Posted on January 22, 2012 by muthukumar
ஞான முத்திரை

நினைவு
சக்தியை அதிகரிக்கவும், கவனக் குறைவைக் குறைக்க வும், மன அமைதியை
அதிகரிக்கவும் இந்த முத்திரையைப் பயன் படுத்தலாம். தொடர்ந்து
பயன்படுத்துபவர்கள் ஹிஸ்டீரியா, மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து பெருமளவு
விடு படலாம் என்று சொல்லப்படுகிறது.
வருண முத்திரை

உடலின்
நீர்சமநிலை மாறுமானால் அதனால் ஏற்படும் தீய விளைவு களை இந்த முத்திரை
தடுக்கிறது என்று சொல்கி றார்கள். இரத்த சம்பந்தமான வியாதிகளைப் போக்கவும்,
தோல் சுருக்கத்தைப் போக்கவும் கூட இந்த வருண முத்திரை உதவுகிறது
என்கிறார்கள்.
சூன்ய முத்திரை

இந்த முத்திரை முக்கியமாக காது வலியையும், மற்ற காது சம்பந்த மான குறைபாடுகளையும் போக்க உதவுகிறது.
ப்ராண முத்திரை

இந்த
முத்திரை கண்பார்வைக் கோளாறையும், மற்ற கண் சம்பந்த மான வியாதிகளையும்
குறைக்க உதவுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கும், களைப்பை நீக்கவும்
கூட இந்த ப்ராண முத்திரை பயன்படுகிறது என்கிறார்கள்.
அபான முத்திரை

இந்த முத்திரை சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மூலம் மற்றும் மலச்சிக்கலைப் போக்க இந்த முத்திரை பெருமளவு உதவுகிறது.
அபான வாயு முத்திரை

இதய
சம்பந்தமான குறைபாடுகளை நீக்கவும், இதயத்தை வலுப் படுத்தவும் இந்த அபான
வாயு முத்திரை உதவுகிறது. அத்துடன் வாயுத் தொந்தரவுகளையும் இந்த முத்திரை
வெகுவாகக் குறைக் கிறது.
லிங்க முத்திரை

சளி, கபம் போன்ற கோளாறுகளை இந்த லிங்க முத்திரை வெகு வாகக் குறைக்கிறது.
இனி இந்த முத்திரைகளைச் செய்யும் போது நினைவில் நிறுத்த வேண்டிய வழி முறைகளைப் பார்ப்போம்.
முதலில் நன்றாகக் கைகளைக் கழுவிக் கொள்ளுங்கள்.
இந்த
முத்திரைகளை அமர்ந்து கொண்டும், நின்று கொண்டும், படுத்த நிலையிலும்,
நடந்து கொண்டும் கூட செய்யலாம். ஆனால் பர பரப்போ அவசரமோ இல்லாமல் அமைதியாக
இருப்பது மிக முக்கியம்.
இந்த முத்திரைகளைச் செய்யும் கால அளவு பற்றி பல வித கருத்துகள் உள்ளன. அரை மணி முதல் முக்கால் மணி நேரம் வரை
உங்களுக்குத்
தேவை யான முத்திரைகளைச் செய்யலாம் என்கிறார் கள். சிலர் பத்து அல்லது
பதினைந்து நிமிட கால ங்களில் சிறிது இடை வெளி விட்டு மூன்று முறை கூடச்
செய்யலாம் என்று கூறு கிறார்கள்.
ஒரேயடியாக
நீண்ட நேரத்திற்குச் செய்ய ஆரம்பிக்காமல் சுமார் ஐந்து நிமிட காலம்
செய்வதில் இருந்து ஆரம்பிப்பது நல்லது. பின் சிறிது சிறிதாக நேரத்தைக்
கூட்டிக் கொண்டு செல்லுங்கள். இந்த முத்திரைகளால் வியக்கத்தக்க
பெரும்பலன்கள் கிடைக்கின்றன எ
ன்று பல அறிஞர்கள் கூறுகிறார் கள்.
கண்டிப்பாக
இந்த முத்திரைகள் பயிற்சி இன்றைய மருத்துவ சிகிச் சைக்கு இணை என்று
சொல்லும் அளவு பரிசோதனைகள் முடிவு விஞ்ஞான பூர்வமாக முழுமை யாக வெளியாகி
விடவில் லை. ஆனால் நீங்கள் இதை முயற்சித்து உண்மையைப் பரி சோதித்துக்
கொள்வதில் எதிர் விளைவுகள் இல்லை. எனவே செலவோ, பிரயாசையோ இல்லாத இந்த
முத்தி ரைகள் மூலம் சிறிது பலன் கிடைத்தாலும், மருந்துகள் இன்றி பக்க
விளைவுகள் இன்றி இயல்பான வழியில் கிடைப்பது பெரிய விஷயம் அல்லவா?
No comments:
Post a Comment