Sunday, February 12, 2012

வள்ளலார் ஒரு வாழ்வியல் சகாப்தம்

வள்ளலார் பிறந்த பிறகுதான் பயிர்ச் செடிகளுக்கும் ஒரு பாசமுள்ள அன்னை உண்டு என்று உலகுக்குத் தெரிந்தது. அக த்தே கருத்தும், புறத்தே வெளுத்த மனிதர் களை சகத்தே திருத்த தெய்வமாக பிறந்த வர்தான் வள்ளலார். ‘ஜுவகாருண்ய ஒழு க்கமே கடவுள் வழிபாடு, பசி நெருப்பை அணைப்பதே ஜுவகாருண்யம்’ என்ற புதி ய வேதத்தை தோற்றுவித்தவர். இந்தியா வில் 7 லட்சம் கிராமங்களில் வாழும் உயிர்களை காக்க தமிழகத்தில் அன்னதா னம், சம்போஜனம் என்ற விதைகளை முதலில் விதைத்தவர் வள்ளலார்தான். பொருளை அள்ளி அள்ளிக் கொடுத்த வள் ளல்களை விட அருளை அள்ளி அள்ளி வழங்கிய அருட்பிரகாசரை உலகமே வியப்புடன் பார்த்தது, பார்க்கிறது!
ஆன்மிகப் பேரொளி வள்ள லார் ராமலிங்கர் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தே தி மாலை ஐந்தரை மணிக் கு, தென்ஆற்காடு மாவட்டம் மருதூரில் வசித்த இராமை யா-சின்னம்மை தம்பதியரு க்கு தோன்றினார். வள்ளலா ர் என்று அழைக்கப்படும் இராமலிங்க சுவாமிகள் ஞானி மட்டுமல்ல. சமுதாயத்தில் புரட்சிகரமான மாறு தல்கள் செய் யவே அவதரித்தார். இராமலிங்கர் குழந்தையாக இருந்த போதே, பெற்றோர் இறந்து விட்டனர். எனவே, இராமலிங்கரை அவருடைய தமையனார் சபா பதி வளர்த்தார். இராமலிங்கருக்கு பள்ளிப் படிப்பில் நாட்டம் இல் லை. சிறு வயதிலேயே இராமலிங்கருக்கு ஆன் மிக நாட்டம் அதிகம் இருந்தது. ஐந்து வயதிலேயே சந்தநயம் மிக்க பக்திப் பாடல்களை இனிய குர லில் பாட தொடங்கினார். சென்னை கந்தர் கோட் டத்தில் சரமாரி பொழியும் பாடலைக் கேட்டு, “ படிக்காதவன், முரட்டுப்பிள் ளை” என்று கருதிய சபாபதி இவற்றைக் கண்டு வியந்தார்.
வீட்டு மாடி அறையில் கண்ணாடி முன் விளக்கை ஏற்றிவைத்து அந்த வெளிச்சத்தில் படித்து வந்தார் இராமலிங்கர். அங்குதான், ஒன்பது வயதில் இராமலிங்கருக்கு ‘ஞானோதயம்’ கிடைத்தது. ‘ஒரு நாள், கண்ணாடியில் இருந்து அருட்சோதி கிளம்பி என்னை சூழ்ந் தது. இறையருளின் ஈடு இணையற்ற கருணையில் பரவசப்பட் டேன்’ என்று பக்தர்களிடம் தெரிவித்து ள்ளார், இராமலிங்கர்.
அண்ணன் சபாபதியின் ஆன்மிக சொற் பொழிவுகளின் போது உதவியாளராக செயல்பட்டு வந்தார் இராமலிங்கர். ஒரு நாள் இராமலிங் கரை சொற்பொழிவா ற்றக் கூறினார் சபாபதி. திருஞான சம் பந்தர் பற்றி இராமலிங்கர் சொற் பொழி வாற்றினார். மெய்மறந்த கூட்டம் ‘12 வய திலேயே அந்த ஞானமா!’ என போற்றி துதித்தது. பல பகுதிகளிலும் இராமலி ங்கரின் அருளுரைகள் தொடர்ந்தன.
வள்ளலார் பாதை: மக்கள் மனதில் வள்ளல் வள்ளலார் ஆனார். அவர் அருள்மனம் பல மதத்தினரும் கூடி வழிபடும் ஞானசபை ஆயி
வள்ள‍லார் தனது திருக்கரங்களால் ஏற்றிய அடுப்பு
ற்று. வடலூரில் வசிக்க ஆரம் பித்த இராமலிங்கர், 1867 மே 23 ல் ‘தர்மசாலை’யைத் தொ டங்கி ஏழை எளியோர்க்கு உணவு, மருத்துவ சேவை அளித்து அருளுரைகளையும் நிகழ்த்தி வந்தார். அங்குதான், இராமலிங்கரின் தெய்வீக சக் தி சித்து வேலைகளாகப் பொ ங்கி பிர வாகித்தது.
கவிஞர், சமூக சீர்திருத்தவா தி, மறுமுறை கண்ட வாசகம், ஜுவகாரு ண்ய ஒழுக்கம் என்ற நூல்களை இயற்றிய நூலாசிரியர், உரையாசிரியர், பதிப் பாசிரியர், போதாகாசிரியர், சித்த மருத்துவர், அருள் ஞானி, கல்வெட்டு ஆராய்ச்சியாளர், தமிழகத்தில் முதல் திருக்குறள் வகுப்பு நடத்தியவர், மும்மொழி கல்வியை கொண்டுவந்தவர், முதல் முதியோர் கல்விக்கு வித்திட்டவர் என்று பல சிறப்பு பெயர்களை பெ ற்றார்.
ஆழ்மன வழிபாடு, தியா னம் பற்றிய வழி காட்டுதல் கள் போன்றவை ‘வள்ள லார் பாதை’ என்று பிரசித்தி பெற ஆரம்பித்தது. அவரது பன்முக ஞானமும், முதன் மையும் நம்மை வியக்க வைக்கின்றன. 1867 ல் இராமலிங்க அடிகளாரின் பாடல்களை ‘திருஅருட்பா’ என்ற பெயரில் வெளியிட்டார் அவரது முதல் சீடரான வேலாயுத முதலியார்.
வள்ளலாரின் கொள்கைகள்: மதங்களின் மூன்று முக்கிய அம்சங் கள் தத்துவம், ஒழுக்கம், சடங்குகள். இவற்றில் மக்களிடம் மதவெறி யைத் தூண்டுவது சடங்குகளே எனக் கண்டு அவற்றை ஒதுக்கி, மனித இனங்களை இணைப்பது ஒழுக்க நெறியே என்பதை உணர் ந்து 1865 ஆம் ஆண்டு சமரச சன்மார்க்க சங்கத்தை வள்ளலார் நிறு வி னார். அதன்படி எல்லோரும் பின்பற்றக்கூடிய கொள்கைகளை யும், வாழ்க்கையின் ரகசியங்க ளையும் கூறினார்.
“நாம் எல்லா உயிர்களிடமும் அன்பாக இருக்க வேண்டும். உயிர்க் கொலை செய்தலும், புலால் உண்ணுதலும் கூடாது. சாதி, மதம், குலம் என்ற வேற்று மைகளை பார்க்கக் கூடாது. மக்கள் அனைவ ரும் ஒற்றுமை யுடன் வாழ வேண்டும். கொலை , கோபம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் கூடாது, பதட்ட ப் படக்கூடாது” என்பவை, இராமலிங்கரின் முக்கிய கொள்கைகள்.
அருட்பெருஞ்சோதி: இராமலிங்க சுவாமிகள் வடலூரில் தரும சா லை ஒன்றை அமைத்தார். அங்கே தினமும் அன்னதானம் செய்யும் வழக்கத்தைத் தொடங்கி வைத்தார். அது இன்றும் தொடர்கிறது.
1870ல் வடலூரில் மேட்டுக்குப்பம் கிராமத்தி ல், “சத்திய ஞானசபை” என்னும் கோவிலைப் புது முறையில் கட்டினார். அதனுள், விளக்கு ஒன்றும், விளக்கின் முன் கண்ணாடி ஒன்றை யும் கட்டினார். விளக்கின் முன் ஏழு திரைகள் வைத்து மறைக்கப் பட்டிருக்கும். இதனை ஒவ்வொன்றாக நீக்கிய பிறகு தோன்றும் விளக்கொளியை “அருட் பெருஞ்சோதி” ஆண்டவராகக் கருதி வழி படுமாறு மக்களை இராம லிங்க அடிகள் கேட்டுக் கொண்டார்.
1872 ஜனவரி 25 ல் ‘ஞானசபை’ துவக்கப்பட்டது. அதனுள்தான் இந்த
அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை
“அருட்பெருஞ்சோதி”  உள்ளது. ஏழு மாயைகளை அகற்றினால் தெய் வீகப் பேரொளியைக் காணலாம் என்பதே தத்துவ விளக்கம்.
சத்மார்க்கம் என்ற வடமொழிச் சொல் லே தமிழில் சன்மார்க்கம் என உருமா றிற்று. சத் என்றால் நிலைத்திருப்பது, உண்மை என்று பொரு ள்படும். சன் மார்க்கம் என்பது எல்லா மதங்களும் கூறும் நிலையான, உண்மையான ஒழுக்கம். இச்சன் மார்க்க சமயம் கலப் பதற்கு, சுத்த மானது. எனவேதான் வள் ளலாரின் இயக்கம் சமரச, சுத்த சன் மார்க்க, சத்திய சங்கமாக மலர்ந்தது.
அதனால்தான் திருமணம் நடந்தும் முத லிரவு அன்றே மனைவியிடம் “உடல் மீதான ஆசையை ஒழித்து விடு. நான் சன்மார்க்கத்தை நாடு பவன். சிற்றின்பத்துக்கு அடிமையாக மாட்டேன்” என்றார். சன்மார்க்க த்தின் இரு கண்கள் அன்பும், அறிவும்தான். அன்பு முற்றிய நிலையில் அருளாகவும், அறிவு முற்றிய நிலையில் அறியாமை இரு ளை அகற்றும் சோதியாகவும் மலர் கிறது. இதுவே அருட்பெருஞ் சோதியாகும். இந்த அருட் பெரு ட்சோதியை வழிபடத் தேவை யானது தனிப்பெருங்கரு ணை, தயவு, தொண்டு, உயிர் இரக்கம் மட்டுமே.
மண்ணில் பிறந்த விருட்சம்: விக்கிரகங்களுக்கு முன்நின்று பரவ சமாகப் பாடி, அதற்காகப் படையல் செய்து, தான் செய்யும் பாவங் களுக்குப் பரிகாரமாக காசுகளை கொட்டிக் குவிப்பதுதான் பக்தி என்று இருக்கும் இக்காலத்தில் எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் இருப்பதை அறி வதே ஈசுவர பக்தியாகும் என்று பக்திக்கு புதிய பரிணாமத்தை கொடுத்தவர் வள்ளலார்.
வள்ளல் பெருமான் வறட்டு ஆத்திகரும் அல்ல. முரட்டு நாத்திகரும் அல்ல. இரண்டிற்கும் இடைப்பட்டவர். மனிதனை தினம் தினம் வதைக்கும், பயமுறுத்தும் பிணிகளில் ஒன்று பசிப்பினி, மற்றொ ன்று மரணப்பினி. இந்த இரண்டையும் எதிர்த்து குரல் கொடுத்தவர் வள்ளலார்.
ஜோதியில் கலந்தார்: தாம் 51 ஆவது வயதில் உலக வாழ்வை விட்டுச் செல்லப் போவதாக சீட ர்களிடம் கூறி, அவர்களைப் பக் குவப்படுத்தினார். மறைவதற்கு 3 மாதங்களுக்கு முன்பிருந்தே சாப்பிடும் உணவின் அளவைப் படிப்படியாக குறைக்கலானார். முடிவில் தேன் மட்டும் அருந்தினார்.
1874 ஜனவரி 30… அது, நள்ளிரவில் புனிதமான பூச நட்சத்திரம் உதி க்கும் புனிதநாள். இராமலிங்கர் அன்று நிகழ்த்திய சொற்பொழிவில், “அன்பர்களே! அருட்பெருஞ்சோதி எப்போதும் எரியும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இறைஜோதியுடன் ஐக்கியமா கப் போகிறேன். அறையை வெளியில் தாழ்ப்பா ள் போட்டு விடுங்கள். மீண்டும் கதவைத் திற க்கும்போது அறை காலியாக(இருந்தது) இருக் கும்” என அறிவித்தார். அறைக்குள் புகுந்து கத வை உட்புறமாகப் பூட்டிக் கொ ண்டார். அதிர்ந்த பக்தர்கள், சிறிது நேரம் கழித்து அறையைத் திற ந்தனர். உள்ளே அவர் இல்லை. மாயமாக மறை ந்திருந்தார்.
அடிகளாரின் மறைவு பற்றி அரசாங்கத்துக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அப்போது தென் ஆற்காடு மாவட்டக் கலெக்டராக இருந்த ஜே. எச். கார்டி ன்ஸ் மற்றும் சில அதிகாரிகள், டாக்டர் ஆகியோ ருடன் சென் று விசாரணை நடத்தினார். பின்னர் அவர் அரசாங்கத்துக்கு அவர் அனுப்பிய அறிக் கையில், “இராமலிங்கர், இறைவனோடு ஐக்கி யமாகி விட்டதாக அவர் மீது பக்தி கொண்டவர்கள் நம்புகிறார்கள். ஒரு மதத் தலைவர் பற்றி கருத்து வேற்றுமை எழுதுவது இயற்கை என்றாலும், அவருடைய பாடல்களைப் பொறுத்தவரை, அவை மிக உயர்தரமானவை” என்று குறிப்பிட்டுள்ளார்.
வள்ளலார் ஏற்றிவைத்த அருட்பெருஞ்சோதியு ம் அவர் தொடங்கிய ஆன்மிக மறுமலர்ச்சி சேவைகளும் இன்றும் ஒளி வீசிக் கொண்டிரு க்கின்றன. இவரது சேவையை கருத்தில் கொ ண்டு 2007 ஆகஸ்ட் 17 ல் அரசு வள்ளலார் தபால் தலையை வெளியிட்டு சிறப்பித்தது.
முடிவுரை: இறைவனுக்கு எப்படி முடிவுரை எழுத முடியும். இந்த சிறிய கட்டுரைக்கு மட்டு மே இது முடிவுரை. வள்ளலார் ஒவ்வோர் இதய த்திலும் நீக்கமற வாழ்ந்து வருகிறார். வீதி தோறும் தர்ம சாலைகள் தோற்றுவிதார். மரணத்தை ஒழுக்கத்தால், நித்திய கரும விதிகளா ல், சாகாக் கல்வியால், தத்துவ நிக்கிரகத்தால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உதயமாகி இருக்கிறது வள்ளலார் என்ற சகாப்தத் தால்.! மாணி க்க வாசகரிடம் உருகி ஞானப் பாதையில் நடந்து, சைவ சித்தாந்த எல்லைகளைக் கடந்து, சன் மார்க்கம் என் னும் சிகரத்தை தொட்டவர் வள்ளலார்.
சிந்தைக்கு அருட்பெருஞ்சோதி என்றார். செயலுக்கு தனிப் பெருங் கருணை என் றார். சிந்தையின் ஞானத்தை செயலின் சக்தியாக மாற்ற அவர் அமைத்தது சத்திய ஞானசபை. ஜுவகாருண்யமே கடவுள் வழிபாடு என்ற சத்தியவாக்கின் பிரதிபலி ப்பே அவரது சத்திய தருமச் சாலை. சாதி, மத, சமயம் கடந்த சன் மார்க்கப் பாதையே சமரச, சுத்த, சன்மார்க்க சத்திய சங்கம். இந்த சரணத்தை இயற்றியது வள்ளலார். இதுவரை யாரும் கூறாதது; வாழ்ந்து காட்டாதது.
உயிர்களிடத்து அன்பு செய், பசிபோக்கு, தயவுகாட்டு அவற்றுக்கு மனதாலும் தீங்கு நினைக்காதே என்ற வள்ளலாரின் புதிய சிந்தனை கள், புதிய கண்ணோட்டங்கள் உலகம் முழுவதும் பரவினால் தீவிர வாதம் மறையும்; பயங்கரவாதம் அழியும்; உல கம் செழிப்படையும்.!
.

1 comment:

  1. http://sagakalvi.blogspot.in/2012/04/blog-post_25.html
    மாதந்தோறும் பூசம் கொண்டாடும் நீவீர்!
    தை பூசம் விழா கொண்டாடுகிறீர்! மகிழ்ச்சி!
    வைகாசி -11 தர்மசாலை விழா கொண்டாடி
    அன்னதானம் கொடுக்கின்றீர்! மிக்க மகிழ்ச்சி!

    புரட்டாசி சித்திரையை வள்ளலார் பிறந்தநாளை
    குரு பூஜையாக கொண்டாடாமல் விட்டீரே ஏன்?
    இனியாவது
    புரட்டாசி சித்திரை குரு பூஜை கொண்டாடுக!!
    மெய் அன்பர்களே
    அன்னதானம் செய்யும் மனித நேயம் மிக்கவர்களே!
    ஞானதானம் செய்து ஆன்மநேய ஒருமைப்பாடு கொள்க!

    உலககுரு - ஞானசற்குரு
    திருவருட் பிரகாச வள்ளலாருக்கு
    நாம் காட்டும் நன்றி
    நாம் ஆன்ம நேய ஒருமைப்பாடு உடையவர்
    ஆவதுதான்!

    ஞான சற்குரு சிவசெல்வராஜ்.
    தங்கஜோதி ஞானசபை
    கன்னியாகுமரி

    ReplyDelete