Sunday, February 8, 2015

ஆத்மாவை மறைக்கும் 10 துர்குணங்கள்


Posted By Muthukumar,On Feb 8,2015
காமம்: தனம், தான்யம், தாரம், தன் பிள்ளை, பேரன்கள் மீதுள்ள அளவிலா ஆசை 

குரோதம்: மற்றவருக்கு தீமை விளைவிக்க முற்படுவது. 

லோபம்: மற்றவருக்கு ஈயாதவனின் இயல்பு 

யோகம்: மனைவி மக்கள் மீது அதிக பாசம் வைத்து அதிக செல்வம் தேடும் முயற்சியில் ஈடுபடுவது. 

மதம்: மற்றவர்களை துச்சமாக நினைத்து கர்வத்துடன் செயல்படுவது. 

மாச்சர்யம்: மற்றவர் நன்கு வாழ்வதைக் கண்டு பொறாமைப்படுதல். 

டம்பம்: நான்கு பேர் மெச்சுவதற்காகவே நல்ல காரியம் செய்தல் 

தர்ப்பம்: செல்வம், செல்வாக்கு - இவற்றில் தன்னை மிஞ்சியவர் யாருமில்லை என்று கர்வம் கொள்ளல் 

ஈர்ஷை: தனக்கு நேர்ந்த கஷ்டமும், துக்கமும், பிறருக்கும் ஏற்பட வேண்டும் என நினைப்பது 

அசூயை: தீமை செய்வோருக்கு, பதிலுக்கு, தீமை செய்ய விரும்புவது. 

இந்த பத்து அழுக்குகளும், நீரை மூடியுள்ள பாசி போல, ஆத்மாவை மறைக்கின்றன.

No comments:

Post a Comment