Saturday, February 25, 2012

சிவனை தரிசனம் செய்ய உகந்த காலம் எது?

பிரதோஷ காலம் என்பது என்ன? சிவ தரிசனம் செய்ய, அது ஏன் விசேஷமாகச் சொல்லப்படுகிறது?
சிவனை வழிபட ஏற்ற காலம் மாலை நேரம்; அதிலும் சிறந்தது சோமவாரம்; (திங்கட்கிழமை) அதிலும் சிறந்தது மாத சிவ ராத் திரி, அதிலும் சிறந்தது பிரதோஷ காலம். பிரதோஷ காலத்தி ல் சிவதரிசனம் செய்பவர்கள், எல்லா தேவர்களையும் தரிசித்த பலனையும் பெறுவர்.
பிரதோஷ காலத்தில், சகல தேவர்களு ம், சிவதரிசனம் செய்ய வந்து விடுகின் றனர். அதனால், நம் வீடுகளில் தெய்வ வழிபாடு பிரதோஷ காலத்தில் அவசிய மில்லை.
பிரதோஷ காலங்களில் சிவதரிசனம் செய்வதால், சகல பாவங்க ளும் விலகி, புண்ணியம் கிடைக்கும்; சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்; சோமாஸ் கந்த மூர்த்தியை தரிசிப்பதால், இந்திரனு க்கு சமமான புகழ் கிட்டும்; பிரதோஷ காலத்தில் சிவாலயத்தில் செய்யப்படும் எந்த கைங்கர்யமும் பலவாகப் பெருகி, அளவற்ற பலனை கொடுக்கும்.
பிரதோஷ காலத்தில் சிவன் கோவில் வழியாகப் போனான் ஒருவன். போகும் போது வெற்றிலை பாக்கு போட்டுக் கொ ண்டே போனான். வெற்றிலை பாக்கு போ ட்ட பிறகு, விரலில் கொஞ்சம் சுண்ணா ம்பு இருந்தது.
அதை வழியிலிருந்த சிவன் கோவில் சுவரில் தடவி விட்டுப் போனான். ஆனா ல், அதுவே பெரும் புண்ணியமாகி விட்ட து.
இவன் தடவிய சுண்ணாம்பு, மதில் சுவரில் இருந்த ஒரு சிறிய பள்ளத்தை அடைத்து விட்டது. உடனே, சிவன் கோவிலில், கைங்கரியம் செய்த புண்ணி யம் இவனுக்கு சேர்ந்து விட்ட து.
இப்படியாக சிவ கைங்கர்யம், வழிபாடு எல்லாவற்றுக்குமே புண்ணியம் சொல்லப்படுகிற து. சிவன் கோவிலில், “சோம சூத்ர பிரதட்சணம்…’ என்று ஒன்று உண்டு. இது, கொஞ்சம் சிக்கலானது. புரிந்து கொள்வது கூட சிரமம்; புரிந்து செய்தால் புண்ணியம்.
பிரதோஷ காலத்தில் சிவ தரி சனம் செய்வது புண்ணியம். ¬முன் மண்டபத்தில் உள்ள நந்தியின் கொம்புகள் வழியாக சிவலிங்க தரிசனம் செய்ய வே ண்டும் என்பது சாஸ்திரம்.
சிரமப்பட்டாவது பிரதோஷ காலத்தில், சிவதரிசனம் செய் தால் புண்ணியம் கிடைக்கும். அதை விடுத்து, “டிவி’ பார்த்துக் கொண் டிருந்தால், “கரன்ட்’ செலவுதான்; புண்ணியம் கிடைக்குமா?

No comments:

Post a Comment