Posted on March 16, 2012 by muthukumar
சுமங்கலி பெண்கள், மாங்கல்ய பாக்கியத்திற்கும், கன்னியர்கள் சிறப்பான வாழ்க்கைத் துணை அமை யவும், வரம்கோரி மகா லட்சு மியை நோக்கி வே ண்டும் காரடையான் நோன்பு இன்று அனுஷ்டிக்க ப்படுகிறது. பங்குனியை புருஷனாகவும், மாசியை பெண்ணாகவும் கொண்டு, இரண்டும் கூடும்காலத்தில், மகா லட்சு மியை நோக்கி நோன்பு இருப்பது காரடையான் நோன்பு. நோன்பின்
போது பெண்கள் செய்யும் பிரார்த்தனை இதுதான்,
*உருகாத வெண்ணெய்யும், ஓரடையும் நான் செய்தேன் ஒருகாலும் என் கணவர் என் னை விட்டு பிரியாத வரம் வேண்டும். மகாலட்சுமியை நோக்கி இந்த பிரார்த்தனை நடத்தப்படுவது வழக்கத்தில் உள் ளது. இளம்பெண்கள் சிறப்பான வாழ்க்கைத் துணை வேண்டும் எனவும், நோன்பு இருக்கின்றனர். காரடையான் நோன்பை மகாலட்
சுமியே இருந்ததாக ஐதீகம். காரடையான் நோன்பு நன்நாளில்தான், சாவித்திரி, கணவனின் உயிரை எமனிடமிருந்து மீட் டதாக நம்பிக்கை உள்ளது. அவரின் கண வர், மாமியார், மாமனாருக்கு உரிய கட மையைச் செய்பவர்களும், பிறந்த வீட்டிற் கு பெருமையைப் பெற்று த்தருபவர்களும் பதிவிரதையாகின்றனர். அவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்ப தை உணர்த்துகிறது இந்தநாள். மாமியா ருக்கு சேவை செய்யும் மருமகள்களுக் கான விரதம் மட்டும்மல்ல, மருமகளை தங்கள் மகளாக எண்ணவேண்டும் என்று மாமியாரு க்கும் உணர்த்துகிறது இந்த விரதம்.
*கார்காலத்தில் (முதல்போகம்), விளையும் நெல்லை குத்தி, மாவா க்கி அதில் வெல்லம் அல்லது காரம், தட்டாம்பயிறு (காராமணி)
சே ர்த்து, காரடை தயார் செய்யப்படு கிறது. இந்த நைவேத்தியத்தின் பெயரால் அனுஷ்டிக்கும் விரத மே காரடையான் நோன்பு என வும் அழைக்கப்படுகிறது. பெண் கள் தனது கணவர் அல்லது பெரியவர்கள் கையால் சரடு (நோன்பு கயிறு) பெற்று கட்டிக் கொள்வார்கள். இன்று காரடை யான் நோன்பு அனுஷ்டிக்கப்படு கிறது. இன்று காலை 9.25 மணி முதல் 9.45 மணிவரை நோன்பு அனுஷ்டிக்கலாம்.
பலன்: காரடையான் விரதம் இருக் கும் பெண்கள் தீர்க்க சுமங்கலிக ளாக இருப்பர்.
No comments:
Post a Comment