Saturday, July 28, 2012

பித்ரு தோஷத்தை நீக்கும் விஜயாபதி நவகலசயாகம்


Posted On July 29,2012,By Muthukumar



நம்மில் பலரது வாழ்க்கை மிகவும் சாதாரணமாகவே இருக்கிறது.ஆனால்,ஜோதிடர்கள் பலரிடம் நமது ஜாதகத்தைக் காட்டியிருப்போம்;எல்லோருமே சொல்லி வைத்தாற்போல,உங்களுக்கு அந்த யோகம் இருக்குது;நீங்கள் கோடீஸ்வரன் தான் என்று புகழ்ந்து தள்ளியிருப்பர்.இருப்பினும் நமது கஷ்டங்கள்,சிரமங்கள்,வேதனைகள் நமக்கு மட்டும் தானே தெரியும்?


நம்மில் பலர் யாருக்கும் தீமை செய்யாதவராகவே இருக்கிறோம்.நாம் உண்டு;நமது வேலை உண்டு என்றுதான் இருக்கிறோம்.காதலில் கூட ஒரே ஒருத்திகூட வாழவேண்டும் என்றே ஆசைப்படுகிறோம்.நிம்மதியும்,செல்வ வளமும் நமது லட்சியங்களாக இருப்பினும் ,பல கோயில்களுக்கு செல்வதை வழக்கமாக்கியிருந்தாலும்,பல அன்னதானங்களை செய்திருந்தாலும்,ஏதாவது ஒரு மந்திரத்தை தினமும் ஜபித்துக்கொண்டிருந்தாலும் வாழ்க்கை மிகவும் சாதாரணமாகவே சென்று கொண்டிருக்கிறது.இதற்கான காரணத்தை ஒரு சில திறமையான ஜோதிடர்கள் மட்டுமே கணித்துச் சொல்ல முடியும்.


ஒருவரது பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 3,5,9 ஆம் இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால்,அவருக்கு பித்ரு தோஷம் இருக்கிறது என்றே அர்த்தம்.இராகு என்பது அப்பாவழி முன்னோர்களைப் பற்றியும்,கேது என்பது அம்மாவழி முன்னோர்களையும் விவரிக்கும் கிரகங்கள் ஆகும்.


ஒருவரது பிறந்த ஜாதகத்தில் ராகு ஐந்தாமிடத்தில் இருந்தால்,அவர் தன்னலம் கருதாதவராக இருப்பார்;ஆனால்,இவரது உதவியால் வாழ்க்கையில் முன்னேறியவர்கள் இவரை சிறிது கூட சீண்டமாட்டார்கள்;அதே ஐந்தாமிடத்தில் கேது இருந்தால்,இவர்கள் தனது குடும்பத்தாரினாலேயே புறக்கணிக்கப்படுபவராக இருப்பார்;இவர் ஊருக்கு உபகாரியாக இருப்பார்;வீட்டில் இவருக்கென்று சிறிதும் மரியாதை இராது.நாம் ஏன் எல்லோருக்கும் நல்லது செய்தும் கூட நமக்கு எவரும் நல்லது ஒன்றுகூட செய்வதில்லை என்ற ஏக்கம் எப்போதும் இவர்களை வாட்டும்.


இதுவே லக்னத்துக்கு ஒன்பதாமிடத்தில் ராகு இருந்தால்,இவருக்கு அப்பாவழி முன்னோர்களின் பிள்ளைகள் விரோதிகளாக இருப்பர்;அல்லது அப்பாவழி பூர்வீக சொத்துக்கள் அழிந்து போயிருக்கும்;அல்லது பூர்வீக சொத்து தொடர்பாக வழக்குகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்.எவருக்கும் உரிய பூர்வீக சொத்துக்கள் கிடைக்காது;கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமான சொத்துக்கள் இருந்தாலும் இதே சூழ்நிலைதான்!
லக்னத்துக்கு ஒன்பதாமிடத்தில் கேது இருந்தால்,அந்த ஜாதகருக்கு அம்மா மற்றும் அப்பாவழி முன்னோர்களின் பித்ரு சாபம் இருப்பதாக அர்த்தம்.


சரி! பித்ரு சாபம் அல்லது ப்த்ரு தோஷம் எப்படி உண்டாகிறது?


 ஒவ்வொரு தலைமுறையிலும் தற்கொலை மற்றும் கொலை நடைபெறத்தான் செய்கிறது.இவ்வாறு செயற்கையான முறையில் இறந்தவர்களின் ஆத்மாக்களுக்கு மறுபிறவி இல்லாமல் அலைந்து கொண்டிருக்கும்;அவர்களின் நான்காம் ஐந்தாம் தலைமுறையினரை இது பீடிக்கும்.பாட்டன் காலத்து சொத்தை மட்டுமா நாம் அனுபவிக்கிறோம்? இல்லை பாட்டன் காலத்து பாவங்களையும் சேர்த்துத் தான் அனுபவிக்கிறோம்.சுலபமாக விளக்கம் இதோ:
எனது அப்பாவின் தாத்தாவின் சகோதரி அவரதுபிறந்த ஜாதகப்படி 71 வயது வரை வாழ வேண்டியவர் என்று வைத்துக்கொள்வோம்;அவர் 17 ஆம் வயதில் குடும்ப கவுரவத்துக்காக கொலை செய்யப்பட்டாலோ/ குடும்ப விரோதத்தினால் வேற்று குடும்பத்தாரால் கொல்லப்பட்டாலோ,இறந்த அந்த தாத்தாவின் சகோதரி எங்கு கொல்லப்பட்டாரோ,அந்த இடத்தில் 71 ஆம் வயது வரை ஆவியாக இருப்பார்;முறைப்படி அவரது ஆயுள் முடிந்ததும்,எம லோகத்திற்கு ஓராண்டு வரை பயணிப்பார்;அங்கு அவர் 17 வயது முதல் 71 வயது வரையிலும் எந்த ஒரு நன்மை தீமைகளையும் அனுபவிக்க முடியாமல் இருந்தது கண்டு,அவர் விசாரணைக்கைதியாக ஒதுக்கி வைக்கப்படுவார்;இவ்வாறு இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு பரம்பரையில் ஐந்துபேர்களைத் தாண்டினால்,நான்காம்/ஐந்தாம் தலைமுறையில் இருந்து பித்ருதோஷம் வேலை செய்யும்.


ஒருவரின் ஜாதகத்தில் ராகு ,லக்னத்துக்கு 3,5,9 ஆம் இடங்களில் ஒன்றில் இருந்தால் அப்பாவழி பித்ரு தோஷம் என்றும்,கேது இந்த இடங்களில் இருந்தால் அம்மாவழி பித்ரு தோஷம் என்றும் அறியலாம்.இந்த ஜாதகருக்கு அப்பா வழி பித்ரு தோஷம் இருக்கிறது எனில்,இவரது அப்பாவின் உடன் பிறந்த சகோதரசகோதரிகளின் குழந்தைகளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இதே பித்ரு தோஷம் கண்டிப்பாக இருக்கும் என்பது நிச்சயம்.
இந்த பித்ரு தோஷம் நாம் சேர்க்கும் எந்த ஒரு புண்ணிய காரியத்தையும் நம்மிடம் சேர்க்காமல் தடுக்கும் சக்தி வாய்ந்தது;எனவே, பிதுர் தோஷம் நீக்கிட நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் அருகில் இருக்கும் விஜயாபதி என்னும் கடலோர கிராமத்தில் இருக்கும் ஸ்ரீவிஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவிலில் நவகலசயாகம் செய்ய வேண்டும்.


இந்த நவகலசயாகம் செய்த பின்னர்,100 நாட்களுக்குள் நீண்டகாலப்பிரச்னை தீரும்;இருப்பினும்,இந்த நவகலசயாகம் செய்த பின்னர்,ஓவ்வொரு அமாவாசைக்கும் நமது இருப்பிடத்தில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் 9 பேர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.இவ்வாறு 12 அமாவாசைகளுக்குச் செய்ய வேண்டும்.இதன் மூலமாக  நமது பித்ரு கடன் எனப்படும் பித்ரு தோஷம் நீங்கி,நமது வாழ்க்கை வளம் மிக்கதாக மாறிவிடும் என்பது அனுபவ உண்மை.

t_A

3 comments:

  1. Request exact details of phone number of the temple please reply

    ReplyDelete
    Replies
    1. திருநெல்வேலி,சென்று இரவு தங்கி,மருநாள் காலை taxi ல் சென்றோம்.மாலை 6மணிக்குத்திரும்பி விடலாம்

      Delete
  2. பித்ரு தோஷம் என்றால் என்ன?

    நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.

    அதை ஜாதகத்தில் கண்டறிவது எப்படி?

    ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்த்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு.

    அதற்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

    ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்துகொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை.

    அந்த தோஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் என்ன?

    இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது. அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாக ரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. கலப்புத் திருமணம் நடக்கவும், பெற்றொருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு .இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்துகொள்வதில்லை.

    எத்தகைய பாவங்கள் செய்திருந்தால், இந்த தோஷம் வரும்?

    இந்த தோஷம் வருவதற்கான கரணங்கள்: கருச்சிதைவு செய்துகொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும். ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை , சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும்.



    தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம்.

    இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும் பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள்.




    பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது


    21 தலைமுறைக்கு கயா,காசி யில் பித்ரு பூஜை பிண்டதானம் மற்றும் தர்ப்பனம் செய்ய விரும்புவோர் தொடர்புகொல்லவும்

    A.SUBRAMANIAM.JOTHIDA VALLUNAR

    MOBILE-9910738463/96505720/011-27307584

    ReplyDelete