / கோத்திரம் , பெயர், நட்சத்திரம் சொல்லிவிட்டு - உங்கள் அவசியமான கோரிக்கைகளை வேண்டிக்கொண்டு - கடன் தொல்லை தீர, வீடு கட்ட, கார் வாங்க, திருமணம் நிறைவேற, குழந்தை பாக்கியம் கிடைக்க, நிம்மதியான வாழ்வு கிடைக்க, குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்கு, உடல் நலம் வேண்டி இப்படி உங்களை வருத்திக்கொண்டு இருக்கும் கோரிக்கைகளை மனதிற்குள் வேண்டி, அகஸ்திய பெருமானை நல் வழி காட்டுமாறு பிரார்த்தனை செய்துகொண்டு எழுதத் தொடங்குங்கள்...!
அதன் பிறகு நடக்கும் அற்புதத்தை பாருங்கள்..! எழுதத் தொடங்கிய சில நாட்களிலேயே அந்த அதிசயம் கண்டிப்பாக நிகழும்.
நீங்கள் லிகித நாம ஜெபம் எழுதி அனுப்ப வேண்டிய முகவரி :
Mr. K.MURALIDHARAN,
TOTAL OIL INDIA (P) LTD
3, Bharathi Park Cross Road - 2,
Saibaba colony, Coimbatore - 11
Cell : 99949 74557 / 97903 73973
அந்த அகஸ்திய மகரிஷியே திருவுளம் கொண்டு , இந்த அரும்பெரும் வாய்ப்பை நல்கியதாகவே நான் கருதுகிறேன். உங்களுக்கும் இதே போன்ற எண்ணம் தோன்றுமேயானால், அவசியம் நீங்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேரமோ அல்லது பொருள் விரையமோ என்று நினைக்க வேண்டாம். உங்கள் சந்ததிக்கே நீங்கள் சேர்க்கும் சொத்து இது என்று நம்பி செயல் பட்டு, அகஸ்திய மகரிஷியின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.

இந்த தகவலை தகுதி வாய்ந்த உங்கள் உறவினர் / நட்பு வட்டத்திற்கும் தெரியப்படுத்துங்கள். Facebook / Twitter என்று உங்களால் முடிந்தவரைக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். யார் யாருக்கெல்லாம் ப்ராப்தம் இருக்கிறதோ, அவர்கள் அனைவருக்கும் இந்த தகவல் பயன் தரட்டும்.

இந்த அரும்பெரும் பணியில் ஈடுபட்டு இருக்கும், சகோதரர் முரளிக்கு வாழ்த்துக்களும்,  இந்த வாய்ப்பை நமக்குத் தந்ததற்காக நன்றிகளும்..!
கீழே இது சம்பந்தப்பட்ட அறிக்கையை இணைத்துள்ளேன். படத்தில், ரைட் க்ளிக் செய்து, வியூ இமேஜ் க்ளிக் செய்யுங்கள். அதன் பிறகு, கர்சரை படத்தில் க்ளிக் செய்ய படம் பெரிதாகத் தெரியும்.

வாழ்க அறமுடன்! வளர்க அருளுடன்!

No comments:

Post a Comment