Wednesday, September 21, 2011

வாழ்க்கையில் எது முக்கியம்??

வாழ்க்கையில் எது முக்கியம்??

உங்களின் வேலை, `வீட்டு பக்கம்’ பாதிப்பை ஏற்படுத்துகிறதா? அப் படியானால் நீங்கள் மனபூர்வ மாக நேசிக்கும் விஷயங்களு க்கு அதிக நேரம் ஒதுக்க ஆரம் பிங்கள். அது உங்களுக்கு புத் துயிர்பையும், புத்துணர்வை யும் ஊட்டும். வாழ்க்கையில் எது முக்கியம், எது உங்களின் நேரத்தையும், சக்தியையும் உறிஞ்சுகிறது என்று பிரி த்து பார்த்து, முக்கியமானவற்றி ல் அதிக கவனம் செலுத்த கற்றுக்கொள்ளுங்கள். அதன்பின், அலுப் பூட்டும் வாழ்க்கை ஆனந்தமய மாக மாறிவிடும்.
நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் இங்கே…
1.சரியான சாப்பாட்டு நேரம்
ஒழுங்கற்ற உணவு வேளைகள் உங்களி ன் ஆரோக்கிய த்தை பாதிக்கும். தினமும் ஒரே குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட முய லுங்கள்.
2.போதுமான உறக்கம்
தினசரி உங்களுக்கு எவ்வளவு நேர உறக்கம் தேவை என்று வரையறுத் துக் கொள்ளுங்கள். அந்த அளவின் படி தினமும் இரவு தூங்க முயலுங் கள்.
3.தூய்மை நேரம்
தினமும் நன்றாகக் குளிப்பதற்கு, புனித நீராடுவதற்கு, அழகு நிலையம் செல் வதற்கு, `மசாஜ் தெரபிகள்’ மேற்கொள் வதற்கு, இவை போன்ற தூய்மை பணி களுக்கு திட்டமிட்டு நேரம் ஒதுக் குங்கள்.
4.அன்றாட வேலைகள்
அன்றாட சின்னச்சின்ன வேலைகள் தவிர்க்க முடியாதவை. ஆனால் உங்களின் பணி அட்டவணையை பாதிக்காத வகையில் அவை ` அட் ஜஸ்ட்’ செய்யபட வேண்டும்.
5.உங்கள் விருப்பத்துக்கு…
நீங்கள் ரசித்து அனுபவிக்கும் விஷயத்துக்கு வாரம் ஒரு மாலை வேளையையாவது ஒது க்குங்கள். அப்போது செல்போனை அணை த்து விடுங்கள், கம்ப்யூட்டர் உறங்கட்டும். நீங் கள் உங்களுக்கு பிரியமான விஷயத்திலே யே ழுழ்கி போய் விடுங்கள்.
6.ஆதரவுக் கரங்கள்
நீங்கள் நெருக்கடிக்கு உள்ளாகும்போது உங் களுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் ஒன் றிரண்டு பேராவது இருக்கட்டும். அவர்கள், தேவைப்படும்போது உதவிசெய்யும் உறவி னர்களாக இருக்கலாம், நீங்கள் வெளியூர் செல்லும் போது வீட்டைக் கவனித்துக் கொ ள்ளும் அண்டை வீட்டாராக இருக்கலாம்.
7.தனிப்பட்ட நேரம்
உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்குமான தனிப ட்ட நேரத்துக்கு முக்கியத்துவமும், மதிப்பும் அளி யுங்கள். அந்த நேரத்தில் வேறு வேலைகளோ, திசைதிருப்பும் விஷயங்களோ குறுக்கிட அனும திக்காதீர்கள்.
8.இந்தக் கணம் முக்கியம்
நீங்கள் அலுவலக வேலை பார்க்கிறீர்கள் என்றால், அந்நேரத்தில் அந்த மனநிலைக் கு மாறி விடுங்கள். அலுவலகத்தில் இருக் கும் போது வீட்டை பற்றியோ, வீட்டில் இருக்கும்போது அலுவலகத்தை பற்றி யோ சிந்திக்கக் கூடாது.

No comments:

Post a Comment