Thursday, January 5, 2012

பதினாறு வகையான பாக்கியங்களை அருளும் பதினாறு லட்சுமி


வெள்ளிக்கிழமைகளில் கனகதாரா ஸ் தோத்திரம் படித்து லட்சுமி பூஜை செய் வது விஷேஷம்.ஷோடஸ லட்சுமி என்று ஷோடஸ உபசாரங்களுடன் பதினாறு செல்வத்திற்கும் அதிபதியாக அன்னை யை வணங்குவோம். அகலகில்லேன் இறையும் என்று அலமேல் மங்கையாக திருவேங்கடமுடையானின் திருமார்பில் உறையும் கௌஸ்துப மணியாக விளங் கி வணங்குபவர்களுக்கு பதினாறு பேறு களையும் வழங்கும் வள்ளல் பெருந் தகையான தயாதேவி அன்னை லட்சுமி.
ஸ்ரீகாமேச்வரி என்ற ஆதிலட்சுமி மேலும் பதினைந்து லட்சுமிகளாக உருவெடுத்து, நமது வாழ்க்கை சிறக்க பதினாறு வகை பாக்கிய ங்களைக் கொடுத்து வருகிறாள். அந்த பதினாறு லட்சுமிகளின் பெருமைகளைக் காண்போம்.
1. சௌந்தர்ய லட்சுமி

நாம் யாரையாவது பார்க்கப் போனால் முதலில் நம் முகத் தைத்தான் பார்ப்பார்கள். முக வசீகரம் இருந்தால்தான் அவர் கள் நம்மை வரவேற்பார்கள். இதற்கு “சௌந்தர்ய லட்சுமீ கரம்’ என்று பெயர். இந்த பாக் கியம் நமக்கு எப்போதும் இரு க்க வேண்டும். இதற்காக முதல் லட்சுமியான சௌந்தர்ய லட்சு மியைப் பூஜை செய்ய வேண்டும்.
2. சௌபாக்கிய லட்சுமி

போகும் இடத்தில் நமக்கு வரவேற்பு நன்றாக இருந்தாலும், நமது சௌபாக்கியங்கள் நல்ல முறையில் இருக்க வேண்டும். அதாவது நல் ல மனைவி, நல்ல கணவன், வீடு, வாகனம், மற்ற வசதிகள் என பலவிதங்களில் நன்மை ஏற்பட சௌபாக்கிய லட்சுமியின் அருள் வே ண்டும். அதற்காக சௌபாக்கிய லட்சுமியை மனதில் நினைத்து வழிபட வேண்டும்.
3. கீர்த்தி லட்சுமி

எவ்வளவு அழகும் செல்வங்க ளும் இருந்தாலும், நமது பெயர் சமூகத்தில் பல பேருக்குத் தெரி ந்திருக்க வேண்டும். இத்தகைய கீர்த்தியைத் தருபவள் கீர்த்தி லட்சுமி. அவளை வணங்கி னால் கீர்த்தி யுடன் வாழலாம்.
4. வீரலட்சுமி

நம்மையும், நமது மனைவி, மக்கள், செல்வம் போன்றவற் றையும் காப்பாற்றிக் கொள்ள நம்மிடம் வீரம் இருக்க வேண் டும். இந்த வீரத்தை அளிப்பவள் வீர லட்சுமி. வீர லட்சுமியை வணங்கினால் இந்த பாக்கிய த்தைப் பெறலாம்.
5. விஜயலட்சுமி
மனிதனுக்கு எவ்வளவு செல்வங்கள், மதிப்பு இருந்தாலும் அவனுக் கு செல்வாக்கு என்பதும் அவசியம் வேண்டும். எதை எடுத்துச் செய்தா லும் அதில் வெற்றியைக் காண வேண்டும். அதற்கு அருள்புரியும் விஜய லட்சுமியை வணங்கி அந்த பாக்கியத்தைப் பெற லாம்.
6. சந்தான லட்சுமி
மனிதனுக்கு அழகு, செல்வம், செல்வாக்கு என பல பாக்கிய ங்கள் இருந்தாலும், அவனுக்கு குழந்தை இருந்தால்தான் அவ ன் பெருமை அடைகிறான். அது நல்ல குழந்தையாகவும் இரு க்க வேண்டும். இதற்கு அருள் புரிபவள் சந்தான லட்சுமி. அவ ளை வணங்கினால் சந்தான பாக்கியம் கிடைக்கும்.
7. மேதா லட்சுமி
பல முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்க வேண்டிய சூழல் நமக்கு ஏற்படும். அதில் சரியான முடிவைத் தீர்மானிக்க புத்தி சரிவர வேலை செய்ய வேண்டும். அதற்கு மேதா லட்சுமியின் அருள் வேண்டும். அவளை வணங்கினால் அந்த பாக்கியம் கிடைக்கும்.
8. வித்யா லட்சுமி

கல்வி என்பது தொழிற்கல்வி, வாழ் க்கைக் கல்வி, அறிவுக்கல்வி போ ன்று பலவகைப்பட்டது. இவை அனைத்தையும் அடைந்தாலும் வித் தை என்பது “ஸ்ரீவித்யை’ என்று கூறப்படும் காமேச்வரியின் பஞ்சதசீ மந்திரங்களேயாகும். இந்த மந்திர சக்தியினால் எதையும் சாதிக்க முடி யும். அதனை அடைவதற்கு வித்யா லட்சுமியின் அருள் வேண்டும்.
9. துஷ்டி லட்சுமி

எல்லா பாக்கியங்களும் இருந் தாலும் எவரிடமும் சொல்லிக் கொள்ள முடியாதபடி மன வேத னையும் இருக்கும். அந்த மன வேதனையை அகற்றி ஆனந்த த்தை அளிப்பவள் துஷ்டி லட் சுமி ஆவாள்.
10. புஷ்டி லட்சுமி

வெளியுலகில் நாம் பழகும்போது நம்முடைய சரீர த்தைக் கண்டு எவரும் அருவருப்புக் கொள்ளாமல் இருக்க வேண்டும். அந்த பாக் கியத்தைப் பெற புஷ்டி லட்சுமியின் அருள் அவசியம் வேண்டும்.
11. ஞான லட்சுமி

வாழ்க்கையில் எல்லா சுகங்களை யும் அனுபவித்தாலும் அவ்வளவு சுக ங்களும் நிலையானது அல்ல. நாம் ஆசைப்பட்ட பொருட்கள் யாவும் ஒரு காலகட்டத்தில் நம்மை விட்டுப் பிரி ந்து விடும் என்ற அறிவு நமக்கு இரு ந்தால், நாம் அதற்குப் பயப்பட வேண் டிய அவசியம் இல்லை. அந்த அரு ளை நமக்கு அளிப்பவள் ஞான லட்சுமி ஆவாள்.
12. சக்தி லட்சுமி

இறை அருளால் எல்லாவித பாக்கிய ங்களை நாம் அடைந்திருந்தாலும், நம் உடலிலும் மன திலும் சக்தி வேண்டும். எல்லா காரியங்களை யும் சாதிக்க வேண்டுமானால் மனோ பலம் அவசியம் தேவை. இதனைப் பெற சக்தி லட்சு மியை வணங்கினால் போது ம்.
13. சாந்தி லட்சுமி

எவ்வளவு செல்வம், செல்வா க்கு இருந்தாலும் ஏதோ ஒன் று மனதை உறுத்திக் கொண் டு நமது அமைதியைக் கெடு த்து வரும். அத்தகைய தொல் லைகள் எதுவும் இல்லாமல் இருக்க சாந்தி என்னும் அமை தி அவசியம் வேண்டும். இந்த அருளைப் பெற சாந்தி லட்சு மியை வணங்க வேண்டும்.
14. சாம்ராஜ்ய லட்சுமி

மனிதனுக்குப் பெருமை என்பது மிக மிக அவசியம். வீட்டில் குழந்தைகள் நம் மை மதிக்க வேண்டும். மனைவி பெரு மை கொள்ள வேண்டும். நல்ல மனை வியை அடைந்ததற்கு கணவனும் பெரு மை கொள்ள வேண்டும். சமூகத்தில் ஒரு உயரிய அந்தஸ்து கிடைக்க வேண் டும். இந்த பாக்கியங்களைப் பெற சாம்ராஜ்ய லட்சுமியின் கடாட்சம் தேவை.
15. ஆரோக்கிய லட்சுமி
மனிதனுக்கு எல்லா வசதிகளும் இருந்து உடல் ஆரோக்கியம் இல் லையென்றால் எந்த வசதிகளை யும் அனுபவிக்க முடியாது. உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மேற்கூறப்பட்ட பதினான்கு லட் சுமிகளின் அருளைப் பெற்றதன் பலன்களைப் பெற முடியும். அந்த உடல் ஆரோக்கியத்தைப் பெற ஆரோக்கிய லட்சுமியின் அருள் தேவை.
16. ஸ்ரீகாமேச்வரி என்ற ஆதி மகாலட்சுமி

மகாலட்சுமி பாற்கடலிலிருந்து தோன்றி யது அமாவாசை தினத்தில் தான். அமா வாசை தினத்தன்று ஆதிமகாலட்சுமிக்குப் பூஜை செய் வது மிக மிக விசேடமானது. இந்த ஆதி மகாலட்சுமி முக்கோணத் தின் நடுவில் காமேச்வரி என்ற திரு நாமத் துடன் வீற்றிருக்கிறாள். முக்கோண வடி வில் உள்ள யந்திரத்தில் மூன்று பக்க ங்களிலும் ஐந்து, ஐந்து லட்சுமிகளால் சூழப்பட்டு நடுவில் ஆனந்தமாக வீற்றிரு க்கிறாள். இவளது அம்சங்களே மற்றைய பதினைந்து லட்சுமி களாகும்.
பதினாறு லட்சுமிகளைப் பூஜை செய்து எல்லா பாக்கியங்களையும் பெற்று வளமுடன் வாழ்வோம்.
ஸ்ரீ மகாலட்சுமி ஸ்ரீரங்க ஷேத்திரவிருட்சமரத்தில் வில்வம் போன்ற வற்றை நாடுபவள். வில்வமரத்தில் ஸ்ரீ மகாலட்சுமி வாசம் செய்கிறா ள். வில்வத்தால் அர்ச்சனை செய்வ தும் வில்வமரத்தைப் பேணுவதும் ஸ்ரீ மகாலட்சுமிக்குப் பிரியமானதா கும். சூரியனைப் போன்ற ஒளியு டைய ஸ்ரீ மகாலட்சுமியே உன்ன ருளால் உண்டாகிய “வனஸ் பதி” என்று புகழ்பெற்ற வில்வமரம், அத னுடைய பழம் எங்கள் மனதையும் புற இந்திரியங்களையும் பற்றியு ள்ள அஞ்ஞானத்தையும் மங்கள மற்றவற்றையும் நீக்கிவிடும்.
தாமரைமலர் ஸ்ரீ மகாலட்சுமியுடன் பிறந்தவனான சந்திரனைக் கண்டதும் அவனை வெறுத்து இதழ் களைக் குவிக்கும் பழக்கத்தை வழக் கமாகக்கொண்டது. இதனைக் கண்ட மகாலட்சுமி தாமரை மலரில் அதிக மாக வசிக்காது தன்னுடன் பிறந்த கௌத்துவ மணி க்குப் பெருவாழ்வு கொடுக்க எண்ணி அதனை அணிகி ன்ற திருமாலின் மார்பில் நித்தியவசிப் பிடம் கொண்டாள்.இதனால் மக்கள் உலகவர் உடன் பிறந்தோரை வெறு த்துச் சினங்காது நேசமாகவும் அந்நி யோந்நிய உறவுடன் இருப்பதனையுமே ஸ்ரீமகாலட்சுமி அதிகம் விரும்பிப் பேரருள் புரிவாள். மகாலட்சுமியானவள்
நெல்லிமரத்திலும்,நெல்லிக்கனியிலும் அதிக விருப்பமுடையவள். இவை எங்கெங்கெல்லாம் காணப்படுமோ அங்கங்கெல்லாம் ஸ்ரீ மகா லட்சுமி வாசஞ்செய்வாள். நெல்லிக் கனி சாப்பிடுவதால் ஆரோக்கியமும் புண் ணியமும் கிடைக்கின்றன. ஆனால், வெள் ளிக்கிழமைகளிலும் இரவிலும் உண்ண க்கூடாது. நெல்லிமர நிழலிலே அன்னமளிப் பது மிகவும் சிறப்பானது. துவாதசியன்று நெல்லிக்காயை உணவிலே சேர்த்தால் ஏகாதசி பலனுண்டு.
வெண்ணிற மாடப்புறாக்கள் வாழும் இடங் கள் கலகம் என்பதையே அறியாத பெண்கள் வதியும் வீடுகள், தானியக் குவியல்கள் உமி சிறிதுமில்லாத அரிசிக் குவியல், எல்லாருட னும் பகிர்த்துண்டு வாழும் மனிதன், இனி மையோடும் கனிவோடும் இருக்கும் மனி தன், நாவடக்கம் உள்ளவன், உணவு உண்ப திலே அதிக நேரம் போக் காதவன், பெண்க ளைத் தெய்வமாக மதிப்பவன் இவர்களிடத்தில் ஸ்ரீ மகாலட்சுமி நித்திய வாசம் செய்வாள். வலம்புரிச் சங்கு, நெல்லிக்காய், கோமயம், தாமரை வெண்மை, பரிசுத்தமான ஆடை அணிகளிலும் ஸ்ரீ மகாலட்சுமி நித்தியவாசம் செய்வாள்.
மகாலட்சுமியை “ஸ்ரீதேவி, “அலைமகள், “பொன்னரசி, “இலட்சுமி, “செல்வமகள், “செந்தாமரை ராணி, “திருமகள், “மங்களலட்சுமி என்றெல்லாம் அழைக்கப்படுகிறாள்.

No comments:

Post a Comment