Monday, September 19, 2011

நவராத்திரி கொலு வைக்கும் முறையும், வழிபாட்டு முறையும்

நவராத்திரி கொலு வைக்கும் முறையும், வழிபாட்டு முறையும்

நவராத்திரி கொலு வைக்கும் முறை

நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொ ண்ட மேடையில் பலவித பொம்மை களை நேர்த்தியா க அலங்கரித்து வைப்பதே யாகும். ஐம் பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்ப ட்ட பொம்மைக  ளை சக்தியின் அம் சங் களாக எண்ணி நவராத்திரி யில் பூசிப்பவர்களிற்கு சகல நலங்களை யும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக் கின்றா. இனி நவரா த்திரி கொலு எப்படி அமைக்க வே ண்டும் என்று பார்ப்போம். கொலு மேடை 9 படிகள் கொண்டதாக இருக்க வேண்டும்.
 1. முதலாம் படி :-
 ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவ ர வர்கங்களின் பொம்மை கள்.
2. இரண்டாம் படி:-
ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.
3. மூன்றாம் படி :-
மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மை கள்.                                
4. நாலாம்படி :-
நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு ,வண்டு  போன்றவற்றின் பொம் மைகள்.
5. ஐந்தாம்படி :-
ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம் மைகள
6. ஆறாம்படி :-
ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.
VII Step
7. ஏழாம்படி :-
மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந் த    சித்தர்கள், ரிசிகள், மக ரிசிகள் (ரமணர், வள்ள லார்) போன்றோரின் பொம் மைகள்.
8. எட்டாம்படி :-
தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவ தைகள் போன்றோரின் பொம்மைகள்.
9. ஒன்பதாம்படி :-
பிரம்மா, விட்ணு, சிவன் ஆகியோர் அவ ர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வைக்கவேண்டும்.
மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற் காகவே இப்படி கொலு அமைப்பது வழக் கம்.
 

நவராத்திரி வழிபாட்டு முறை.

1. முதலாம் நாள் :-
சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியா க கருதி வழிபடவேண் டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலை யும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபக்காரி. நீதி யைக்காக் கவே இவள் கோபமாக உள்ளா ள். மற்றும் இவளது கோபம் தவறு செ ய்தவர்களை திருத்தி நல் வழிபடுத் தவே ஆகும்.
மதுரை மீனாட்சி அம்மனை முதல் நாளில் அண்டசராசரங்களைக் காக் கும ராஜராஜேஸ்வரி அம்மனாக அல ங்கரிப்பர்.
முதல்நாள் நைவேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல்.
2. இரண்டாம் நாள் :-
இரண்டாம் நாளில் அன்னையை வரா ஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். வராஹ(பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூல மும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகு ம். பெரிய சக்கரத்தை தாங் கியிரு ப்பவள். தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளி ற்கு மங்கள மய நாராயணி, தண்டி னி, பகளாமுகி போன்ற திருநாம ங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள். ஏவல், பில்லி சூனியம், எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபட இவளின் அருளைப் பெறுவது அவசியம்.
மதுரை மீனாட்சி அம்மன் இன்று விறகு விற்ற லீலை யில் காட்சி அளிப்பாள். அதா வது சுந்தரர் விற்ற விறகை மீனாட்சி அம்மன் தலை யில் ஏற்றும் படலம் நடக்கும். குடு ம்ப பாரத்தை கண வனுடன் சேர்ந்து மனைவியும் சுமக்க வேண்டும் என்ற தத்துவத்தி னை வலியுறுத்துவதாக நாம் கருதலாம்.
இரண்டாம் நாள் நைவேத்தியம் :- தயிர்ச்சாதம்.
3. மூன்றாம் நாள் :-
மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திராணியாக வழிபட வேண் டும். இவளை மாஹேந்தரி, சாம் ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந் தியவள். ஆயிரம் கண்ணுடைய வள். யானை வாகனம் கொண் டவள். விருத்திராசுரனை அழித்த வள். தேவலோகத்தை பரிபா லனம் செயபவளும் இவளேயாகும். பெரிய பெரிய பதவிகளை அடை யவிரும்புபவர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும். மற்றும் வேலையில்லாதவரிற்கு வே லை கிடைக்க, பதவியில் உள் ளவரிற்கு பதவியுயர்வு, சம்பள உய ர்வு கிடைக்க அருள் புரிபவளும் இவளே யாகும்.
இன்று மீனாட்சி அம்மன் கல் யானைக்கு கரும்பு கொடுத்த அலங்காரத்தில் காண ப்படுவார்.
மூன்றாம் நாள் நைவேத்தியம் :- வெண் பொங்கல்.
4. நான்காம் நாள் :-
சக்தித்தாயை இன்று வைஷ்ணவி தேவி யாக வழிபடவேண்டும். சங்கு, சக் கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப் பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் திருமண கோலத்தில் காட்சி யளிப்பார்கள்.
நான்காம் நாள் நைவேத்தியம் :- எலுமிச்சை சாதம்.
5. ஐந்தாம் நாள் :-
ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும். அன்னை மகேஸ்வ ரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச் சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். அளக்கமுடியாத பெரு ம் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திரு வுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.

இன்று மதுரை மீனா ட்சி அம்மன் நாரை க்கு மோட்சம் கொடு த்த அலங்காரத்தில் காட் சியளிப்பார்கள்.
ஐந்தாம் நாள் நைவேத்தியம் :- புளியோதரை.
6. ஆறாம் நாள் :-
இன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். மயில் வாகனமும் சேவல் கொ டியும் உடையவள். தேவசேனா திபதியான முருகனின் வீரத் திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவ ங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் பாணணிற்கு அங்கம் வெட்டிய அலங்காரத்தில் அருள்புரிவார்கள்.
ஐந்தாம் நாள் நைவேத்தியம் :- தேங்காய்ச்சாதம்.
7. ஏழாம் நாள் :-
ஏழாம்நாள் அன்னையை மகா லட்சுமியாக வழிபட வேண்டு ம். கையில் ஜெபமாலை, கோட ரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண் டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ரா யுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகிய வற்றைக் கொண்டிருப்பவள். விஷ்ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவ ந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத் தில் அமர்ந்து சகல ஐசவரியங்களையும் தருபவள் அன்னையாகும்.
ன்று மதுரை மீனாட்சி அம் மன் சிவசக்தி கோலத்தில் மக் களிற்கு அருள்பாலிப்பார்கள்.
ஏழாம் நாள் நைவேத்தியம் :- கல்க்கண்டுச் சாதம்.
8. எட்டாம் நாள் :-
இன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உட லும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லை யில் இருந்து விடுபட அன்னையின் அருள் வேண்டும்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் மகிஷா சுரமர்த்தினி அலங்கார த்தில் காட்சிய ளிப்பார்கள்.
எட்டாம் நாள் நைவேத்தியம் :- சர்க் கரைப் பொங்கல்.
9. ஒன்பதாம் நாள் :-
இன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழி பட வேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதி யாவாள். ஞானசொரூபமானவள். கல்விச்செல்வம் பெற அன் னையின் அருள் அவசியமாகும்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் சிவபூசை செய்யும் கோலத்தில் அருளாட்சி புரிவார்கள்.
ஒன்பதாம் நாள் நைவேத்தியம் :- அக்கர வடசல். 
thanks by vidhai2virutcham

No comments:

Post a Comment