Saturday, September 17, 2011

மனப்புயலை அடக்கிவிடு-(பகவத் கீதை)


மனப்புயலை அடக்கிவிடு-(பகவத் கீதை)

Posted On Sep 17,2011,By Muthukuamr,

* தீயில்புகுந்தால் சுடாமலும், தண்ணீரில் குளித்தால்
குளிராமலும், இரண்டிலும் ஒரே நிலை தோன்றுவதே சமநிலையாகும்.
இந்த சமநிலையில் தன்னைத்தானே ஈடுபடுத்தி அமைதியாக
வாழ்பவன், ஜீவாத்மா வடிவில் உள்ள பரமாத்மாவாகும்.

* சர்வ கலை ஞானத்தாலும், அனுபவ ஞானத்தாலும் மனநிம்மதி
அடையப் பெற்றவனும், எதற்குமே ஈடுகொடுத்து ஐம்புலன்களையும்
வென்றவனும், பொன், கல், மண் ஆகிய மூன்றையும் ஒன்றாக
மதிப்பவனுமே யோகியருக்கெல்லாம் தலைசிறந்த
யோகியாகிறான்.

* எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் அன்பு
கொண்டவர்கள், நண்பர்கள், தன்னை எப்போதும் அலட்சியப்
படுத்துபவர்கள், நடுநிலையாளர்கள், தன்னையே வெறுப்பவர்கள்,
சுற்றத்தார், நல்லோர், தீயோர் எல்லாரிடமும் ஒரே நிலையில்
நடந்து கொள்பவர்கள்தான் உத்தமமானவர்கள்.

* ஆசையே இல்லாதவன் யோகி. தன் சொத்து, சுகங்களை
துறந்தவன் யோகி. பசித்திருந்து, தனித்திருந்து,
விழித்திருந்து அதிலே இனிமை காண்பவன் யோகி. இத்தகையானது
ஆத்மாவே யோகாத்மா ஆகிறது. இந்த நிலையை அடைய உன் மனப்புயலை
அடக்க வேண்டும்.

* வயிறுமுட்ட சாப்பிடுகிறவனுக்கு யோகம் கிட்டாது.
அதுபோல, எப்பொழுதும் உண்ணாமல் இருப்பவனுக்கும், கால
நேரமின்றி தூங்குகிறவனுக்கும், விடிய, விடிய விழித்துக்
கொண்டிருப்பவனுக்கும் யோகம் கிட்டுவதில்லை.

* சாப்பிடுவதிலும், நடமாடுவதிலும், தூங்குவதிலும்,
விழித்திருப்பதிலும் அளவாக இருப்பவன் துன்பம் இல்லாமல்
இருப்பான்

No comments:

Post a Comment