Sunday, August 5, 2012

ஆடி மாத பவுர்ணமி பூஜை,பத்திரகாளியம்மன்

Posted On Aug 5,2012,By Muthukumar





விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவகாசி ரோட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரின் ஊருக்குள்ளேயே அமைந்திருக்கிறது முதலியார்பட்டித் தெரு.பேச்சுவழக்கில் தெற்குப்பட்டித் தெரு என்று அழைப்பார்கள்.நெசவுத் தொழில் செய்யும் சாலியர் சமுதாய மக்கள் வாழ்ந்து வரும் இந்தத் தெருவின் நடுவில் அமைந்திருக்கும் கோவிலே அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோவில்.
சுமார் 40 ஆண்டுகளாக ஒவ்வொரு சிவராத்திரியன்றும் இரவில் ஒரு பாட்டி இந்தக்கோவிலில் கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்டு(கரண்டி இல்லாமல்) எடுப்பார்;அப்படி எடுக்கப்பட்ட அப்பத்தை அருள்நிறை பத்திரகாளியம்மாளுக்குப் படையலிட்டு,வந்திருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவது வழக்கம் ஆகும்.
தொடர்ந்து 12 பவுர்ணமிகளுக்கு இந்தக் கோவிலுக்கு வருகை தந்து பவுர்ணமி பூஜையில் கலந்து கொண்டால்,தீராத பிரச்னைகள் தீரும்.இரவு 10 மணிக்குத் துவங்கும் பவுர்ணமிபூஜை நள்ளிரவு 1 மணிக்கு நிறைவடையும்.இந்த பவுர்ணமி பூஜையைக் காண பூர்வபுண்ணியம் செய்திருக்க வேண்டும்.பவுர்ணமி பூஜை நாட்களை அறிய பூசாரி செல் எண்:9003353286(பூசாரி சுந்தரமகாலிங்கம்,துணைப்பூசாரி முருகன் MCA.,)
சுமார் 2000 சாலியர்  குடும்பங்களின் குலதெய்வமாக விளங்கும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மனை ‘கையால் பணியாரம் சுடும் பத்திரகாளி கோவில்’ என்று இப்பகுதி மக்கள் அழைப்பார்கள்.

No comments:

Post a Comment