Friday, March 2, 2012

மகா சிவராத்திரி மகிமை

Posted On March 2,2012,By Muthukumar
மகா சிவராத்திரியை பற்றி ஏராளமான கதைகள் புராணத்தில் உள்ளன. அவற்றை கேட்பதும், படிப்பதும் கூட புண்ணியம் தரும். பிரம்மோத்திர காண்டத்தில் கூறப்பட்டுள்ள ஒரு கதை இது.
சண்டன், ஒரு வேடன், அப்பாவி அவன் காட்டில் வேட்டையாடுவதையே தொழிலாக கொண்டிருந்தான். காட்டில் அலையும் விலங்குகளையும், பறவைகளையும் வேட்டையாடி பிடித்து அவற்றை விற்று ஜீவனம் செய்து வந்தான். அவனுக்கு சண்டிகா என்ற மனைவி இருந்தாள். ஒரு நாள் அடர்ந்த காட்டிற்குள் விலங்குகளை தேடி அலைந்து கொண்டி
ருந்த போது, வானுயர்ந்த ஒரு பெரிய வில்வ மரத்தினடியில் அன்லர்ந்த பூவாய், அழகிய சிவலிங்கம் ஒன்று புதியதாய் தோன்றி இருப்பதை கண்டான். அது ஒரு சுயம்பு லிங்கம்.
சிவலிங்கத்தை கண்டதும் அவனுக்கு மெய்சிலிர்த்தது. அவனுள் அன்பும், பக்தியும் பெருகி கரைபுரண்டோடியது. தீயை கண்ட மெழுது போல் மனமுருகினான். வைத்த கண் வாங்காமல் மெய் மறந்து சிவலிங்கத்தையே பார்த்து கொண்டிருந்தான். பார்க்க பார்க்க பரவசம். அவனை ஆட்கொண்டது அவனையுமறியாமல் அவன் கண்களில் ஆன்ந்த கண்ணீர் பெருகி வழிந்தது. அவன் உள்ளம் பெறற்கரிய பெருஞ்செல்வத்தை பெற்றது போல் குதூகலத்தால் குதித்து கூத்தாடியது தன்னை மறந்தான் தன் நிலை மறந்தான்.
தானே தோன்றிய சிவலிங்கத்திற்கு பூஜை எப்படி செய்ய வேண்டும். இறைவனை எப்படி வயங்க வேண்டும். எண்öன்னன் உபசாரங்கள் செய்ய வேண்டும்? என்னவெல்லாம் படைக்க வேண்டும் என்ற விவரமெல்லாம் அவனுக்கு தெரியாது. ?எதுவுமே தெரியாத ஒரு அப்பாவி வேடன் அவன். அப்போது அங்கே சிங்க கேது என்ற மன்னன் வந்தான். வேட்டையாட கானகம் வந்தவன். தன் பரிவாரங்களைற பிரிந்து, வழி தெரியாமல் அலைந்து கொண்டிருந்தவன் வேடன் சண்டன் இருக்குமிடம் வர நேர்த்தது. கானகத்தை நன்கறிந்து வேடனை கெண்ட மன்னனுக்கு மிகுந்த சந்தோஷமேற்பட்டது. வேடனை கொண்டு கானக வழியை கண்டுபிடித்து என நம்பினான்.
மன்னன் சிங்ககேது வந்ததை கூட அறியாமல் சிவலிங்கத்தையே பார்த்து கொண்டிருந்த சன்டனை பாரத்து வேடா, இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? வழி தவறி வந்து விட்டேன் காட்டை விட்டு வெளியேற வேண்டும் வழிகாட்டுஎன்று கேட்க, மன்னன் குரல் கேட்டு சண்டன் உணர்வு வரப்பெற்றான். அரசே, என்னை மன்னியுங்கள் பாராமுகமாய் இருந்து விட்டேன். என்னுடன் வாருங்கள் வழிகாட்டுகிறேன் என்றான்,. தொடர்ந்து மகாராஜா இங்கே இருக்கும். சிவலிங்கத்தை எப்படி பூஜிக்க வேண்டும்என்பதை எனக்கு விளக்கமாய்கூறுங்கள் என்று மிகுந்த பணிவுடன் மன்னனிடம் கேட்டான் சண்டன்.
உடனே மன்னன் பரிகாசமாய் வேடனே, உன் தோல் பையில் தண்ணீர் கொண்டு வந்து சிவலிங்கத்தின் மீது :ஊற்று. சுடலையில் வெந்த சாம்பலை கொண்டு வடந்து சிவலிங்கத்துக்கு பூசு. கைக்கு கிடைக்கிற பூக்களையெல்லாம் கொண்டு வந்து சிவலிங்கத்தின் மேல் வை. நீ உண்ணும் உணவை கொணடு வந்து நிவேதனமாக வை. விளக்கேற்றியவை. இரு கை கை கூப்பி கும்பிடு போடு என்று அலட்சியத்தோடு கூறினான். மன்னன் சொன்ன விவரங்களையெல்லாம் சண்டன் கவனமாக கேட்டு கொண்டான்.
எதுவும் தெரியாமலும், தன்னை அறியாமலும் எசய்யும் சிவராத்திரி வழிபாடு கூடப பலன் தரும். இப்படி அறியாமல் செய்த பூஜைக்கே பலனுண்டு. என்றால் சிவராத்திரியை அறிந்தே பூஜை செய்பவர்களுக்கு ம், ஆலயம் சென்று முறையே வழிபாடு செய்பவர்களுக்கும் எத்தகைய புண்ணியம் வந்து சேரும். என்பதை எண்ணி பாருங்கள்.
எனவே சிந்தை மகிழ சிவபுராணம் ஓதி சிவன் அருளால் அவன் தாள் பணிந்து பிறவி பெரும் பிணி தீர்ப்போம்.

No comments:

Post a Comment