Wednesday, October 1, 2014

பித்ரு தோஷம் என்றால் என்ன?


நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கி றோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷ ம் பித்ரு தோஷம் எனப்படும்.
அதை ஜாதகத்தில் கண்டறிவது எப்படி?
ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில்சேர்ந்த்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு.
அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திரு வெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடு ம்பத்தில் யாரேனும் விபத்துக் களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்துகொண்டிருந்தா லோ மட்டுமே திலஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை.
அந்த தோஷத்தினால் ஏற்படும் தீய விளை வுகள் என்ன?
இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திரும ணம் நடக்காது. அல்லது மிகவு ம் தாமத மாக நடக்கும். விவாக ரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரி டையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. கலப்புத் திருமணம் நடக்கவும், பெற்றொருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.இந்த தோஷம் உள்ள சில தம்ப திகள் ஒருவருக்கொருவர் உண் மை யானவர்களாக நடந்துகொள்வதி ல்லை.
எத்தகைய பாவங்கள் செய்திருந்தால், இந்த தோஷம் வரும்?
இந்த தோஷம் வருவதற்கான கரணங்கள்: கருச்சிதைவு செய்துகொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும். ஒருவரி ன் இளையதாரத்துப் பிள் ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும். ஆண் வாரிசு இல்லாத சித்தப்பா, பெரி யப்பா, அத்தை , சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றிக யா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும்.
தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம்.
இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ் வளவு அதிர்ஷ்ட்டமான கிரக நிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும் பித்ரு தேவதைகளும் தடைசெய்கிறார்கள் .
பித்ருக்களின்சாபம் கடவுள் நமக்குத்தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியு டையது.
21 தலைமுறைக்கு கயா,காசியில் பித்ரு பூஜை பிண்டதானம் மற்றும் தர்ப்பனம் செய்ய விரும்புவோர் தொடர்புகொல்லவும்.

No comments:

Post a Comment