Thursday, March 29, 2012

தனிப்பட்ட‍ முறையில் சிறப்பு பெற்ற‍ திருக்கோவில்கள்

*  சின்ன சேலம் ஆறகழூரில் உள்ள காம நாதேஸ்வரர் ஆலயத்தில் அஷ்ட பைர வர்களையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம்.
*சக்தியோடுகூடிய தட்சிணாமூர்த்தி யை திருக்கள்ளில் தலத்திலும் சுருட்ட ப்பள்ளி தலத்திலும் பார்த்துப் பரவசம டையலாம்.
*  காங்கேயம் முருகன் ஆலயத்தில் கால் நடைகள் நோய்நொடியின்றி வளமாக வாழ கதனை என்று கூறப் படும் அதிர்வெடி வழிபாடு நடைபெறுகிறது.
*  சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அழகிரிநாத சுவாமி ஆலயத்தில், சிம்ம முகத் துடன் அனுமனை தரிசிக்கலாம்.
*  வந்தவாசிக்கு அருகில் உள்ள ஆவணியா புரத்தில் சிம்ம முகத் தோடு அருள்கிறாள் மகாலட்சுமி! பக்தர்களைக் காக்க, யாகத் தீயால் எரிந்த, அடையாளம் காண முடியா த, முகமில்லாத நரசிம் மர் மடியில் அமர்ந்திருக்கிறாள். அந்த ரசிம்ம ரின் முகத்தை தேவி தான் ஏற்று அருள்பாலிக்கிறாள்.
*  ஆந்திராவில் உள்ள மங்களகிரி பானக நரசிம்மருக்கு நாம் எவ்வ ளவு பானகம் நிவேதனம் செய்தாலும், அந்தப் பானக அளவில் பாதியை விழுங்கி, மீதியை பிரசாதமாக நிறுத்திவிடுகிறார். இனிப் பான பானகம் எத்தனையோ லிட்டர் கொண்டு சேர்த்தாலும் அத்த லத்தில் ஈ எறும்பு இல்லாதது அற்புதம்.
*  ராமபிரான் நான்கு கரங்களுடன் மூல வராக செங்கல்பட்டிற்கு அருகே உள்ள பொன்பதர்கூடத்திலும் உற்சவராக கும் பகோணத் தருகே உள்ள புள்ளம்பூதங் குடியிலும் அருள்கிறார்.
*  மனித முகத்துடன் விநாயகரை  கும்ப கோணம் திருமீயச்சூர் அரு கே உள்ள செதிலபதியிலும் சிதம்பரம் தெற்கு வீதி யிலும் தரிசிக் கலாம்.
*  வேதாரண்யம் அருகில் உள்ள கோடிக் காட்டில் ஆறு கரங்களும் ஒரு முகமும் கொண்ட முருகப் பெரு மான் அருள்கிறார்.
*  கும்பகோணம் அருகில், நாச்சியார் கோயில் கல் கருடன் வீதி உலா வரும்போது கருடனின் எடை கூடிக்கொண்டே செல்வதும் பின் ஆலயம் திரும்பும்போது குறைந்து கொண்டே வருவதுமான அற்புதம் நிகழ்கிறது.
கோலவிழி அம்மன்
* சென்னை-மயிலை கோலவிழி அம்மனின் திருவிழி கள் மனிதர்களுக்கு இருப்பது போலவே உயிரோட்டமுள்ள தாக அமைந்துள் ளது.
*  விருத்தாசலம் அருகே உள்ள ஸ்ரீ முஷ்ணத்தில் சப்த கன்னியர்களும் தாயாரின் தோழிகளாக பூஜிக்கப்படுகி ன்றனர்.
*  செங்கல்பட்டு-மதுராந்தகம் பாதையில், படாளம் சர்க்கரை ஆலையின் இடதுபுறத்தில் சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள அரசர் கோயிலில் ஆறு விரல்கள் கொ ண்ட மகாலட்சுமியை தரிசி க்கலாம்.
*  சிதம்பரத்தில் உள்ள தில்லைக்காளி ஆலய பிராகாரத்தில் கடம் பவன தட்சிணாமூர்த்திரூபிணி எனும் பெயரில் பெண் வடிவ தட்சி ணாமூர்த்தியை தரிசிக்கலாம்.
*  தன் பக்தனுக்காக தீபாவளி அன்று திதி கொடுக்கும் கும்பகோ ணம் சார்ங்கபாணி பெருமாளுக்கு அன்றைய நிவேதனம், திதி சமையல்தான்.
*  விநாயகரின் முகத்தையும் தேள் போன்ற வரிவரியான உடல மைப்புடன் உள்ள விருச்சிகப் பிள்ளையாரை கும்பகோணம் ஆடு துறையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள மருத்துவக்குடியில் தரிசிக்கலாம்.
*  ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு கிழக்கே 14 கி.மீ. தொலை வில் உள்ள நயினார் கோயில் நாகநாதர் சந்நதியில் குழந்தைக ளை ஆலயத்திற்கு நேர்ந்து விட்டு, பின் ஏலம் கேட்டு அவர்களை திரும்பப் பெறும் பிரார்த்தனை வழக்கத்தில் உள்ளது. இதை விற்று வாங்குதல் என அழைக்கின்றனர்.
*  திருச்சி, சிறுவாச்சூர் மதுரகாளிக்கு ஆலயத்திலேயே மாவிடித்து மாவிளக்கு ஏற்றுகின்றனர். வீட்டிலிருந்து மாவு எடுத்துச் செல்ல அங்கு அனுமதி இல்லை.
*  சென்னை, தாம்பரம் – காஞ்சிபுரம் மார்க்கத்தில் உள்ள பண்ருட்டி க் கண்டிகையில் மகாமேரு, திதிநித்யா தேவிகள் அனைவருமே யந்திர வடிவிலேயே அருள்கின்றனர்.
*  வேலூர் அருகில் உள்ள சேண்பாக்கத்தில் 11 சுயம்பு விநாயகர்கள் ஒரே கருவறையில் அருள்கின்றனர்.

No comments:

Post a Comment