Saturday, September 24, 2011

பெருமாளின் புண்ணிய மாதம் புரட்டாசி!

பெருமாளின் புண்ணிய மாதம் புரட்டாசி!

மாதங்களைப் பற்றிய தகவல்கள் சுவையானவை. சமஸ்கிருதத் தில், “பாத்ரபதம்’ எனப்படும் மாதம், தமிழில் புரட்டாசி எனப்படு கிறது. ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ராசிக்குள் சூரியன் பிர வேசிக்கிறது. இதன்படி, ராசி கரத்தின் தென்மேற்கிலுள்ள கன்னி ராசிக்குள் சூரியனின் பிரவேசம் நிகழும் போது, புரட்டாசி மாதம் பிறக்கிறது.
இந்த மாதம், பிதுர்களுக்குரிய வி டுதலை மாதமாகக் கருதப்படுகிற து. மறைந்த நம் முன்னோர், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூ ரியன், கன்னி ராசிக்குள் புகுந்த தும், எம தர்மன் அவர்களை பூமி க்குச் செல்லும்படி உத்தரவிடுகி றார். அவர்களும் தங்கள் உறவுக ளை நாடி, இங்கே வருகின்றனர். புரட்டாசி வளர்பிறை பிரத மையி ல் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர். இதையே, “மகாளய பட்சம்’ என்பர்; “பட்சம்’ என்றால், “15 நாட்கள்’ எனப் பொருள்.
இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். தகு தியானவர்களுக்கு அன்னதா னம் செய்ய வேண்டும். இந்த பட்சத்தில் வரும் பரணி, “மகா பரணி’ என்றும், அஷ்டமி யை, “மத்யாஷ்டமி’ என்றும், திரயோ தசியை “கஜச் சாயை’ என்றும் சொல்வர். இந்த மூன்று நாட்க ளுமே, பிதுர் வழிபாட்டுக்கு உக ந்தவை. இம்மாதத்தில் வரும் மகாளய அமாவாசையில் செய் யப்படும் பிதுர் பூஜை (இவ்வா ண்டில் செப்., 27) மற்ற அமாவாசை களைக் காட்டிலும் அதிக பலன் தரும்.
ஆவணியில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடிய நாம், புரட்டா சியிலும் விநாயகர் பூஜையைத் தொடர்வது சிறப்பான பலனை த் தரும். ஏனெனில், புரட்டாசி கன்னி மா தமாக இருக்கிறது. தென் மேற்கு திசை யை, “கன்னி மூலை’ என்பர். இதனால் தான், கோவி ல்களில் இந்த திசையில் விநாயகர் பிரதிஷ்டை செய்யப் பட்டிரு ப்பார். இவரை, “கன்னி மூலை கணபதி’ என்பர். சபரிமலை செல்லும் பக்தர்கள், பம்பையில் உள்ள கன்னி மூலை கண பதி கோவிலைத் தரிசித்த பிறகே மலை யேறுகின்றனர். ஏதாவது வேண்டுதல் வைத்து, மாதம் முழுவதும் கணபதிக்கு அருகம்புல் மாலை அணிவித்தால், எண்ணியது ஈடேறும்.
நடராஜருக்கு ஆண்டில் ஆறு நாட்கள் அபிஷேகம் செய்யப்படும். அதில், புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசியும் ஒருநாள். (இவ்வாண் டில் அக்.,10) அன்று மாலை சிவாலயங்களில் உள்ள நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படும்.
இம்மாதத்து சனிக்கிழமைகள் பெருமாள் விரத த்திற்கு <உகந்த வை. இவ்வாண்டு நான்கு சனிக் கிழமைகளிலும் (செப்., 24, அக்., 1, 8, 15) பெரு மாள் கோவில்களுக்கு தவறாமல் சென்று வர வேண்டும். ஜாதக ரீதியாக சனி கிரகத்தால் சிர மம் அனுபவிப்போர், பெருமாள் கோவிலில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதனா ல், பெருமாளின் அருளால் சிரமங்கள் பல மடங்கு குறையும். திரு ப்பதி சீனிவாசனுக்கு புகழ்பெற்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சி இந்த மாத த்தில் கொண்டாடப்படுகிறது.
பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே. நவராத்திரி பூஜை (இவ் வாண்டு செப்., 28 – அக்., 5) இம்மாதத்தில் நடக்கிறது. அம்பா ளை, முதல் மூன்று நாட்கள் துர்க்கையா கவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியாகவும், அதையடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியாக வும் வழிபடு கிறோம். தைரி யம், செல்வம், கல்வி ஆகிய வற்றை அம்பாளிடம் வேண் டிப் பெற இந்த பூஜை நடத்தப் படுகிறது. தமிழகத்தின் முக்கிய அம்பாள் கோவில்களில் விசே ஷ பூஜைகள் நடக்கும். இந் நேர த்தில் வீடுகளிலும், கோவில் களிலும் கொலு வைப்பது சிறப் பம்சம். சரஸ்வதி பூஜைக்கு மறுநாள் விஜயதசமி கொண்டாடுகின் றனர். இந்நாட்களில், சில அம்பாள் கோவில் களில், “பாரி வேட்டை’ எனும் வெற்றித் திருவிழா நடத்தப்படும்.
முருகனுக்கும் இம்மாதத்தில் விழா <உண்டு. திருப்பரங்குன்றத்தில் முருகப் பெருமான் சன்னிதி குடைவரையாக உள்ளதால், அவர் முன்புள்ள வேலுக்கே பால பிஷேகம் செய்யப்படும். இந்த வேல், புரட்டாசி பவுர் ணமியன்று மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அபிஷேகம் நட க்கும். அங்குள்ள காசி விஸ்வ நாதரை, முருகப் பெருமான் வழிபாடு செய்வதாக ஐதீகம்.
புரட்டாசி மாதம், ஆன்மிக மாதம். இம்மாதத்தில், தவறாமல் வழி பாடுகளைச் செய்து, தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் நல்ல ருளும், நல்லாசியும் பெறுவோம்.

No comments:

Post a Comment