Monday, January 2, 2012

ஹனுமனை நேரில் தரிசனம் செய்தவர்! வியக்க வைக்கும் நிஜ சம்பவம்!!

Posted On Jan 02,2012,By Muthukumar
எடுத்த காரியம் எதுவும் நல்லவிதமாய் முடியவில்லையே.. இனி வாழ்வில் தோல்வி மட்டும் தானா? என்று எண்ணுபவர்களுக்கு - ஹனுமனை நினையுங்கள்.. ஹனுமனை மனதில் தியானியுங்கள்.. ! தினமும் காயத்ரி மந்திரத்தை ஒரு அரை மணி நேரமாவது ஜெபம் பண்ணுங்கள். செய்து விட்டு அன்றைய தின வேலைகளை ஆரம்பியுங்கள். உங்கள் வீட்டில் நீங்கள் செய்யும் காயத்ரி ஜெபம் - உங்கள் வீட்டின் அத்தனை தோஷங்களையும்  நீக்கி, உங்களுக்கு மிகப் பெரிய உந்துதலை தந்து - உங்களை முன்னேற்றும்

ராமாயணம் நிஜமா? சேது பாலம் உண்மையா ? என்று யோசித்துக் கொண்டு இருக்கும் வேளையில் - இந்த நிகழ்ச்சி உங்கள் நம்பிக்கையை மென்மேலும் அதிகப்படுத்தி உங்களுக்கு இறை நம்பிக்கையை ஏற்படுத்தும் ...
இது ஒரு 100 சதவீதம் உண்மை நிகழ்ச்சி. நம்புவதும், நம்பாததும் உங்கள் இஷ்டம் ! படித்த பிறகு - உங்களுக்கு புரியும்.

என்னுடைய கம்பெனியில் டில்லியை சேர்ந்த நண்பர் - பெயர் தீபக் தோன்க்ரே சொன்ன உண்மை சம்பவம் இது. அவர், மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக கொஞ்ச வருடங்கள் பணி புரிந்தவர்.  இதை எதற்காக சொல்கிறேன் என்றால், அவருக்கு பொய் சொல்லித்தான் பொழைப்ப   நடத்தணும்ங்கிற அவசியம் இல்லை. முக்கியமா என்னை முட்டாளாக்கனும்கிற  அவசியம் இல்லை.

இது நடந்தது ஒரு இருபது வருஷம் முன்னாடி. அவரது நண்பர்கள் இருவர் (Mr. Goyal & Mr. Kapoor)  நேபாள் டூர் போயிருந்தாங்களாம். சொந்த கார்லேயே - டெல்லி லே இருந்து நேபாள் போயிருந்துருக்காங்க. இமாலயத்துலே பனி படர்ந்த மலை பிரதேசத்துலே ஒரு மத்தியான நேரம். செல் போன் அதிகம் புழக்கத்திலே இல்லாத காலம். கையிலே ஒரு நல்ல காமிரா மட்டும் இருந்து இருக்கு. 

நடந்து போறப்போ - கொஞ்ச நேரத்துலே ரெண்டு  பேரும் தனித்தனியா  பிரிஞ்சுட்டாங்க. அதுலே கோயல் ஒரு சின்ன  குகைக்குள்ளே போயிட்டு ஒரு பத்து நிமிஷம் கழிச்சு வெளியே வந்து இருக்கார். ஒரு இடத்திலே சைலெண்டா உக்காந்துட்டாராம்  .  அங்கே , இங்கே தேடி - ஒருவழியா கபூர் இவரை தேடி கண்டுபிடிச்சு , ரெண்டு பேரும் நேபாள் லே - தங்கி இருந்த லாட்ஜ் க்கு திரும்பி இருக்கிறாங்க. ஆளு , ஆனா ஒரு மாதிரியாவே இருந்து இருக்கிறாரு. ஒரு வார்த்தை கூட பேசலை. முகத்தைப் பார்த்தாலே ஒரு மாற்றம் தெரிஞ்சு இருக்கு. அவர் வாய் திறந்து எதுவுமே பேசலையாம். ஏதோ ஒரு அதிர்ச்சிலே இருந்த மாதிரியே பேந்த பேந்த முழிச்சுக்கிட்டு இருந்து இருக்காரு..

சரி , நீ பின்னாலே படுத்து தூங்குனு சொல்லிட்டு - கபூர் கார் எடுத்து தானே ஓட்டி கோயல் வீட்டுலே இறக்கி விட்டுட்டு போய்ட்டாராம்.  இவர் வீட்டுக்கு வந்து , பூஜை ரூம் லே உக்கார்ந்தவர் தான். ஒரு பத்து நிமிஷம் கழிச்சு வெளியே வந்து, மனைவி , பசங்க தலையை ஆசீர்வாதம் பண்ற மாதிரி தடவி கொடுத்துட்டு -"ஜெய் ஸ்ரீ ராம்" னு மட்டும் சொல்லிட்டு , அவர் தூங்குற ரூமுக்கு போய் படுத்தவர் தான், 
 
  மறுநாள் , காலைலே கபூர் வீட்டுக்கு போன். "உங்க நண்பர் கோயல் இறந்துட்டாரு. இரவு , தூக்கத்திலேயே மாரடைப்பு. சீக்கிரம் வாங்க."
அலறி அடிச்சு , அவர் வீட்டுக்கு போய்ட்டு துக்கத்திலே கலந்துக் கிட்டு வந்துட்டாராம். ஏன்? எதற்கு? என்ன ஆச்சு.. ஒண்ணுமே யாருக்குமே புரியலை.. ரொம்ப நாள் கழிச்சு , அவர் காமிராவைப் பார்த்திட்டு அவர் பையன் பிலிம் டெவலப் பண்ணி , பிரிண்ட் போட்டு இருக்காரு. கடைசியா அதுலே எடுத்த போட்டோ--- பனி படர்ந்த பின்புலத்தில் , கண்களை திறந்தபடி , எதார்த்தமாக நின்ற ரூபத்தில் சாட்சாத் அந்த ஆஞ்சநேயன்.  பெருமானே!! நினைச்சாலே புல்லரிக்குது!

ஹனுமனும், அவரும் சந்திச்சப்போ - என்ன நடந்தது தெரியலை. படங்கள் எடுத்துக்கிட்டே போனப்போ, எதேச்சையா யாரோ ஒருவர் இருக்கிறாரேனு போட்டோ எடுத்து இருக்கலாம். ஆனா, எல்லாம் யூகம் தான். அந்த போட்டோ ஆதாரம் தவிர....

இதுலே முக்கியமா குறிப்பிடத்தக்க விஷயம் -  அந்த கோயல்  ஒரு தீவிர ராம பக்தர்.  அந்த குடும்பமே , அவருக்கு ஆஞ்சநேய தரிசனம் கிடைச்சு அவருக்கு முக்தி கிடைச்சதா நம்புறாங்க. அவங்க பசங்க ரெண்டு பேரும் I.A.S. அதிகாரிகள். நல்ல நிலைலே குடும்பம் இருக்கு. இன்னைக்கும் அதிகாரம், ஆணவம் இல்லாம , இறை கைங்கரியங்களுக்கு  நிறைய உதவி செய்றாங்க. அந்த குடும்பத்தோட எல்லா வளர்ச்சிக்கும், அவங்க அப்பாவோட ஆத்மாவும், அவரோட ஸ்ரீ ராம ஜெபமும் தான்னு திடமா நம்புறாங்க. இந்த விஷயமும் அவங்க குடும்பத்துக்கு ரொம்ப நெருக்கமானவங்களுக்கு மட்டும் தான் தெரியுமாம்.

அதனாலே , நான் சொல்ல வர்றது என்னனு கேட்டீங்கன்னா.. சிரஞ்சீவியாக இன்னும் அந்த ஹனுமான் இருக்கிறார். நீங்கள் மனமுருக வேண்டினால் , உங்களுக்கு வரும் தொல்லைகள் அனைத்தும் பறந்து போகும். எங்கெல்லாம் ராம காதை ஒலிக்கிறதோ , அங்கெல்லாம் நான் வருவேன் என்று கூறி இருக்கும் அந்த சிரஞ்சீவியை , மனத்தால் நினைத்து , உங்களால் முடிந்த வரை நல்ல காரியங்களை மட்டுமே செய்து வாருங்கள். அந்த ஹனுமனும் நிஜம், ராமாயணமும் நிஜம் என்கிற பட்சத்தில் - அந்த சிவமும் , சக்தியும் சர்வ நிஜம்.

மனிதனாக பிறந்தது - நம் கர்ம வினைக்கேற்ப நமது சுக துக்கங்களை அனுபவிக்கவே. மனதளவில் திருந்தி , இனிமேலாவது நம்மால் முடிந்த வரை புண்ணிய காரியங்களையே செய்து வாருங்கள். நமது பூர்வ ஜென்ம பாவங்கள் முழுவதுமாக குறைந்து , நமது சந்ததிக்கே அது பெரிய பலம் கொடுக்கும் !

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகங்கள் - உங்களுக்கு அந்த ஹனுமானின் பரிபூரண அருள் கிடைக்க உதவும்.

ஸ்ரீ ராம ஜெயம் !

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்லோகம் மற்றும் மந்த்ரம்

1) ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபத் கன மாருதம் |
அபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜநேயம் நமாம்யஹம் ||

2) அஞ்ஜநா நந்தனம் வீரம் ஜானகீ சோ’கநாசனம் |
கபீச’மக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம் ||

3) ஆஞ்சநேயமதி பாடலாநநம் காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம் |
பாரிஜாத தருமூலவாஸிநம் பாவயாமி பவமான நந்தனம் ||

4) யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம் |
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் ||

5) மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் |
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஸ்ரீ ராமதூதம் சி’ரஸா நமாமி ||
————-
ப்ரார்த்தனா மந்த்ரம்
புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் ||
————-
கார்ய சித்தி மந்த்ரம்
அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் தவ கிம்வத |
ராம தூத க்ருபாஸிந்தோ மத் கார்யம் ஸாதயப்ரபோ ||
-————-
நமஸ்கார மந்த்ரம்
ராமதூத மஹாதீர ருத்ரவீர்ய ஸமுத்பவ |
அஞ்ஜநாகர்ப்ப ஸம்பூத வாயுபுத்ர நமோஸ்து தே ||
—————-
ஸ்ரீ ஆஞ்சநேய மூல மந்த்ரம்
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹனுமதே ராம தூதாய
லங்கா வித்வம்ஸனாய
அஞ்சனா கர்ப்ப ஸம்பூதாய
சாஹினி டாஹினி வித்வம்ஸனாய
கில கில பூ காரினே விபீஷணாய
ஹனுமத் தேவாய
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹூம் பட் ஸ்வாஹா!!
——
ஆஞ்சநேய பல ச்ருதி மந்த்ரம்

ஓம் நமோ பகவதே ஆஞ்சனேயாய மஹா பலாய ஸ்ரீ ஹனுமதே ஸ்வாஹா
————
ஆஞ்சநேயர் காயத்ரி

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ : ஹநுமத் ப்ரசோதயாத்!!
————-
ஓம் தத் புருஷாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ மாருதி ப்ரசோதயாத்
-—————
ஸ்ரீ ஆஞ்சநேயர் துதி

...

No comments:

Post a Comment